வாசகன் தாட்ஸ்... : S.Ra
எஸ்.ரா அளவுக்கு தமிழில் "எழுதித்தள்ளுகிற" எழுத்தாளர் சமகாலத்தில் யாருமில்லை. ஒரு நாளைக்கு இத்தனைப்பக்கம் என்று இலக்கு வைத்துக்கொள்வார் போல. அவர் அளவுக்கு ஈடு கொடுப்பதென்றால் ஆசானைச் சொல்லலாம். (வெண்முரசு...)
இது பிரச்சனை அல்ல. எஸ்.ரா ஏகப்பட்ட பிழை விடுகிறார் என்பதுதான் பிரச்சனை.ஆனால் அதைக் கண்டுபிடிக்கவோ சரிபார்க்கவோ அவரளவுக்கு தமிழில் எழுதுகிறவர்கள் யாருமில்லாதது அவரது பலம். தனித்திருக்கும் யானை போல....
சரித்திர சங்கதிகளில் மதன் எழுத்தின் வாசகனாக வளர்ந்த எனக்கு, எஸ்.ராவுக்குத் தாவும் போது இந்த சிக்கல் புரிந்தது. குறிப்பாக ஆண்டுகளில்... சொதப்பிக்குவிக்கிறார். ஒரு கட்டுரையின் ஒருபக்கத்தில் 1905எனக் குறிப்பிட்ட சம்பவத்தை அடுத்த பத்தியிலே 1907என்று குறிப்பிடுகிறார். (ம.பட்ட இந்தியா.பக்30-31) கு.அழகிரிசாமி பிறந்த ஆண்டு என்று அவரை 9வருடம் இளமையாக்கி விடுகிறார். (கதாவிலாசம்-பக்.136) இப்படி இன்னும் பல..
நீங்கள் எழுதிக்குடுங்க போதும், தடிமனா அட்டைபோட்டு,வித்துக் காசாக்கிடலாம் என்ற மனநிலையில் தான் பதிப்பகங்கள் இருக்கின்றன போலும். ஆறுபக்கம் எஸ்.ராவுக்கு.. அவர் என்னத்தை எழுதிக்கொடுத்தாலும் போடு என்று வெகுஜன இதழ்களும் முடிவுகட்டிவிட்டன.
இவைகூட “எனக்கு” சமீபத்திய சலிப்பான (சஞ்சாரம்) விவரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம். எனது இந்தியாவை ரெபரன்ஸ் புக்காக வாங்கி வைத்துக்கொண்டு இதுதான் சரித்திரம் என்று நம்பிப் படிக்கத் தொடங்கினால் நாமல்லவா கோமாளி.
-வாசகன்.
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது