Posts

Showing posts from March, 2017

வாசிக்கும் பிம்பங்கள்

Image
         ஏழை எளியோர் வாழ்வைச் சித்தரிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டு கி.ரா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் நாவலின் ஒவ்வொரு நிலைக்களன்களையும் குறிப்பிட்டு, குறுங்கதை ஒன்று சொல்லி காலக்கட்டத்தை அறிமுகப்படுத்தி அதுபற்றி எழுதினவர்களையும் அந்தந்த நூல்களையும் மேற்கோள் காட்டியிருந்தார். அப்படி கி.ரா குறிப்பிட்ட வரிசையில் தேயிலைத் தோட்டங்களின் வாழ்வைச் சொல்லும் செல்வராஜ் எழுதிய ‘தேனீர்’, கோகிலம் சுப்பையா எழுதின ‘தூரத்துப் பச்சை’, கொங்கு நாட்டு கிராமங்களை நிலைக்களமாகக் கொண்டு ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய ‘அறுவடை’, ‘பூவும் பிஞ்சும்’ மற்றும் ‘மாயத்தாகம்’ கைத்தறி நெசவாளர்களின் வாழ்வைச் சித்தரிக்கும்     எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘வேள்வித் தீ’, தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’ தென்மாவட்டங்களில் பனைத் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையச் சரடாகக் கொண்டு ஹெப்ஸிபா ஜேசுதாசன் எழுதிய ‘புத்தம் வீடு’, ஆற்றுமணலை அள்ளிக்குவித்து வயிறுவளர்த்த கொள்ளையர்களைப் பற்றி ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’, வெற்றிலைக் கொடிக்கால் வாழ்வை எழுதின ஆ. பழநியப்பனுடைய ‘காவிரிக் கரையினிலே’, தஞ்சை விவசாய

மரக்கா - முத்துராசா குமார்

Image
கொஞ்ச மாதங்களுக்கு முன்பாக தமிழ் மொழிக்கூடம் Srinivas Parthasarathy அவர்கள், சென்னை ரோஜா முத்தையா நூலகத்திற்கு மேற்காக களிகுன்றம் பகுதியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு வளாகத்திலே  அமைந்திருந்த தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகத்தையும் ஒருபார்வை பார்க்கலாமென்று உள்ளே நுழைந்திருந்தேன். அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒரு நல்ல தமிழ் காரியம் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டே உள்நுழைந்தாலும், அருங்காட்சியகத்தின் உள்ளே ரம்பர் மரங்களைக் கடைந்து, மெஷின் கட்டிங்கில் செய்த சிலைகளையும், மெழுகுக் களிமண் பொம்மைகளையும், கேரள பாணியிலான வடிவச் சிற்பங்களையும் காட்டி தமிழர் பண்பாட்டுக் கலைப் பொருட்கள் என்று ஏமாற்றியிருந்தார்கள். சரி போகிறது என்று சுற்றிவந்ததில், ஓர் அறையில் நான்கு பழைய மொடாக்கள், காவி பூசின நெற்குதிர்கள், கொஞ்சம் கல் உரல், உலக்கை, பழைய நெல் அளவை மரக்கால்கள், சொளவு என்று கொஞ்சம் தமிழ் நிலத்துக்குத் தொடர்புள்ள பொருட்களும் இருந்தன. கட்டடத்திற்குள்ளே ஒரு குறும் திரையரங்கம் அமைத்து தமிழர் மருத்து

ஆன்மாவை விலைபேசாத எழுத்தாளன் -தொ.மு.சி ரகுநாதன்

Image
          த மிழ் சிறுகதை இலக்கியத்தில் மாபெரும் எதார்த்தவாதியான புதுமைப்பித்தனால், அற்புதமான சிறுகதையாளரெனக் கொண்டாடப் பட்டவர் தொ.மு.சி ரகுநாதன். திக்கெல்லாம் தமிழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து, ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர் தொ.மு.சி., படித்த, பண்பட்ட, கவித்துவம் நிறைந்த ஓரளவு வசதியான குடும்பம் அவருடையது.  இன்னும் சொல்லப் போனால் மூன்று தலைமுறைகளாக இலக்கியப் பரிச்சயம் கொண்ட குடும்பம் தொ.மு.சியுடையது. தாத்தா சிதம்பரத் தொண்டைமான் புகழ் பெற்ற அறிஞர். அவர் பாடிய நெல்லைப்பள்ளு, ஸ்ரீரங்க நாதர் அம்மானை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர். ‘குமிழ்த்த முலையைக் காட்டி நின்று குறௌப் பொழுதையும் போக்குகிறீர் குரவை ஒலித்து முடியை அவிழ்த்துக் குனிந்து நடுங்கள் பள்ளியரே’                                                 -நெல்லைப் பள்ளு வைர வியாபாரியாக செல்வச் செழிப்புகளோடு வாழ்ந்த இவர் தன் இறுதிக் காலத்தில் வறுமையுற்றார். ஆனாலும் தன் பிள்ளைகளுக்குக் கல்விச் செல்வத்தை வாரி வழங்கியதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. தொ.மு.சியின் தந்தை  ‘தொண்டைமான் முத

காற்றில் வரும் ஒரு சிறு இசை

Image
“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்று மூதுரையில் அவ்வை அவள் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். திடீரென்று நண்பன் கேட்டான் அதெப்படி சங்கு சுட்டாலும் வெள்ளையாக இருக்கும் என்று. கொஞ்சம் புரிகிறமாதிரி பேசித்தீர்த்துக்கொண்டோம் என்று வையுங்களேன். சங்கு சுடுகிற அனுபவம் ஒன்று எனக்கு இருந்தது அதைத்தான் இங்கே எழுதுகிறேன். நல்ல பளபளாவென்று வெள்ளையாக இருக்கும் சங்கை ஏறக்குறைய நம்மில் நிறையபேருக்குத் தெரிந்திருக்கும். அதில்லாமல் முக்குவர்கள் ஆழியில் குளித்தெடுத்த சங்கின் பூர்வாங்க நிலை எப்படி இருக்கும் என்பதை நிறையபேர் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. நல்ல பாசிபிடித்து அழுகி இறுகிப்போன பெரிய தேங்காய் கனத்தில் ஒரு பருங்கல்லை தூக்கிக்கொண்டுவந்து, இதுதான் சங்கு என்றான் செந்திலதிபன் என்கிற என் பள்ளிக்கூடக் கூட்டுக்காரன். எனக்கு நம்பிக்கையே இல்லை. சங்கின் வடிவம் கொஞ்சம்கூட அந்தக் கல்லுக்குப் பொருந்தவில்லை. “இதுக்குள்ள தாம்ல சங்கு இருக்கும்” என்று அடித்துச் சொன்னான். பாசி வாடையில் சொரசொரவென்று பார்க்கவே அருவெறுப்பாக இருந்ததைக் கையில் வாங்கிப் பா

வெள்ளிக்கிழமை - கோடம்பாக்கம் | பாம்புச்சட்டை

Image
“ கோ டம்பாக்கத்துக் காரனுக்குத் தான் தம்பி தெரியும் வெள்ளிக்கிழமையின் வேல்யூ” என்பார் கணேசன் அண்ணன். அக்மார்க் ராஜபாளையத்துக்காரர். 2014ல் வற்றாநதியில் எழுதின ‘லைட்ஸ் ஆஃப்’ கதையைப் படித்துவிட்டு, “என் வாழ்க்கைடா தம்பி இது. உனக்கு என்னம்மோ செய்யணும்ன்னு தோணுது” என்று ஐநூறு ரூபாய் தாளை என் சட்டைப் பையில் திணித்துவிட்டுப் போனவர். கணேசன் அண்ணனுக்கு சினிமாதான் வாழ்க்கை. அதில் பெரிதாகச் சம்பாதித்துக் கொண்டதில்லை. ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு வீடுகிடைத்த சாலிகிராமத்தில் 90களின் இறுதியில் வந்து செட்டில் ஆகி, முந்நூற்றுச் சொச்சம் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். ஏழோ எட்டிலோ டைட்டில்கார்டில் பேர் வந்திருக்கலாம். கனவுத் தொழிற்சாலையின் வாசலை ஏக இறைவனாக நினைத்துக்கொண்டு, சாஸ்ட்ராங்கமாக நான் விழ நினைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சினிமா எனும் கரையற்ற வெள்ளத்துக்குள் விழுந்துவிடாமல், என் சட்டையைப் பிடித்து இழுத்து வேறு கிளைக்குள் திருப்பி விட்ட வகைக்கு கணேசன் அண்ணன் என் வாழ்க்கைத் தடத்தில் முக்கியமான மனிதர். அவருக்கு கணேசன் என்கிற பெயரே ஒரு அடையாளச் சொல் அவ்வளவுதான். “சொல்லு

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து

Image
எ ங்கள் நண்பர் குழுவில் உள்ளவர்களில் தரகர் காண்பிக்கிற பெண்ணுடைய போட்டோ பார்த்து, பெண்ணைப் பிடித்துப்போய், அட்ரஸ் விசாரித்து, நாள் நட்சத்திரம், ஜாதகப் பொருத்தங்கள் பார்த்து, கும்பலாகப் போய் காபி குடித்து, பேசிப்பேசி திருமணம் முடித்தவர்கள் அதிகம்.  என்றாலும் மனசுக்குப் பிடித்த பெண்ணைக் காதலித்து, பெற்றோர், சாதி,சமூக எதிர்ப்புகளை மீறி, நண்பர்கள் சூழ்ந்து பதிவுத் திருமணம் பண்ணிக் கொண்டவர்கள் எண்ணிக்கை கணிசமானது. மிச்ச சொச்சமான என்போன்ற சிலர் இன்னும் கிணற்றடி கல்லில் உட்கார்ந்துகொண்டு எப்படா தள்ளிவிடுவார்கள் என்று காத்திருக்கிறோம் என்பது வேறு விஷயம்.    இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துவைத்த பரபர அனுபவங்கள் பற்றி வெளியே இதுவரைக்கும் வாய் திறந்ததில்லை. காரணம் இதிலெல்லாம் சம்பந்தப் பட்டிருக்கிறேன் என்று தெரிந்தாலே எங்கள் வீட்டில் என்னைக் கட்டிவைத்து தொலியை உரித்துவிடுவார்கள் என்ற பயம் தான். அப்படியும் அண்ணன் ஒருத்தர் ஆணவக்கொலைகள் பற்றின டாக்குமெண்ட்ரி ஒன்றிற்காக பெற்றோர்களின் மனநிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர்கிட்டே பகிர்ந்துகொண்ட விஷயங்களின் மூலம் பழைய நியாபகங்கள் கொப்பளித்தன.

வற்றாநதி தந்த அன்புசெய் மனங்கள்

Image
               கார்த்திக் புகழேந்தி ... கார்த்திக் புகழேந்தின்னு ரெண்டு பேரா ன்னு கேட்டராதீங்க... ஒருத்தர் தான்.... அவரின் கதைகளையும், கவிதை களையும் வாசித்துவிட்டு அப்படியே சில மணிநேரங்கள் அந்த நொப்பத்திலேயே இருந்து கிடந்திருக்கிறேன். எதார்த்தம் துளிர்க்கும் வரிகளில் ஏன் சிலமுறை அழுது அரற்றியிருக்கிறேன்.  அவரின் சீர்மேவும் வரிகளில் ஆழ்ந்து பயணித்துக் கொண்டிருப்பேன்..திடீரென வரும் நகைச்சுவைக்கு இடம் பொருள் எதுவுமின்றி இடிச் சிரிப்பை உதிர்த்துவிட்டு என்னவென்று கேட்பவருக்கு இதனால்தான் இப்படிச ் சிரித்தேன் என்று சொல்லத்தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துப்பின் வெட்கமாய் குனிந்திருக்கிறேன். நட்பு, தாய்மை, தோழமை, அதோடு தித்திக்க தித்திக்கக் காதல் என்று தமிழ் பேசும் நெல்லைக்காரர். வரிகளைப்பார்த்து வயதை அனுமானித்து ஏமாந்த ஏராளம் பேரில் அடியேனும் ஒருவன். நிறையப் பேசியதில்லை. ஆனால் நிறையத் தெரிந்துகொண்டேன். "வற்றாநதி" என்ற தனது முதல் நூலின் மூலம் "பொருநை" (தாமிரபரணி) நதியோரத்து மக்களின் வாழ்வியல்களை, அன்பு பெருக்கெடுக்கும் தருணங்களை, நமக்கெல்லாம் இதுபோன்ற நட்பெதுவும் வ

ஊருக்குச் செல்லும் வழி - பதில் கடிதம்

Image
”ஊருக்குச் செல்லும் வழி – கார்த்திக் புகழேந்தி”     அண்ணன் கார்த்திக்.புகழேந்திக்கு வாழ்த்துகள்.         நேற்றுதான் அவர் எழுதிய “ஊருக்குச் செல்லும் வழி” கட்டுரைத் தொகுப்பு படிக்க நேர்ந்தது. கி.ரா-வின் வளர்ப்பு சோடைப் போகாது என்று மீண்டுமொருமுறை நிருபித்துள்ளார் கா.பு. நானும் திருநெல்வேலிக்காரன் என்பதால் நிறைய இடங்களில் புத்தகத்தில் இருந்த எழுத்துக்கள் காட்சிகளாக மனக்கண் முன் விரிந்துச் சென்றது. ஆவி பறக்கும் இட்’டி’லி; இதன் தலைப்பே மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. ‘இட்லி’ என்பதே எழுத்து வடிவம் ஆனால் அதை இட்டிலி என்ற எழுதுவதன் மூலம் நம்முடன் இயல்பாக உரையாட தொடங்கிவிடுகிறார். ஒரு நிகழ்ச்சியை விவரிப்பது என்பது அதை நம்முன் நிகழச் செய்வதை போலிருக்க வேண்டும். அந்த வகையில் பெண் பார்க்கும் படலத்தின் போது ஒரு வீட்டில் நடக்கும் நிகழ்வை அந்த வீட்டின் சூழலோடு அழகாக விவரித்திருப்பார். இவருக்கும் எனக்கும் இன்னொரு ஒற்றுமை. அவர் படித்தது கிறிஸ்து ஜோதி, நான் கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி. ரெண்டும் ஒரே குழுமம் தான். அவர் ஹாக்கி, நான் ஹேண்ட் பால்; அவரும் சப்ஸ்டியூட், நானும் சப்ஸ்டியூ