Posts

Showing posts from October, 2015

வெட்கம் களைதல்...

Image
ஐந்தாவது வயது எப்படி பூர்த்தியானது என்று இப்போது கேட்டால் எப்படி நினைவிருக்கும். ஆனால் லதா மிஸ்ஸும், கிருபா மிஸ்ஸும் இன்றைக்கும் நினைவிருக்கிறார்கள். இந்த டீச்சர்களின் வளையல் வடிவ கம்மலை நீங்கள் யாரும் உங்கள் வயதில் கவனித்திருப்பீர்களா தெரியவில்லை. க்யூ என்று ஆங்கிலத்தில் எழுதும் போது லதாமிஸ் ஒரு வெட்டு வெட்டி இழுத்து கரும்பலகையில் ஒரு டொக் வைப்பதை ரசித்திருக்கிறேனென்றெல்லாம் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு பழக்கமிருந்தது உண்டு உறங்கும் போது பாயில் படுத்தாலும் சரி, மெத்தையில் படுத்தாலும் சரி... கால் தரையில் படவேண்டும். அதற்காகவே முதல் ஆளாக தரை ஒட்டிப் உறங்குவது. இடைஞ்சலாக இருக்கும் காலணிகள் வீடு திரும்பும் போது டிபன் கூடைக்குப் போயிருக்கும் என்பது தனிக்கதை. ஏகச் சுட்டித்தனம். பள்ளிக்கூடத்தில் தான். அந்த வயதில் புளியங்கொட்டையை மூக்கில் நுழைத்து அது சிக்கிக்கொள்ள அக்காளிடம் சண்டை என்றேனாம். இரண்டு நாள் உள்ளே கிடந்து பொதுமிப் போன புளியங்கொட்டையை வெளியில் எடுத்து, தோட்டச் செடி வெட்டும் கத்திரி போலொன்றைக் காட்டி இனி மூக்கில் எதையாவது திணிச்சே மூக்கை நறுக்கிருவேன் என்ற டாக்டர் கண்ணு

அது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை

Image
Suresh Raja Gtm  வீட்டில் மூத்தவனுக்கு நேத்தைக்குப் பிறந்தநாள். அப்பா இருந்தவரைக்கும் பிறந்தநாள் என்பதில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் போனாலும், காலையிலே எழுந்து ஆற்றங்கரையில் குளித்துவிட்டு, பேராச்சியம்மன் கோயிலுக்குப் போய் விழுந்துகும்பிட்டு, அக்காள் கையில் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு அப்பா முன்னால் போய் நிற்பான். கடையில் சீனி வாங்க வந்த செண்பகம் மையினிக்கு பழைய நோட்டுத்தாளை கூம்பாய் உருட்டி பொட்டலம் மடித்துக் கொண்டிருப்பார். அண்ணனைப் பார்த்தவுடன் ஒரு இணுக்கு புன்னகைத்துவிட்டு,  “வேலை உண்டா இன்னைக்கு... மதியம் வீட்டுக்கு சாப்ட வந்துரு. அந்த டப்பால காசிருக்கும் எடுத்துக்கோ” என்பார். அத்தோடு சரி. அப்பாவுக்கும் அண்ணனுக்குமான உரையாடல்கள் சின்னஞ்சிறியவை. அதை தூரத்தில் இருந்து கேட்பதே ஒரு வேடிக்கையாக இருக்கும். என்ன சொல்லவேண்டும் என்பதை இரண்டுபேரும் மனசுக்குள்ளே உணர்த்திக் கொள்வார்கள். “மதியம் பாயாசம் வை கோதை” என்று அவர் சொல்லும் முன்னே அம்மா முந்திரி டப்பாவை கடையில் உருட்டிக்கொண்டிருப்பார். அந்தச் சின்ன மளிகைக்கடைக்குள் தான் அப்பாவைச் சந்திக்கும் பொழுதுகள் அடிக்கடி வாய்க்கும்

எங்கதெ - இமையம்

Image
நேற்றைக்கு கணையாழி வாசகர் வட்டம் அமர்வுக்குச் சென்றிருந்தோம் நானும், நண்பரும். "எங்கதெ" நாவல் குறித்துப் பேசினார்கள். அந்த நாவலே விநாயகம் என்ற தனிமனிதன் தன்னந்தனியே பேசிக்கொண்டே போவதால் அதைப்பற்றித் தனியாகப் பேச ஒன்றும் சிக்காது என்பதுதான் உண்மை. கூடியமட்டும் கதையின் காலகட்டம், அண்ணன் தங்கை உறவுகள் இதையெல்லாம் மெச்சலாம். ஊருக்குள் இட்டுக்கட்டிப் பேசுதல் என்பார்களே! அப்படித்தான் இந்த நாவலை வாசித்து நமக்கு என்ன தோன்றியதோ அது எல்லாம் கருத்துகள். என்ன இருக்கனும் என்று நினைக்கிறோமோ அதி எல்லாம் விமர்சனங்கள் என்று ஆகி விடுகிறது. பேசுபவர்களிடையே, இது ஒரு "நீண்ட புலம்பல்" என்ற வார்த்தையை நிறைய தடவை இலைமறையாகக் குறிப்பிட்டதைக் கேட்கமுடிந்தது. எனக்குச் சந்தேகமாக இருந்தது வீட்டுக்குத் திரும்பினதும் திரும்ப எடுத்து வாசித்துப் பார்த்தேன் புலம்பல் சலிக்காமல் கேட்க முடிந்தது. சாதாரணமாக புலம்பல்களை இப்படி திரும்பத் திரும்ப கேட்டால் எரிச்சல் வந்துவிடும் இங்கே அது நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கமலா ருசிக்கிறாள். அவ்வளவுதான் வேறு சொல்ல ஒண்ணுமில்லை. விநாயகத்தின் குரலில்

ஊர்நாட்டானின் பக்ரீத்

Image
ரம்ஜான் சின்ன பெருநாள். பக்ரீத்துதான் பெரிய பெருநாள் அப்படின்னு உசேன் தான் சொல்லுவான். தாஹீர் , சிக்கந்தர் உசேன் எல்லாவனும் பள்ளிவாசல் தெருக்காரனுங்க. எங்களது தைக்கா தெரு. ஒண்ணுமண்ணா பள்ளிக்கூடத்துல படிச்சவனுங்கதான் எல்லாவனும். இன்னைக்கு ஒருத்தன் செல்போன் கடை, ஒருத்தன் ஜவுளி யாவாரம், வாட்ச் கம்பேனின்னு ஆளுக்கொரு தொழில்ன்னு ஆகிட்டானுங்க. ரம்ஜான் பக்ரித் அப்பொல்லாம் வெள்ளைல கட்டம் போட்ட சாரத்தை கட்டிட்டு வந்து நிப்பானுங்க. நமக்கு வேடிக்கையாத்தான் படும். எம்மா எனக்கும் சாரம் தாயேன்னு கேட்டா வெளக்கமாறு தான் வந்து விழும். முஸ்லீம் பண்டிகையப்போ நமக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் லீவுன்றதோட சரி. அவங்களுக்கு அப்டி இல்லல்லா... அப்ப எங்ககூடி தீபாவளி பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்ற பழக்கம்லாம். பரிட்சைக்கு நடுவுல லீவு விட்டதே பெருசு. அதனால எல்லா பயல்களும் ஆத்தங்கரையிலயும், எம்.டி.டி பள்ளிக்கூட கிரவுண்ட்லயும் கிரிக்கெட் விளையாடிட்டு கிடப்போம். அந்த மஞ்ச கட்டடம் செவுத்துல த்ரூவா பந்து பட்டா சிக்ஸு. தப்பித்தவறி ஜன்னல் உள்ள போயிடுச்சுன்னா அவுட்டு. ஆத்தங்கரையில் இந்த பிரச்சனை இல்ல. எங்க அடிச்சாலும் ர

முற்றத்து மரத்தை வெட்டியது போல...

Image
"முற்றத்து மரத்தை வெட்டியதுபோல" என்றெழுதிய கலாப்ரியா அவர்களின் வார்த்தை கண்ணில் பட்டது. எனக்கு தயாபரன் தெரு காம்பவுண்டு வாசம் நினைப்புக்கு வந்தது. யசோதா இந்த கண்ணனை உரல்ல கட்டிவச்சிட இரண்டு மரங்களுககு நடூல உரலைச் சிக்க வைச்சி தப்பிச்சுக்குவாம்லா கிரிமினல் பய. அப்படி ஒரு ரெட்ட மரம் எங்க வீட்டு முத்தத்தில நின்னுச்சி. மரத்துக்கு செட்டுக்குச் சேக்காளியா குப்புற கவுத்துன கல்லுரல் ஒன்னும் அங்கயே கெடக்கும். ஆச்சி சொளவு புடைக்கும் போது கால்நீட்டி மரத்துபோச்சுன்னா. ஒரல்லதான் வந்து ஒக்காரும். அந்த மரங்க நிழலடில தான் அதுக்கு பொழுதே கரையும். ஆச்சிக்குத் தொண ஆடும் மாடும். முக்காவாசி முங்கிக்கெடந்த கல்லுரலை கமத்திப் போட நிறையநாள் உருண்டு புரண்டு பார்த்தும் ம்ஹூம் அசையலையே.. சரி ஒரலதான் அசைக்க முடில இந்த மரத்துல ரெண்டுல ஒன்ன கமத்தி போட்ருவமான்னு கூட நெனப்பு. செவலை கன்னுக்குட்டியை ஒரல்லேதான் கட்டிப்போடுறது எப்பவும். முணுமணிக்கு கறவைக்கு ஆள் வந்தாப் போதும் மடில முட்டி பால்குடிக்க கிடந்து குதியா குதிக்கும். கருவக்காயா தின்னு வளந்த குட்டியை சுழிசரியில்லைன்னு சந்தைல வித்தபெறகு முத்தத்

மொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி

Image
மக்கள் தொலைக்காட்சி மொழிவது அறம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். அடுக்குமாடிக் குடியிறுப்புகள் பற்றினத் தலைப்பு. இந்த கேட்டட் கம்யூனிட்டி மீதுள்ள வெறுப்பை எல்லாம் கொட்டித்தீர்த்துவிடலாம் தான். ஆனால் உண்மைக்கு மிக நெருக்கமாய் நிறைய சங்கதிகள் அலசப்பட்டது. சமத்துவம் இருக்கிறது, வாழும் காலத்திலே சொந்தவீடு கனவு நிஜமாகி இருக்கிறது என்ற பாசிட்டிவ் பக்கங்களுக்குப் பின்னே இங்கே சுதந்திரமில்லை என்று மூன்றுவித கருத்துகளில் எனக்கு மனித உணர்வு மாற்றத்தைப் பிரதிபலிக்கு வண்ணமமைந்த ”அடுக்குமாடிக் குடியிருப்புகள் மனிதர்களைத் தீவுகளாக்கி விடுகின்றன" என்ற தலைப்பு பொறுத்தமாக அமைந்தது. அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பிரச்சனைகளை எடுத்து அடுக்கி வைப்பதென்பது அடுத்தநாளே அத்தனையும் இடித்துத் தள்ளிவிட்டு தனிவீடுகள் கட்டிக்கொள்ளுங்கள் என்று முட்டாள்தனமாகப் பேசுவதல்ல. தவிர, நகரம் கிராமங்களைப் பிரதிபலிக்கவேண்டும் என்று வலிக்கட்டாயமாகத் திணிப்பதுமல்ல. நாம் மனிதர்கள், நமக்கு வீடு என்பது வெறும் உய்விடம் அல்ல அது உணர்வுகளைக் கற்றுத்தரும் கூடம். தலைமுறைதலைமுறையாக வளர்த்தெடுத்த நம் மரபும

வாசிப்பெனப் படுவது...

Image
பத்துவருசம் முன்னாடி (அப்போ 16வயசுதான்) பெரிய வாசிப்பனுபவம்லாம் கிடையாது. ஒரு பத்து எழுத்தாளர் பேரு சொல்லுன்னு கேட்டுருந்தா பேந்த பேந்த முளிச்சிருப்பேன்.வாசிக்கிறது, எழுதுறது எல்லாமே இந்த நாலைஞ்சு வருசமாத்தான். பள்ளிக்கூடத்துக்கு வெளியதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சுஜாதாவும் மதனும் தான் முதல் வாத்தியார்கள். வரலாறுமேல இவ்ளோ ஈடுபாடா நமக்குன்னு தோணுற அளவுக்கு சரித்திரத்தில் மூக்கை நுழைச்சிருக்கேன். உண்மையச் சொல்லனும்ன்னா எல்லா பாடத்திலும் 80, 95 வாங்கிட்டு சோசியல் சைன்ஸ்ல 77மார்க் வாங்கினபய நான். நம்ம மண்ணோட வரலாறைப் படிக்கப் படிக்கத்தான் அறிவு ஊறும்ன்னு விடாப்பிடியா நம்பிக்கை வச்சிருக்கேன். வரலாறு எழுதின புத்தகத்தில மட்டும் இல்ல பாக்குற மனுசங்ககிட்டயும் இருக்குன்னு ஒருகட்டத்தில் அறிவுக்கு பட்டப்போதான் கூச்சத்தைவிட்டு மனுசங்களோடு பழக ஆரம்பிச்சது. எஸ்.ரா ஒரு மாட்டுவியாபாரிக்கிட்ட கதை கேக்குறதுக்காக நாலுமைல் தூரம் அவர்கூடவே மாட்டப்பத்திட்டுப் போனதாச் சொல்லியிருப்பார் கதாவிலாசத்தில. எனக்குங்கூட அந்தக் கிறுக்குத்தனம் இருந்துச்சி. நீச்சல் கத்துக்கனும்ன்னா ஆத்துல இறங்கித்தான ஆவணும்

ரஜினி முருகன்

Image
விடுமுறை நாட்களில்  ஒருகூட்டம் தெக்குத்தெரு குளத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும். கூட்டத்தில் இளசுகளுக்கிடையே கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் முதிர்ச்சியாக ஒருத்தர் கட்டம்போட்ட சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு கிரவுண்டுக்குள் ஃபீல்டிங் நிற்பாரென்றால் எங்கள் ஊரில் அவருக்குப் பெயர் மளிகைக்கடை முருகன்.  ஏரியாமுழுக்க ரஜினி முருகன். கீழவளவில் ராணி மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். ராணியக்கா இல்லாதபோது ஏரியா விடலைகள் ஒன்றுகூடும் இடம் அவர் கடைதான். முன்னாள் “வீரா ரஜினி ரசிகர்மன்ற கிளைச் செயலாளர். வீரா படம் ரிலீஸாகும் போது பிறந்திருக்கவே செய்யாத பொடியன்களோடு இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது வீட்டுக்காரம்மாளின் பெரிய குற்றச்சாட்டு. முருகன் அண்ணனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டும் இக்னேசியஸில் ஏழாவதும் ஐந்தாவதும், படிக்கிறது. ரெண்டும் பொண்ணு என்பதில் அவருக்கு ஏக சந்தோசம். கேட்டால்  “தலைவருக்கும் ரெண்டுமே பொண்ணுங்கதான்” என்பார். ராணியக்காவை கடையில் உட்கார வைத்து, “குளத்தாங்கரை வரை போய்ட்டு வந்துடுறேன்” என்று புளுகிவிட்டு எங்களோடு வந்து பீல்டிங் நிற்பார். உடும்புமாதிரி க்ள

நினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்

எனக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. பார்த்து அறிமுகமாகி, பழகினவர்களாக (நட்புவட்டம் அல்லாமல்) இருந்தாலும் பெயர்களும் முகமும் மனதில் நிற்கவே நிற்காது. கீதா பெரியசாமி என்றால் கீதா ராமசாமியா கீதா கந்தசாமியா  என்று ஒரு குழப்பம் வந்து தொலைப்பதால் அதிகபட்சம் யார் முகம்கொடுத்துப் பேசினாலும் சிரித்தமுகத்துடன் வணக்கம் சொல்லி, நலம் கேட்டுத் தப்பித்துவிடுவது. நண்பன் கிரி இந்த விசயத்தில் ஸ்கேனருக்கே டஃப் கொடுப்பான். ஒருதடவைப் பார்த்துவிட்டால் தி.நகர் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தாலும் சரியாக அடையாளம் சொல்வான். ஆச்சர்யமாக இருக்கும். ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது என்கதை அம்பேல். நேற்றைக்குக் கூட நாறும்பூநாதன் அவர்களின் நூல்வெளியீட்டு அரங்கில் நுழைந்ததும் அண்ணன் ஒருவர் அன்பொழுக வரவேற்று கை குலுக்கினார். பதிலுக்கு நானும் துளியும் தாமதிக்காமல் தெரிந்ததுபோல பேசிவிட்டு நகர்ந்தேன். தெய்வமே மன்னிச்சிடுங்க இங்க எங்கயாவது நீங்க என்னை அல்லது இந்தப்பதிவை பார்த்துட்டு இருக்கலாம். எனக்கு சத்தியமாக உங்களை நினைவில்லை. மன்னிக்கனும். (இந்தப்பதிவை முகநூலில் எழுதிய அன்றைக்கு அவரே வாசித்துத் தன்னை அடையாளம் சொல்ல

குற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்

Image
குற்றம் கடிதல் ஒரு நன்கு சமைக்கத்தெரிந்த வேலையாளின் வெங்காயம் நறுக்கும் கத்தி போன்ற ஷார்ப்பான படம். படம் ஆரம்பித்தது முதல்பாதி வரையான ஒவ்வொரு பிரேமையும் இண்டர்லிங்குகளால் காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் பிடித்திருந்தது. நியாயதர்மங்கள், சமூகத்துக்கு கருத்து என்றெல்லாம் தான் எதுவும் பேசாமல் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார். ஒரு பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர். அடிவாங்கி மயக்கம்போட்டு விழுந்துவிடும் மாணவன் இந்த ஒற்றைத் திரியில் ஜோதி எரிகிறது. எனக்கு ஆரண்யகாண்டத்திற்குப் பிறகு ஒரு இடத்தில் கூட தொய்வுகொடுக்காமல் நகரும் படமாகக் குற்றம் கடிதல் இருந்தது. படத்தின் கரு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமானதாக உருத்தலைக் கொடுப்பது நிச்சயம். எம்புள்ளைய அடிச்சு உதைச்சாச்சும் நல்லா படிக்க வச்சிருங்கம்மா என்று ஆசிரியையிடம் கேட்டுநிற்கும் பெற்றோர்கள் காணாமல்போய்விட்டார்கள். இன்றைக்குப் பிள்ளைகள் ஒரு குடும்பச் சொத்து அந்தஸ்தில் வளர்பவர்கள். என்னை வாத்தியார் அடிச்சுட்டார்ன்னு எங்கப்பா ஸ்கூலுக்கே வந்து சண்டை போட்டார் என்ற பெருமைபேசிகளைப் பார்க்கும்போது, பொறாமையாக இருக்கும். "

வாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்

Image
அரவிந்தன் எழுதிய பொன்னகரம் நாவலினை வாசிக்க நேர்ந்தது. சென்னை என்ற நிலத்தின் பழைய அடையாளங்களைப் பேசும் படைப்புகளில் இழையோடும் மக்களின் பிரிவினையே இந்நாவலிலும் மையமாகிறது. சென்னையின் மொழியை எழுத்தில் விவரிக்கும்போது அதன் இயல்பான வேகத்தில் பயணிக்கும் வேலையை பொன்னகரம் சிறப்பாகச் செய்திருக்கிறது. சில இடங்களில் தடுமாற்றங்களும் உண்டு. குடியாத்தத்திலிருந்து தனது அத்தையின் மகன் முத்துவை மணம்முடித்து சென்னைக்கு வரும் பார்வதியின் பார்வையில் தொடங்கி, ஜகதாலன் என்கிற ஜகா, குரு என்கிற மாஞ்சா குரு, வரதன், ராசுக்குட்டி, பெருமாள், பாபு, செண்பகம் லட்சுமியம்மா என்று ஒவ்வொருவரின் பேச்சுகள், செயல்கள் அதன் எதிர்வினைகளினூடாக நாவல் பயணிக்கிறது. சென்னையினைக் கொலைக்களமாகக் காட்டும் சினிமாத்தனம்தான் நாவலில் அப்பட்டமாகத் தெரிகிறது. கபடி விளையாட்டில் பின்னும் ஜகா பற்றிய விவரிப்புகளில் இருக்கும் ஆழம் இடைப்பட்ட அத்தியாயங்களில் சோடை போகிறது. சுருங்கச் சொன்னால் தயாரிப்பாளருக்கு ஒன் லைன் ஸ்டோரி சொல்வதுபோல தட்டையான விவரணை. உறை சாராயம், பொட்டலம் என்று தொழில்போட்டிகளால் அடித்துக் கொள்ளும் பார்டர் தோட்டம், பகவ

ஆச்சி மனோரமா

Image
நேற்றைக்கு காலையில் ஒரு கனவு. சொந்த ஊரில் ஒரு திருமணத்திற்குப் போயிருக்கிறேன். ஏதோ கலாட்டாவில் திருமணம் நிற்கிறது. கடைசியில் இந்த கார்த்திக் புகழேந்தியை மாப்பிள்ளையாக்கி விடுகிறார்கள். தூங்கி முழித்ததும் காயத்திரி யிடம் கனவைச் சொன்னதும்,"தூக்கிப் போட்டு மிதிப்பேன்" என்றது. அது சரி அவாளுக்கு அவா பிரச்சனை. கதையின் கான்செப்ட் தேவர்மகனில் சுட்டதாகப் பட்டது. அட வெக்கங்கெட்ட கனவே நீ கமலிடமே காப்பியடிக்கிறாயா என்று ஒரே தர்மசங்கடம். ஆனால் கனவில் தாலி எடுத்துக் கொடுத்தது ஆச்சி மனோரமா. தேவர் மகனில் ஏது ஆச்சி என்று நினைத்தபடி விசயத்தை விட்டுவிட்டேன். நள்ளிரவில் ஆச்சி இறந்ததாகச் செய்தி வந்தது. இல்லை இவனுங்க வதந்தியா இருக்கும் என்றேன் பதிலுக்கு. கூடவே கனவைச் சொன்னதும். கல்யாணக் கனவு கண்டா சாவு விழும் தானே என்றாள். சாவு விழுந்தால் தானே கல்யாணக் கனவு வரும் என்று குழம்பினேன். இப்பவும் ஜாம் பஜார் முனையில் வண்டியைத் திருப்பும் போதெல்லாம். "நா ஜாம்பேட்டை ஜக்கு ; நீ சைதாப்பேட்டை கொக்கு" என்ற பாட்டை முணுமுணுக்காமல் இருந்ததில்லை. தாய்க்கிளவி நிஜமாவே இறந்து போச்சி என்பது மண்ட

வாசகன் தாட்ஸ்... : S.Ra

எஸ்.ரா அளவுக்கு தமிழில் "எழுதித்தள்ளுகிற" எழுத்தாளர் சமகாலத்தில் யாருமில்லை. ஒரு நாளைக்கு இத்தனைப்பக்கம் என்று இலக்கு வைத்துக்கொள்வார் போல. அவர் அளவுக்கு ஈடு கொடுப்பதென்றால் ஆசானைச் சொல்லலாம். (வெண்முரசு...) இது பிரச்சனை அல்ல. எஸ்.ரா ஏகப்பட்ட பிழை விடுகிறார் என்பதுதான் பிரச்சனை.ஆனால் அதைக் கண்டுபிடிக்கவோ சரிபார்க்கவோ அவரளவுக்கு தமிழில் எழுதுகிறவர்கள் யாருமில்லாதது அவரது பலம். தனித்திருக்கும் யானை போல.... சரித்திர சங்கதிகளில் மதன் எழுத்தின் வாசகனாக வளர்ந்த எனக்கு, எஸ்.ராவுக்குத் தாவும் போது இந்த சிக்கல் புரிந்தது. குறிப்பாக ஆண்டுகளில்... சொதப்பிக்குவிக்கிறார். ஒரு கட்டுரையின் ஒருபக்கத்தில் 1905எனக் குறிப்பிட்ட சம்பவத்தை அடுத்த பத்தியிலே 1907என்று குறிப்பிடுகிறார். (ம.பட்ட இந்தியா.பக்30-31) கு.அழகிரிசாமி பிறந்த ஆண்டு என்று அவரை 9வருடம் இளமையாக்கி விடுகிறார். (கதாவிலாசம்-பக்.136) இப்படி இன்னும் பல.. நீங்கள் எழுதிக்குடுங்க போதும், தடிமனா அட்டைபோட்டு,வித்துக் காசாக்கிடலாம் என்ற மனநிலையில் தான் பதிப்பகங்கள் இருக்கின்றன போலும். ஆறுபக்கம் எஸ்.ராவுக்கு.. அவர் என்னத்தை எழுதிக்க

நெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங்கம்.

Image
நேரங்காலம் தெரியாமல் 12மணிக்குப் பசியெடுத்தது. கேண்டீனுக்குப் போனால் பிரெட் ஆம்லெட் சாப்பிடலாம். வறட்சியான சப்பாத்திக்கு அதுமேல். நண்பனை கூட்டிக்கொண்டு அலுவலகமாடியில் உள்ள கேண்டீனுக்குச் சென்றேன். கேண்டீன்காரர் கடவுளின் தேசத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் இளையராஜா ரசிகராக இருப்பார் போல... மெல்லிசைகளால் இழைத்துக் கொண்டிருந்தார். குடகுமலை காற்றில் வரும் பாட்டுக்கேட்குதா ... ஒலித்துக்கொண்டிருக்கும் போது மூன்று யுவதிகளும் கேண்டீனுக்கு வந்திருந்தார்கள். என்னே ரம்மியம். மூவரில் வெண்ணிற ஆடை அணிந்திருந்த பெண்மீது கண்கள் திரும்பியது. கொஞ்சமாக ரசித்துவிட்டு,அவர்கள் நகர்ந்து சென்றதும் நண்பனிடம் சொன்னேன். அந்த வெள்ளைநிற ஆடையிலிருந்த பெண் நல்ல அழகில்லையா என்று. அட! நானும் அவரைத்தான் கவனித்தேன் என்றார். கவனிக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம். மோசமான கம்மெண்ட்களோ, தேவையில்லாத வெளிப்படுத்தலோ இல்லாமல் ஒரு குழந்தையைக் கடந்துபோவது போலான கவனித்தல் இது. அதென்னமோ இந்த மண்ணின் அடையாளத்தோடு எளிமையான அணிகலன்களோடு எதிர்படும் ஒரு பெண் சட்டென்று ஈர்த்துவிடுகிறாள். அணிகலன் என்றதும் நேற்றைக்கு பார்த்த நெடுநல்வாடை

கொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்

Image
படம் : நன்றி “சொல்வனம்” கொலுவைத்தல் பற்றி பேச்சுகள் கேட்டதும் சின்னவயது நாட்கள் கன்னாபின்னாவென்று மனதிலெழுகிறது. அப்போது பாளையங்கோட்டை தயாபரன் தெருவில் எங்கள் வீடிருந்தது. வீட்டுக்குப் பக்கமே பாளையங்கால்வாய் சுழித்து ஓடும். வைக்கோல்போர்களுக்கு மேலேறி குதித்து விளையாடி, கண்பொத்தி, நாடுபிரித்து, கிளிச்சேட்டை பிள்ளைகளின் ஜடை இழுத்துவிட்டு , திருடன் போலீசெல்லாம் ஆடிக்கொண்டிருக்கும் சுழியன்கள் எல்லாம் பஜனையும் பழமுமாகத் திரியும் மாலைப் பொழுது இந்த கொலு காலங்களில் அமையும். சபரிமலைக்குப் போகும் ஐயப்பமார்களின் வீட்டில் மெய்யுருகப் பாடின பழக்கத்தில் கொலுவீடுகளுக்குப் போனால், அதத் தொடாதே இதைத் தொடாதே என்று எச்சரிக்கை கொடுத்தே எரிச்சல் கிளப்புவார்கள். எங்கள் வளவில் தங்கமீனா வீடு கொஞ்சம் வசதியானது. அவள் ஆச்சியும் நமக்கொரு கதைசொல்லி. உழுந்து திருக்கையை சுத்திக்கொண்டே வேதாளக்கதைசொல்லி விடுகதை போட்டு உடைப்பாள். தங்கமீனா வீட்டில் கொலு வைத்திருந்த காலத்தில், பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவள் வீடே கதியாகக் கிடப்பது. மரப்பாச்சி, களிமண் பொம்மைகளை எல்லாம் கொலுப்படியில் வெள்ளைத்துணி போட்டு அடுக்

இலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா

Image
"இலை உதிர்வதைப் போல" நூல்வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட நிகழ்வையே நிறைய எழுதியிருக்க வேண்டும். தவறிப்போனது. இரா.நாறும்பூநாதன் அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பினை நூல்வனம் -மணிகண்டன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். நேற்றைக்கு மாலை நேரில் சந்தித்தபோது (இ.உ.போ) புத்தகத்தின் பிரதியினை அவரிடம் பெற்றுக்கொண்டேன். கையில் வாங்கின இரவிலே படிக்கத்தொடங்கி இப்போதுதான் முடித்தேன். "தன் 55ஆண்டுகால சேக்காளி உதயசங்கருக்கு.." என்றெழுதிப் போகும் நாறும்பூநாதன் அவகளுடைய கதைகளில் கரிசல் மண்வாசம் மட்டுமில்லை மனிதர்களின் சுவாசமும், பவளமல்லி வாசமும், கிழவிகளின் (ஆச்சி) நேசமும் செறிந்துகிடக்கின்றன. இந்த இருபத்தைந்து கதைகளில் பொதிந்து கிடக்கும் "சொற்களை" மட்டும் திரும்பத்திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கழுதைபிரட்டி, சீவம், கூழ்வத்தல், கொழுப்பெடுத்த மூதி இந்தமாதிரியான தெக்கத்தி மண்ணுக்கேயுரியச் சொற்களைத்தான் சொல்கிறேன். "சில சொற்களை எல்லாம் பல காலங்களுக்குப் பிறகு வாசிக்கிறேன்" என்று வெளியீட்டு விழாவில் சுகா அண்ணன் சொன்னமாதிரி... எப்போதோ கேட்ட சொற்கள

தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது

Image
கவிஞர் விக்ரமாதித்யன் நம்பிராஜனை, அவரது கவிதைகளை,நவீன கவிதைகள் குறித்தான அவர் பார்வையை இன்றைக்குக் கிறுக்குபவர்கள் நிச்சயம் வாசிக்கணும். மு.சுயம்புலிங்கம், அஷ்டவக்கிரன்,எம்.யுவன், குவளைக்கண்ணன், பிரான்சிஸ் கிருபா, ஆசை,சி.மோகன், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, சமயவேல், யூமாவாசுகி, யவனிகா ஸ்ரீராம், ஸ்ரீநேசன், என்.டி.ராஜ்குமார், ஷங்கர் சுப்பிரமணியன், ஆர்.மகாதேவன், ராணிதிலக், கண்டராதித்தன்,பழநிவேள், கோகுலக்கண்ணன், அகச்சேரன், முக்கியமாய் கைலாஷ் சிவன் கவிதைகளைப் பற்றி விக்கிரமாதித்யன் வார்த்தைகளில் படிக்கவேணும். நறுக்குத் தெறித்தாற் போல எழுதுவார். இன்னின்னது இன்னின்ன மாதிரியானதென்பார். பிழைவிட்டால் போய் அ.கி.பரந்தாமனாரின், "நல்லதமிழில் எழுதுவது எப்படி" படிக்கச் சொல்வார். விக்கிரமாதித்யன் போல் நவீன கவிதைகளைக் கொண்டாடுகிறவரும், வாசிக்கிறவரும் இல்லை. எழுதுகிறவர்கள்தான் தண்ணிபட்டபாடு. நக்கீரன் பதிப்பில் வந்த "தீயின் விளைவாகச் சொல்பிறக்கிறது" வாசித்துக் கொண்டிருக்கிறேன். கார்த்திக் புகழேந்தி 15-10-2015

புத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்

Image
அக்காள் பிறக்கையில் முருகன்குறிச்சி அன்னை வேளாங்கண்ணியில் வைத்துப் பேறுகாலம் பார்க்கும் அளவுக்கு கையில் கொஞ்சம் வசதி இருந்திருக்கிறது. மூத்தது எப்போதும் பொண்ணாய்த்தான் பிறக்கும் எங்கள் வீட்டில். அதுவும் எல்லாம் பிறப்பிலும் வளர்ப்பிலும் சீமாட்டிகள் நான் இரண்டாமவன். பெரியப்பன் சித்தப்பன் பிள்ளைகளோடு கணக்குப் பார்த்தாலும் கடைக்குட்டியும் கூட. நம் பிறப்பு வீட்டில் நிகழ்ந்தது. ஒரு நாலு முழ வேட்டியும், கருப்பு கசாயமும், கொஞ்சம் வென்னீரும் ஒரு புது ப்ளேடும் தான் என் பிறப்புக்கு மொத்தச் செலவு. தேதியை மூணு நாள் தள்ளி பிறப்புச் சான்றிதழில் பதிந்ததால் அதை மாற்றத்தான் பேறுகாலச் செலவைவிட அதிகம் பிடித்தது. இரண்டாவது பிள்ளைகள் எப்போதுமே செலவு வைக்காத பிள்ளைகள். கடைசியாக நான்காவது படிக்கும் போது ஒரு விபத்து சிகிச்சைக்காக ஆசுபத்திரிக்குப் போனது. மற்றபடி காய்ச்சல், தலைவலி என்று எந்த சுகவீன காரணத்துக்கும் ஆசுபத்திரி பக்கம் தலைவைத்துப் படுத்ததில்லை. ரத்ததானம் உபகார காரியங்கள் வேறு கதை. அக்காளுக்கு இரண்டும் பொண். மூத்தவளுக்கு ஊரேகூட்டி விருந்துவைத்து பேர் வைத்துவிட்டு. இரண்டாவது பிள்ளைக்கு "

குடங்கள்

Image
படம் : கார்த்திக்புகழேந்தி | இடம்: இடைச்செவல்  "ரோஜாப்பூ போட்ட குடம் நம்ம வீட்டு குடம் ", " குக்கெர் கேஸ்கெட்டை விளிம்புக்குள் சுத்தியிருந்தால் அது மேல்வீட்டு ராணியக்கா குடம்" இப்படி அடையாளங்கள் வைத்திருப்போம். ப்ளாஸ்டிக் குடங்களின் ஆயுள் எத்தனைகாலம் என்றெல்லாம் தெரியாது. வண்ணச்சாயம் தீர்ந்து வெளுப்பு வெட்டைகள் விழும்போது புதுக்குடம் குடிவந்திருக்கும் வீட்டில். சில்வர் குடம் கீழே போட்டு நெளித்த அன்றைக்குத்தான் உள்ளே இரும்பு குண்டுகள்தான் கிடந்து இந்தச் சத்தம் போடுகிறது என்று கண்டுபிடித்தது. அன்றைக்கு காதில் ஒய்ய்ய்ய்ய்ங். பித்தளை குடத்தை வெறும்குடமாகத் தூக்கவே ஒருசெம்பு பால் குடிக்கவேண்டும். நமக்கு வசதி எடைகுறைந்த/எடையில்லாத ப்ளாஸ்டிக் குடங்கள் தான். இடுப்பில் வைத்து குடம் தூக்கும் ரத்னா, திலகா, வள்ளிகளைப் பார்க்கும்போது, இவங்களால மட்டும் எப்படி முடியுதென்று நினைப்பேன். குடம் தூக்குவதில் நாம் பாகுபலி ஸ்டைல் ஆசாமி. பத்து குடம் தண்ணி எடுத்து முடிப்பதுக்குள் சட்டையெல்லாம் சதசதவென்றாகிடும். பின்னாளில் அதுவே ஒரு போட்டியாகி இருந்தது. யார் கம்மியா நனைஞ்சிருக்க

நா வானமாமலை

Image
தயாபரன் தெருவின் முடிவில் பாளையங்கோட்டை, திருச்செந்தூர் ரோடு. ரோட்டுக்கு இந்தப்பக்கம் தீபம் டீக்கடை. அந்தப்பக்கம் வானமாமலை டுட்டோரியல் பஸ்டாப். மஞ்சள் காவி அடித்த பழைய காரைக்கட்டிடம்  அது. வானமாமலை முடுக்கு, வானமாமலை பஸ் ஸ்டாப் என்றுதான் அந்தப்பகுதிக்கு முன்பெயர் இருக்கும். அப்போது வானமாமலைன்னா யாரென்றெல்லாம் தெரியாது. அதே சந்தில் கால்கள் தேய பள்ளிக்கூடத்திற்கு நடந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் வானமாமலை கட்டிடத்திற்கு அடையாளம் தெரியாத ஆட்டோக்காரரால் மோதிவீசப்பட்டு தாடையில் நாலு தையல், வலதுகாதுக்குப் பின்பக்கம் ஐந்து தையல் போட்டிருக்கிறேன். அதாவது ரத்தம் சிந்தி பந்தமேற்பட்ட  இடம். வலியெல்லாம் பெரிதாக நினைவில்லை.  தையலுக்கு போடும் முன், ஊசியைக்காட்டி மிரட்டின விக்டர் துரை ராஜ் டாக்டரைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து தலைமை ஆசிரியர் சகிதமாக மொத்தப்பள்ளிக்கூடமே வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போன அன்றைக்கு கொடுத்துவிட்டுப்போன பிஸ்கெட் பாக்கெட்டை என்னால் தின்ன முடியாதபடிக்கு தாடையில் கட்டுக் கட்டியிருந்ததைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை. விஷயம் எ

ஈரம்காயாத டவுசர்

Image
திசைகள் பழக்கப்படாத வயதில் வடக்கே என்றால் மூலமடையைச் சொல்வார்கள், ராஜா குடியிறுப்பு, மூளிக்குளம், வெள்ளக்கோயில், பாளையங்கோட்டூர் பகுதிகளுக்கு வாய்க்கால் தண்ணீரை மாற்றி அனுப்பும் மடை(மூலம்) இந்த குளம் என்பதால் அப்படி ஒரு பெயர். மடையிலிருந்து வயலுக்குப் பாயும் ஓடைதான் எங்கள் பெரிய அழிச்சாட்டியங்களுக்கான இடம். குற்றாலத்து ஆகாய கங்கைபோல நீராவி பொங்க குளத்திலிருந்து மடைவழியே வயலுக்குப்பாயும் ஓடையில் நீர்தொட்டி அமைத்து அடிக்கும் அட்டூழியங்களைப் பட்டியல் போட பத்துவிரலெல்லாம் பத்தாது. வயலுக்குள் பச்சைபிடித்துக்கிடக்கும் நீலப்பச்சைப்பாசி கரண்டைக்காலில் ஒட்டிக்கொள்ள சகதியில் இறங்கி ஆட்டம்போட்டு மண்கறையைக் கழுவ மடைக்குள்தான் குதிப்போம். செல்விமாதிரி பிள்ளைகள் கூட இருந்தால் பாவாடைவிரித்து அயிரைமீன் பிடிக்கலாம். இசக்கிமாதிரி ஊருக்கு அடங்காதது பாம்புகள் கூட பிடிக்கும். சொக்கலிங்கத்தாத்தா கலப்பையைத் தோளில் தூக்கிக்கொண்டு போகும்போதே மிரட்டல்சத்தம் கொடுப்பார். அவர் வயலில் நெத்தெடுக்கப் போகும் போது ஆறுபங்குக்கு ஒருபங்கு பறுப்பு கூலி.  ஆரெம்கேவி கவர் நிரம்ப நெத்து( உளுந்து) பறித்துவிட்டு பெ

திவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச நிலையாளர்கள்.

கணையாழி வாசகர் வட்டத்தில் வாசிக்க "வனம்" என்றெழுதிய காட்டின் கவிதையை நகலெடுத்து வைத்திருந்தேன். அதே நாளில் அதே நேரத்தில் அரும்புகள் அறக்கட்டளையின் நிகழ்வுக்கு வருவதாகச் சொல்லியிருந்திருக்கிறேன். ஆட்டிச நிலையாளர்கள் பற்றியெல்லாம் பாடம் படித்து கற்றுக் கொண்டதில்லை. திவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும். என்னைவிட இரண்டுமடங்கு பருமன் இருப்பான். தடிமனாக லென்ஸ் வைத்த கண்ணாடியின் மூலமாகத்தான் அவனுக்கு பார்வை தெளிவாகப் புலப்படும். அவன் அறிமுகமான காலத்தில் பேச்சுகள் என்று எதுவும் அவனோடு எனக்கில்லை. நிறைய ஒலி எழுப்புவான்.  அது அவனுக்கும் எனக்கும் மற்றெல்லோருக்குமான் சங்கேத பாஷை. நண்பன் வீட்டில் புறா வளர்த்துக் கொண்டிருந்தபோது பக்கத்துவீட்டு ஜன்னலுக்கு அப்பாலிருந்து திவாகரனின் குரல் எழும்.புறா வேணுமா கண்ணா! மீன் வேணுமா கண்ணா! அது வேணுமா கண்ணா, இது வேணுமா கண்ணா என்று திவாகரன் அம்மாவின் குரல் கூட ஒலியாகத்தான் பரிச்சயம். தப்பித்தவறிக்கூட வெளியப் போகணுமா கண்ணா என்று அவர் கேட்டதுமில்லை. அவரும் வெளியே வந்ததும் இல்லை. நாங்கள் மீன்கள், புறாக்கள் என்று அடுத்தகட்டமாக முயல் வளர்க்கத் து

வாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்

வாசக சாலையின் 11நிகழ்வில் தான் முதல்முறையாகக் கலந்துகொள்ள முடிந்தது. எழுத்தாளர் ப.சிங்காரம் அவர்களின் படைப்பை முன்வைத்து ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார்கள் முன்பு. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்புப் பதிவை வாசிக்கும்போதே கலந்துகொள்ளத் தூண்டினது. இன்றைய (18-10-2015) நிகழ்வில் சரவணன் சந்திரன் அவர்களுடைய “ஐந்து முதலைகளின் கதை” நாவலை முன்வைத்து கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாவல் குறித்து நிறைய எழுதவேண்டுமென்பதால் அதுபற்றி பிறகுபேசிக்கொள்வோம். வாசகசாலையின் ஒரு அம்சம் பிடித்திருக்கிறது. வழக்கமாக( அல்லது வழக்கமாக்கப்பட்ட) நிகழ்வுகளில் கலந்துரையாடல் என்று பெயர் வைத்துவிட்டு சிறப்பு அழைப்பாளர்களே பேசிப்பேசிக் கொல்கிற கதை நிகழும்.தங்களின் நாற்பதாண்டுகால அனுபவத்தை நம்மீது கத்தி சொருகுகிறதுபோல குத்திவைப்பார்கள். பம்பாகணபதியை கடந்துபோய் சரங்குத்தி குத்துவார்களே அதுபோல. வாசக அனுபவமும், பேச்சை ரசிக்கிற மனப்பக்குவமும் ஒன்றுக்கொன்று முட்டிமோதாமல் ஒருங்கிணைந்து போகிற நிகழ்ச்சிகள் அரிதானது. கூட்டத்துக்கு ஒருத்தரேனும் ஆயுதம் தரித்தவராகி இருப்பார். ஆகவே, தனித்தாக்குதல்கள் நிகழும் இல

ஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க

Image
              ம லாய் தீவுக்கூட்டங்களின் தென்பாகத்தில் அமைந்துள்ளது தைமூர். (அல்லது திமோர்) 12 ஆயிரம் சதுர மைல்களுக்கும் குறைவான சின்னஞ்சிறிய தேசத்தில் , அதன் இயற்கை /கடல் வளங்களைக் கணக்கிட்டு முதலீட்டாளர்களாக நுழைகிற , அந்த நிலத்தின் வளங்களைச் சுரண்டி வணிகத்தின் மூலம் சம்பாதிக்கத் துடிக்கிறவர்களின் கதைதான் ஐந்து முதலைகளின் கதை. கதை என்பதைவிட இது ஒரு சுவாரசியமான டைரிக்குறிப்பு என்று தொடங்கலாம். ஆனால் டைரிக்குறிப்புக்கான அத்யாவசியமென்று பார்த்தால் இதில் ஆண்டுகள் இல்லை. நாட்கள் குறிப்பிடப்படவில்லை. நேரம் காலம் எதுவுமில்லை.   வெகுவாக நாம் அறியாத அந்நிய நிலம். அரைகுறை ஆங்கிலம் இந்தோனேஷிய , போர்த்துக்கீஷிய , டேட்டம் மொழிகள் பேசுகிற மனிதர்கள். இந்தியா என்றால் ஷாரூக்கான் என்கிற அடையாளம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்வையும் பசியையும் பயன்படுத்தி , அவர்களின் தோள்மீது கைபோட்டுக்கொண்டே அவர்களின் உழைப்பைச் சுரண்டும் பன்னாட்டு முதலீட்டாளர்கள். இந்த முதலீட்டு முதலைகளின் வேட்டை சாம்ராஜ்ஜியத்தில் ஒரு கலையுணர்வும் கண்களில் ஒளியும் கொண்ட வஞ்சிக்கப்படும் ஒற்றை முதலையின் டைரி இது. வேட்டையின் ப