Posts

Showing posts from December, 2015

சந்திரஹாசம் - அகமும் புறமும்..

Image
    புத்தகம் கையில் கிடைத்த தினத்திலிருந்து இன்றைக்குவரைக்கும் “படிச்சதும் கொடுங்க” என்று முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டிருக்கும். சரி என்ன இருக்கிறது சந்திரஹாசத்தில். என்னதான் அந்த முடிவில்லா பெரும் யுத்தத்தின் கதை?       நிற்க!... முழுக்கதையுமோ புத்தகத்தின் மொத்த தொகுதியையுமோ இங்கே நான் எழுதப் போவதில்லை. அதற்கு வாய்ப்புமில்லை. ஆம்! வாசித்துவிட்டு எப்படி இருக்கின்றதெனச் சொல்லுங்கள் என “விகடன் கிராபிக்ஸில்” இருந்து தரப்பட்டது முதலாம் பாகம் மட்டுமே. அந்த அனுபவத்தை மட்டுமே நான் முலாம் பூசமுடியும்.     பாண்டியர்களின் சரித்திரம் சோழர்கள் அளவுக்கு மெய்கீர்த்திகளால் நிரம்பியது அல்ல. சமகாலத்தில் வெளியான பல சரித்திரநாவல்கள்கூட சோழர்களின் உயர்வைக் கொண்டாடும் மனநிலையிலே எழுதப்பட்டவையாகவே கருதுகிறேன். அந்தவகையில் பாண்டியர்களின் சரித்திர மற்றும் புராணக் கதைகள் திரைப்படங்களின் மூலம்தான் அதிகம் வெளிப்பட்டது.  சோழர்கள் தங்களைச் சூரியகுலத்தினர் என்று அழைக்க, பாண்டியர்களோ தங்களைச் சந்திர குலத்தினரென்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். ஆக, பாண்டியர்களின் குலச்சின்னமா

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 4 | Saya Sundaram | Keerthi Maniam

Image
பாளையங்கோட்டையில் வீடுகட்டி முடித்து குடிபுகுகிற நாள் அது. அந்த பகுதி அப்போதுதான் பழக்கமாகிறது. அக்கம்பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு அப்பாவைத் தெரியும். எங்களைச் சின்னப்பிள்ளையில் பார்த்திருக்கலாம். அவ்வளவுதான் பரிச்சயம். முதல்நாள் சாயங்காலம் மாடிக்குச் செல்லும் வெளிப்படிக்கெட்டில் நின்றுகொண்டு அண்ணன் தம்பிகளாகக்  கதையடித்துக் கொண்டிருக்கிறோம். கூடுகிற இடம் கோயில் மாடமாக இருந்தாலும் சரி  குட்டிச்சுவராக இருந்தாலும் சரி அண்ணன் தம்பியென்றெல்லாமில்லாமல் கலகலப்பாக்கிவிடுவது எங்கள் பழக்கமாகவே இருந்தது. எங்கள் வீட்டுக்கு நேர் எதிர்த்தமாதிரி இருந்தது தெருக்குழாய். நல்ல தண்ணீருக்கு எல்லாருமே அந்தக் குழாயையும் நம்பி இருந்தார்கள். அது முரண்டுபிடிக்கும் காலங்களில் எங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள தொட்டிதான் அட்சய பாத்திரம்.  அப்படி தண்ணீர் பிடிக்க வந்து கொஞ்ச நாட்களிலே எங்கள் தங்கைகளாக மனத்தில் இடம்பிடித்தவர்கள் ஆன்ஸியும் ப்ரீத்தியும்.  அக்காளுக்கும் தங்கைக்கும் ஆகவே ஆகாதாம். ஆனால் எங்கள் மீது அன்பு வைப்பதில் யார் அதிகம் என்று போட்டிபோட்டுக்கொண்டு பாசமழை பொழியும்கள். சேட்டையும்

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 3 | Madakkulam Prabhakaran

Image
 (கோப்பு படம்) வீடு என்பதின் மேலான எனது பிரியத்தை சர்வசாதாரணமாக எழுதிவிட முடிவதில்லை. தாத்தாவுக்குக் கூடப் பிறந்த சனம் ஏழுபேர். ஏழும் ஆண்பிள்ளைகள். தாத்தாதான் மூத்தவர். குடும்பங்கள் ஒவ்வொன்றும் ”ப” வரிசையில் சுத்தி வீடுகட்டிக்கொண்டு ஒண்ணுமண்ணாக வாழ்ந்தார்கள். வீடுகளின் நடு முத்தத்தில் தாயாருக்கு பூடம்கட்டி, சீலை சாத்தி, சூலம் நிறுத்தி வைத்திருக்கும். நல்ல நாளில் குடும்பங்கள்கூடி, கறவைகளையும், கன்றுகளையும், வண்டிமாடுகளையும் குளிப்பாட்டி, சாம்பிராணிபோட்டு சீராட்டி வரிசையில் நிறுத்தி அலங்கரிக்கும் காட்சிகளை எல்லாம் கதைகளாகக் கேட்டு வளர்ந்தவன். தாத்தா காலத்து வீடுகளுக்குள் நுழையும்போதே ஓலைப்பெட்டிகளுக்குள்ளிருந்து நெல்உமி வாசனையடிக்கும். பின்கட்டில் இனி கரி ஒட்டுவதற்கு இடமில்லை என்ற கனத்தில் ஈயப்பானையில் வென்னீர் புகைவிட்டுக்கொண்டே இருக்கும். நிறம் மாய்ந்து போன நிலைக்கதவும், உத்திரக்கட்டையில் கழட்டப்பட்ட ஊஞ்சல் கொக்கியும் விளையாடின காலத்து வாழ்க்கையை ஏக்கமாய்ப் பார்க்க வைக்கும். ஆச்சி வீட்டில் கம்பியில் பின்னின ஒரு பழங்கட்டில் உண்டு. “வயக்காட்டில் நார்க்கட்டிலில் உக

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 2 Packiaraj Sivalingam | Selva Kumar​

Image
ஆச்சியும், பெரியம்மாவும், அக்காள்களுமென பெண்கள் சாம்ராஜ்ஜியம் கொண்டது நம் வீடு. நாங்கள் தலையெடுக்கும் முன்னே பழுத்த தலை தாத்தன்கள் எல்லாம் வரிசை வரிசையாக விழுந்துவிட்டார்கள்.  சுப்பையா தாத்தா என்பார் தான் நீண்டகாலம் தாக்குப்பிடித்துக் கிடந்தார். அவரையும் மங்கலாக பார்த்த நினைவுதான். பெரியப்பாக்களும் அவ்வண்ணமே... ஆக, வீட்டில் தங்கிக்கிடப்பது நானும் அண்ணன் ஒருத்தரும் தான். இரண்டுபேரும் பெண்கள் அரவணைப்பிலும் வளர்ப்பிலுமே எங்கள் சின்ன வயசை தொட்டு வந்திருக்கிறோம். இதனாலேயே வீட்டுக்கு மூத்தவர் என்ற இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. கொஞ்சம் மூத்தவனான அண்ணனிடமும் பெரிய பேச்சும் பிரியமும் நினைவு தெரிந்து ஏற்பட்டதில்லை. ஒரேதடவையாக டி.வி நிகழ்ச்சியில் பார்த்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அழைத்திருந்தான். அவ்வளவுதான். இந்த இடைவெளிகள்  இப்போது மூன்றாவது தலைமுறையில்  கொஞ்சம் தீர்ந்துவிட்டிருக்கிறது. வாண்டுகள் எல்லாவனும் ஒன்றுகூடிப் பண்ணுகிற சேட்டைகளைப்  பார்க்கையில் கொடுத்து வைத்திருக்கிறான்கள் என்றுகூடத் தோன்றும். ஆனாலும் எண்ணிக்கையில் பின் தங்கியே.  33% கூட

வாழ்வியல்

“இரு இரு ஞாயிற்றுக்கிழமை வரட்டும் வேப்பங்கொழுந்து அரைச்சு வாயிலேயே புகட்டுறேன்” என்ற மிரட்டல்கள் எங்கே போனதென்றே தெரியவில்லை. சுக்கு அரைத்து கூடவே கொஞ்சம் இனிப்புக்கு கருப்பட்டி சேர்க்க, வேணாம் வேணாமென அடம்பிடிக்கும் குழந்தைகளைக் காணவே காணோம். நொச்சி இலையை கொதிக்கவிட்ட தண்ணீரில், வெங்கிச்சான் கல்லைப்போட்டு கனத்தப்போர்வைக்குள் வியர்க்க வியர்க்க ஆவி பிடிக்கும் பழக்கத்தை தொலைத்தே விட்டோம். புளியும் வெல்லமும் சேர்த்துப் பிசைந்து,கரைத்துக் கொடுக்கும் பானாகாரத்தைக் கேள்வியே படாத தலைமுறை ஒவ்வொரு வீட்டிலும் உருவாகிக் கொண்டிருக்கிறது. வெட்டிவேர் மிதக்கும் மண்பானைக் குடிநீரை ஆங்காங்கே நகரத் தண்ணீர் பந்தல்களில் பார்க்க முடிவது சற்று ஆறுதல் அளிக்கும் விசயம். ஆரோக்கியம் என்று நாம் குடிக்கும் பாலும், மோரும், இளநீரும், தன் தனித்துவத்தை இழந்து பலகாலங்கள் ஆகிவிட்டது. ஒரு கணக்குப் போட்டுப் பாருங்களேன். பல்லாயிரம் லிட்டர் பால் நம்முடைய ஒருநாள் தேவையாக இருக்கிறது, அத்தனை லிட்டர் பால்கறக்கும் பசுக்கள் நம்மிடம் எங்கே இருக்கிறது? கெமிக்கல் தான் விடை. மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றங்களை அடையும் முன்

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 1 Amutha Thamizh

Image
கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட ஊர் எங்களுடையது. ஒருபக்கம் வாய்க்காலும், ஒன்னொரு பக்கம் ஆறும் பாயும் நகரத்தில், ஈய வாளிகள் நிறைய அழுக்குத் துணிகளைச் சுமந்துகொண்டு படித்துறைக்குப் போய், கொலுசு அழுக்கைக் கடிக்க வரும் மீன்களை எத்தித் தள்ளிக்கொண்டே துணிகளை வெளுக்கும் மதினிகள் கூட்டத்தில் சின்னஞ்சிறுவனாக மேல்சட்டையில்லாமல் துணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரே ஆண் துணையாக நான் மட்டுமே இருந்திருக்கிறேன். ஆலம் பழம் விழுந்துகிடக்கும் மரத்தடியில் சுள்ளிக் குச்சிகளைக் கையில் பிறக்கி, நாலுதூண் நட்டு வீடுகட்டி முடிக்கும் வரைக்கும் அவர்கள் சோப்புப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அலசி முடித்ததும் பிளிந்து காயப்போடும்போது நமக்கு வேலையிருக்கும். மூக்கைப் பொத்திக்கொண்டு முங்காச்சி போட்டுக் குளித்துக் கரையேறும் ஈரம் மிகுந்த அந்நாட்களில்தான் எனக்குள் பேச்சுக் கதைகள் மெல்ல புத்து கட்டிக் கொண்டிருந்தன. அந்த மதினிமார்களுடைய அரசல்புரசலான சாடைப்பேச்சுக் கதைகளுக்குள், அறுவடைமுடிந்து திருணையில் காயப்போட்டிருக்கும் உழுந்து நெத்து வெடிப்பதுபோல அங்கங்கே சில வார்த்தைகள் நமக்கு பிடிபடும். அந்த வார்த