Posts

வாத்தியாரைச் சந்தித்த கதை

Image
1948-ல், தூத்துக்குடி மாவட்டம் பண்ணையூரில் (நயினார்புரம்) வாத்தியாராக ஆர்.எஸ்.ஜேக்கப் பணிக்குச் சென்றபோது அவருக்கு வயது. 19. அங்கு பள்ளிக்கூடம் என்ற பெயரில் இருந்தது ஒரு ஓலைக்குடிசை.  "ஏலா புதுசா பள்ளக்குடி வாத்தியார் ஒருத்தரு வந்திருக்காருலா" என்று குறுக்கு மறுக்காக ஓடின 10க்கும் குறைவான சாதி வேற்றுமையோடு வாழ்ந்து பழக்கப்பட்ட பிள்ளைகளைச் சமத்துவத்தோடு அமரவைத்து, இருவாசல் முறையை ஒழித்து, சுற்றுப் புறத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைத் தன் பண்ணிக்கூடத்தில் சேர்த்து, அவர்கள் படிப்புக்குத் தடையாக இருந்த ஊர் பண்ணையாரை எதிர்த்து, அவரது கொலை முயற்சிகளில் தப்பி, ஊரையே அடிமைத்தனத்தால் தன் கட்டுக்குள் வைத்திருந்த பண்ணையாரின் சுரண்டலை அம்பலப்படுத்திய வாத்தியாரின் பள்ளிக்கூட அனுபவம் சினிமாத்தனங்களை எல்லாம் மிஞ்சுவது. பொதுவுடைமைச் சித்தாந்தந்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அன்றைக்குத் தீவிரமாக இயங்கிவந்த தோழர்கள் பாலன் (பாலதண்டாயுதம்), மாயாண்டி பாரதி, நல்லக்கண்ணு, ஆகிய வேறு பலரோடு அறிமுகங்கள் இல்லாமலே நெருங்கிய நட்பு பேணியிருக்கிறார். தென்மாவட்ட ரயில் கவிழ்ப்பு சம்பவத்தால

ஸ்டோரீஸ் அர்ஷியா அசை

Image
arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா,  ‘ அசை ’  ஸ்டோரீஸ் ... எஸ்.அர்ஷியா             எஸ். அர்ஷியா ( எஸ். சையத் உசேன் பாஷா ) மதுரையைச் சேர்ந்தவர். விவசாயம்சார் தொழிலைச் செய்பவர். மனைவி அமீர்பேகம். மகள் எஸ். அர்ஷியா.                 1987 – 1994 வரையில் தராசு மற்றும் கழுகு அரசியல் வார இதழ்களில் பணி. ‘தராசு‘வில் பயிற்சி நிருபராகச் சேர்ந்து, பின்னர்  தென் மாவட்டங்களுக்கான நிருபராக உயர்வு பெற்றவர்.                 நமது ‘கழுகு ’ தர்பார் வார இதழை நான்கு நண்பர்களுடன் இணைந்து நடத்தி யதோடு , முக்கியப் பத்திரிகைகளுக்கு பலத்தப் போட்டியாக இருந்த அதில், அர்ஷியா இணையாசிரிய ராகப் பணிபுரிந்தார். . ஆசிரியரின் நூல்கள் சிறுகதைகள் கபரஸ்தான் கதவு மரணத்தில் மிதக்கும் சொற்கள் நாவல்கள் ஏழரைப்பங்காளி வகையறா பொய்கைக்கரைப்பட்டி அப்பாஸ்பாய் தோப்பு கரும்பலகை அதிகாரம் சொட்டாங்கல் நவம்பர் 8, 2016. கட்டுரைகள் சரித்திரப் பிழைகள் மொழிபெயர்ப்புகள் நிழலற்ற பெருவெளி திப்புசுல்தான் பாலஸ்தீன் பாலைவனப் பூ மதுரை நாயக்கர்கள் வரலாறு கோமகட்ட மாரு அ

கடிதம் 03 - இந்திரா கிறுக்கல்கள்

Image
                                                                                                                        இடம் : சென்னை,                                                                                                                         நாள் : 15-12-2017 அன்புள்ள இந்திரா கிறுக்கல்கள் அவர்களுக்கு, வணக்கம், இந்த வாரத்தின் இரண்டாம் நாளில் சென்னை சத்தியம் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்த ‘அருவி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நண்பர்கள் கவிமணி, யமுனைச் செல்வன் ஆகிய இருவரோடும் சென்றிருந்தேன். முன்பாகவே இதுபோலான இரண்டு திரையிடல்களிலும் கலந்துகொள்ள முடியாமலிருந்ததால் படம் பார்த்த பலரும் ‘அட்டகாசம்’ என்ற வார்த்தைக்கு மேல் எதையும் சொல்லாமல் விட்டது மேலும் ஒரு எந்துசியஸத்தை வளர்த்தெடுத்திருந்தது. ஒரு சமூகத்தின் பண்பாடு எத்தகையது என்பதை அறிந்துகொள்ளுவதற்கான உபாயம், பெண்பால் ஒருத்திக்கு அந்தச் சமூகம் எத்தகைய இடம் அளிக்கிறதோ அதுவே, அச் சமூகத்தின் பண்புக்கு அறிகுறி என்று சித்பவானந்தா எழுதிய மஹாபாரத நூலின் முன்னுரையில் எழுதியிருந்ததை நேற்றைக்கு இரவு வாசித்திருந்தே

கடிதம் 02 அருள்ராஜ் குமாரசாமிக்கு...

அன்பு அண்ணன் அருள்ராஜ் அவர்களுக்கு,   இந்த வாரத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை உங்களிடம் சொல்லவேண்டுமெனத் தோன்றியது. தமிழில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களை  வெளியீட்டுக்கு முன்பாக சினிமா,  பத்திரிகை, ஊடக பிரஜைகளுக்குத் திரையிட்டுக் காட்டுவதும், படம் பற்றி பொதுவெளியில் பேச்சு மற்றும் சலனத்தை உருவாக்குவது வெகுகாலமாக நடைபெறும் வழக்கமாகத்தான் இருந்துவருகிறது.  இந்த ‘ப்ரிவ்யூ ஷோ’ கலாசாரத்தில் புதிதாக இடம்பெற்றிருப்பவர்கள்  ‘இணையதள நண்பர்கள்’ எனும் புதிய கேட்டகரி. எனது பத்திரிகைத் துறை  நண்பர்கள் வழியாகச் சிலநேரங்கள் அடாபுடிகள் எதுவும் இல்லாமல் வெளியாகிற படங்களுக்கான டிக்கெட் முதல் பார்க்கிங் டோக்கன் வரை சிலநேரம் கிடைப்பதுண்டு. அவற்றை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறதுதான். இதுதவிர்த்து, தற்போது முகநூல் ஊடகம் வழியாக நண்பர்கள் பரிந்துரைந்த்து ப்ரிவ்யூ ஷோக்கள் பார்க்க வாய்ப்பமையும்போது ஒருவிஷயம் பயங்கர நெருடலாகிவிட்டது.   சமீபத்தில் ஒரு திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக நண்பர்களோடு பார்த்துவந்தோம். நிறைய சொதப்பல்களும், பெருவாரியாக இடங்களில் மேம்போக்காக நகர்த்தப்பட்ட காட்சிக

கடிதம் 01 - ஜீவாவுக்கு...

Image
அன்புள்ள ஜீவா, ஊருக்குப் போய்விட்டு வந்ததுபற்றி எழுதச் சொல்லிக் கேட்டிருந்தீர்கள். உண்மையைச் சொன்னால் நவம்பர் தொடங்கி இப்போதுவரை நாட்கள் முழுக்க நிறைய வேலைப் பளுவுடனே நகர்கிறது. கிடைத்த இடைவெளிகளில் தான் ஒன்றிரண்டு புத்தகங்கள் வாசிக்கிறேன். இடையே ஒரு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குப் போனதும், நம் ஜீவா படைப்பக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்காகத்தான். வள்ளியூரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை ஒரு குடும்ப விழாவாக மாற்றியிருந்தார் நண்பரும் நூலாசிரியருமான எழுத்தாளர் மு.வெங்கடேஷ்.  அவரை எனக்கு சொல்வனத்தில் எழுதியிருந்த சிறுகதை வழியாகத்தான் தெரியும். கூடவே, அவர் மாதவன் இளங்கோவின் நண்பர். (மாதவன் இளங்கோவும் நானும் ஒரே நேரத்தில் அகநாழிகையில் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தவர்கள்) வெங்கடேஷ் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்தபோது, அவரின் எளிமையான கதைசொல்லித் தனமும், திருநெல்வேலி வட்டார வழக்கும்  எனக்குப் பிடித்துப் போயிருந்தது. நம் படைப்பகத்திலே தொகுப்பு கொண்டுவருவோம் என்றதும் முழுமனதாகச் சம்மதித்திருந்தார்.  வள்ளியூருக்கும் எனக்கும் பெரிய தொடர்புகள் இல்லாவிட்டாலும் அந்த ஊ

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

Image
2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.  அன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.  முழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் எ

வாசிப்பில்... 12-10-2017

Image
சமீபத்தில் என்னென்ன புத்தகங்கள் வாசித்தீர்கள் கார்த்திக்? -மா.கோதண்டம், சென்னை. “மூ ன்று புத்தகங்கள். அதில் ஒன்று ஜீ.முருகன் அவர்களின் கண்ணாடி சிறுகதைத் தொகுப்பு. இரண்டாவது மு.ஆனந்தன் எழுதிய யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத் தொகுப்பு. மூன்றாவது சா.தேவதாஸ் மொழிப்பெயர்ப்பில் புனைவும் பிரக்ஞையும் என்ற தொகுப்பில் உள்ள பிறமொழிக் கதைகள் சில... எனக்குக் குறிப்பாக இது இப்படியான கவிதை என்றெல்லாம் பிரித்து வகுத்து வாசித்துப் பழக்கமில்லை. அந்த ஏரியாவில் அதிகம் புழக்கமுமில்லை என்றாலும், யுகங்களின் புளிப்பு நாவுகள் தொகுப்பில் ஒரு நான்கு கவிதைகள் அப்படியே அதன் படிமங்களால் மனத்தில் உறைந்துபோன காட்சிகளாக நின்றுவிட்டது. பொணந்தூக்கி சாமி, நாங்கள் யாராலும் பாராட்டப் படாத குழந்தைகள், அம்மா பலூன் குட்டி பலூன், அம்மாக்களின் செவிப்பூக்கள் ஆகிய தலைப்பிலான கவிதைகள் அவை. * ஜீ.முருகனின் முந்தைய தொகுப்புகள் படித்ததில்லை. சில கதைகள் மட்டும் வாசித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். அவரது காண்டாமிருகம் சிறுகதையை அந்தத் தலைப்புக்காக வாசித்தேன். ‘கண்ணாடி’ தொகுப்புக் கையில் கிடைத்த