Posts

Showing posts from December, 2017

கடிதம் 03 - இந்திரா கிறுக்கல்கள்

Image
                                                                                                                        இடம் : சென்னை,                                                                                                                         நாள் : 15-12-2017 அன்புள்ள இந்திரா கிறுக்கல்கள் அவர்களுக்கு, வணக்கம், இந்த வாரத்தின் இரண்டாம் நாளில் சென்னை சத்தியம் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்த ‘அருவி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நண்பர்கள் கவிமணி, யமுனைச் செல்வன் ஆகிய இருவரோடும் சென்றிருந்தேன். முன்பாகவே இதுபோலான இரண்டு திரையிடல்களிலும் கலந்துகொள்ள முடியாமலிருந்ததால் படம் பார்த்த பலரும் ‘அட்டகாசம்’ என்ற வார்த்தைக்கு மேல் எதையும் சொல்லாமல் விட்டது மேலும் ஒரு எந்துசியஸத்தை வளர்த்தெடுத்திருந்தது. ஒரு சமூகத்தின் பண்பாடு எத்தகையது என்பதை அறிந்துகொள்ளுவதற்கான உபாயம், பெண்பால் ஒருத்திக்கு அந்தச் சமூகம் எத்தகைய இடம் அளிக்கிறதோ அதுவே, அச் சமூகத்தின் பண்புக்கு அறிகுறி என்று சித்பவானந்தா எழுதிய மஹாபாரத நூலின் முன்னுரையில் எழுதியிருந்ததை நேற்றைக்கு இரவு வாசித்திருந்தே

கடிதம் 02 அருள்ராஜ் குமாரசாமிக்கு...

அன்பு அண்ணன் அருள்ராஜ் அவர்களுக்கு,   இந்த வாரத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை உங்களிடம் சொல்லவேண்டுமெனத் தோன்றியது. தமிழில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களை  வெளியீட்டுக்கு முன்பாக சினிமா,  பத்திரிகை, ஊடக பிரஜைகளுக்குத் திரையிட்டுக் காட்டுவதும், படம் பற்றி பொதுவெளியில் பேச்சு மற்றும் சலனத்தை உருவாக்குவது வெகுகாலமாக நடைபெறும் வழக்கமாகத்தான் இருந்துவருகிறது.  இந்த ‘ப்ரிவ்யூ ஷோ’ கலாசாரத்தில் புதிதாக இடம்பெற்றிருப்பவர்கள்  ‘இணையதள நண்பர்கள்’ எனும் புதிய கேட்டகரி. எனது பத்திரிகைத் துறை  நண்பர்கள் வழியாகச் சிலநேரங்கள் அடாபுடிகள் எதுவும் இல்லாமல் வெளியாகிற படங்களுக்கான டிக்கெட் முதல் பார்க்கிங் டோக்கன் வரை சிலநேரம் கிடைப்பதுண்டு. அவற்றை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறதுதான். இதுதவிர்த்து, தற்போது முகநூல் ஊடகம் வழியாக நண்பர்கள் பரிந்துரைந்த்து ப்ரிவ்யூ ஷோக்கள் பார்க்க வாய்ப்பமையும்போது ஒருவிஷயம் பயங்கர நெருடலாகிவிட்டது.   சமீபத்தில் ஒரு திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக நண்பர்களோடு பார்த்துவந்தோம். நிறைய சொதப்பல்களும், பெருவாரியாக இடங்களில் மேம்போக்காக நகர்த்தப்பட்ட காட்சிக

கடிதம் 01 - ஜீவாவுக்கு...

Image
அன்புள்ள ஜீவா, ஊருக்குப் போய்விட்டு வந்ததுபற்றி எழுதச் சொல்லிக் கேட்டிருந்தீர்கள். உண்மையைச் சொன்னால் நவம்பர் தொடங்கி இப்போதுவரை நாட்கள் முழுக்க நிறைய வேலைப் பளுவுடனே நகர்கிறது. கிடைத்த இடைவெளிகளில் தான் ஒன்றிரண்டு புத்தகங்கள் வாசிக்கிறேன். இடையே ஒரு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குப் போனதும், நம் ஜீவா படைப்பக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்காகத்தான். வள்ளியூரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை ஒரு குடும்ப விழாவாக மாற்றியிருந்தார் நண்பரும் நூலாசிரியருமான எழுத்தாளர் மு.வெங்கடேஷ்.  அவரை எனக்கு சொல்வனத்தில் எழுதியிருந்த சிறுகதை வழியாகத்தான் தெரியும். கூடவே, அவர் மாதவன் இளங்கோவின் நண்பர். (மாதவன் இளங்கோவும் நானும் ஒரே நேரத்தில் அகநாழிகையில் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தவர்கள்) வெங்கடேஷ் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்தபோது, அவரின் எளிமையான கதைசொல்லித் தனமும், திருநெல்வேலி வட்டார வழக்கும்  எனக்குப் பிடித்துப் போயிருந்தது. நம் படைப்பகத்திலே தொகுப்பு கொண்டுவருவோம் என்றதும் முழுமனதாகச் சம்மதித்திருந்தார்.  வள்ளியூருக்கும் எனக்கும் பெரிய தொடர்புகள் இல்லாவிட்டாலும் அந்த ஊ