Posts

Showing posts from 2016

அவளும் நானும் அலையும் கடலும்

Image
மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும் என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன் உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு. முதல்தடவை திருவான்மியூர் புத்தகக்கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனைச் சந்தித்தது போல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்த களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள். * இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?”

அரிகில் பதியே - Arikil Pathiye - Song Lyrics | Oru Murai Vanthu Paarthaya | Malayalam

Image
அரிகில் பதியே இடநெஞ்சில்  ஆரோ மூழும் ராகம் மிஷிகள் மொழியும் மதுரம் கினியும்  நீ யென்னில் ஈனம் மழையே.. மழையே  (இளவெயிலே) என் கனவில் அவள் அறியாதே!  தளிரறியும் புலரிகளில் மஞ்சின் தூவல் வீசி.. மெல்லே ..ஏ…  மெல்லே.. ஏ… புதுமழையில் மெய் புனரும்… பூவின் மௌனம்  இதழ் விரியும் ஈ ராவின்.. நிறமோகம்  மனமறியாதே திரயுகயோ  நீ… எண்டே உள்ளம் நின்னில் ஞான் மௌனமாய் அலியும் அனுராகம் நின்னே தொட்டு பூமேட போரும் காற்றாய் நீலே..  நின்னோடென்னாய் சேரான் துடிக்கும் மோகம் மழையே மழையே… பூ மழையே! அரிகில் பதியே இடநெஞ்சில்  ஆரோ மூழும் ராகம் மிஷிகள் மொழியும் மதுரம் கினியும்  நீ யென்னில் ஈனம் ஓ..ஓ.. ராவில் பொன் கனவாய்  சாரேயோடையன்னு நீரில் நீ வரவா யால்  என்னில் பூக்காலம் நீயும் ஞானு மென்னும் மறுதீரங்கள் தேடி ஒன்னாய் சேர்ந்னு பாரும் தேன்கிளிகள் ! நின்னே ஞான் ஏகையில் தேடுமே சத்யயில் நின்னிலே கித்துவான் மோகமோடே! அரிகில் பதியே இடநெஞ்சில் ஆரோ மூழும் ராகம்  மிஷிகள் மொழியும் மதுரம் கினியும் நீ யென்னில் ஈனம் மழையே ஏ... என் கனவில

தினமணி ஆசிரியரிடமிருந்து சில வார்த்தைகள்

Image
செய்தி

ராஜேந்திர சோழனின் குறுநாவல்கள் - கார்த்திக் புகழேந்தி உரை | Karthick Pug...

Image

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

Image
தெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம் நிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே புழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும் புளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம் மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம் அகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம் என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம் அழகே...... அழகில் தீர்த்தொரு சிலையழகே மலரே....... என்னுயிரில் விடரும் பனிமலரே... மலரே நின்னை காணாதிருந்நால் மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால் அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே ஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில் அதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச தாளங்ஙள் ராகங்ஙள் ஈணங்ஙளாயி ஓரோரு வர்ணங்ஙளாயி இடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில் ப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில் தளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே அலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே...... அழகே..... குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம் மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம் அகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம் என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்

அகலே யாரோ பாடுன் நுவோ | சார்லி Charlie | Akale Song |Tamil Lyrics

Image
அகலே… ஏ…அகலே அகலே... அகலே யாரோ பாடுன் நுவோ அந்தமில்லா காலம் கொண்டு வச்சதாரு… எது ஸ்வப்ன ஜாலம் பல கல்லொலமென்னொடு முல்லகெ துல்லடுமா சந்தமுள்ளதானோ.. உள்ளனிஞ்சதானோ என்கிவிட்டதே ஒ..ரக்ஞாத விஸ்மேய ஸ்வர்கீய சங்கீதமா… நிமிஷமதோ…ஓ…. ஓ….ஓஹ்..ஓ… நிமிஷமதோ…ஓ…. ஓ….ஓஹ்..ஓ… நிமிஷமதோ…ஓ….ஓஹ்..ஓ… ஓ….ஓஹ்..ஓ… நிமிஷமதோ ஓஹ்..ஓ… அகலே ஏஏ…. அகலே… அகலே நேரம் பூக்கும் மீடு அகலே நேரம் பூக்கும் மீடு அகலே…ஏஏ….அகலே…ஏஏ…. அகலே…ஏஏ…. அகலே…ஏஏ…. அகலே…ஏஏ……….. தானானானே தானானே தானாரெனா தார தானே ஹோ… தானதான தாந்தான தான தான தான தானே…. அகலே….ஏஏஏ…. அகலே…ஏஏஏ… ஓஹ்…. அகலே….ஏஏஏ…. அகலே…ஏஏஏ…ஹே.

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil

Image
என்னிலே எல்லினால் படச்ச பெண்ணே முக்கத்தே மண்ணிலாய் பிறந்த பெண்ணே என்னிலே ரூகிலே பகுதி யல்லெ என்னிலே நூறாய் நீ நிறஞ்ஞதல்லே என்னிலே வ்ளிச்சமும் நீயே முத்தாய் நீ மின்னன மால யல்லே என்னிலே இஸ்கிண்டே நூரே ஆரும் காணா ஒளியும் நீயே.. எண்டே கிதாபிலே பெண்ணே எண்டே கிதாபிலே பெண்ணே யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே யஹெ மெரே யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. என்னிலே எல்லினால் படச்ச பெண்ணே முக்கத்தே மண்ணிலாய் பிறந்த பெண்ணே என்னிலே ரூகிலே பகுதி யல்லெ என்னிலே நூறாய் நீ நிறஞ்ஞதல்லே என்னிலே வ்ளிச்சமும் நீயே முத்தாய் நீ மின்னன மால யல்லே என்னிலே இஸ்கிண்டே நூரே ஆரும் காணா ஒளியும் நீயே.. எண்டே கிதாபிலே பெண்ணே எண்டே கிதாபிலே பெண்ணே யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே யஹெ மெரே யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. Ennu Ninte Moideen

சொற்களைத் தேர்ந்தெடுத்தவர் “பாப் டிலன்”

Image
மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல், உலக அமைதி என, ஐந்து நோபல் பரிசுகளும் அறிவித்து முடித்த பின், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கப் போகிறது என்று, ஒட்டுமொத்த இலக்கிய ஆர்வலர்களும் காத்திருந்தனர். அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தச் செய்தி.  அமெரிக்காவின் கவிதை முகத்தையே மாற்றியமைத்தவரும், கிடார் நரம்புகளின் அதிர்வுகளால், தன் எதிர்ப்புக் குரலை பாடல்களின் வழியாகப் பதிவு செய்து கொண்டிருக்கும், பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அமெரிக்க குடியுரிமைப் போராட்டங்கள், அந்நாடெங்கும் கொழுந்துவிட்டு எரிந்த போது, போராட்ட இயக்கங்களுக்கு, டிலனின் பாடல்கள் தான் தேசிய கீதம். 50 ஆண்டுகளாக, தன் பாடல் வரிகளில் அணையாத தழல் கொண்டிருந்த இசையைத் தந்து கொண்டிருக்கிறார், டிலன். யூதப் படுகொலைகளினால், அமெரிக்காவில் தஞ்சமைடைந்த டிலனின் குடும்பம், துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்டது.  சிறுவனாக இருந்த போது, ராபட் என்றே அறியப்பட்ட டிலன், பள்ளி நாட்களில், இசைக் குழுக்களை உருவாக்கி பாடல்களை அரங்கேற்றிய போது, 'உ

பாப் டிலன்; கட்டுரையும் விளக்கமும்.

வணக்கம் Thiruvendra Kumar உங்களுடைய செய்தி கிடைத்தது. அதில் பாப் டிலன் பற்றி தினமலரின் வெளியான எனது கட்டுரையும், எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையும் உங்களை குழப்பியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இரண்டும் வெவ்வேறு விதமாக பாப் டிலனைத் தங்களுக்கு அடையாளப் படுத்துகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனது கட்டுரை பாப் டிலன் என்பவர் யார்? அவருடைய வாழ்க்கை, இசைப்பயணம் எங்கிருந்து தொடங்கியது என்ற ஸ்கெட்ச்களுக்குள் மட்டும் எழுதப்பட்டது. பாப் நோபல் பரிசுக்குத் தகுதியானவரா, அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் கொடுப்பது சரியா என்ற விவாதத்திற்குள் நான் நுழையவே இல்லை. எனக்கு டிலனைப் பற்றி ஓர் அறிமுகம் எழுதவேண்டும் என்று தோன்றியது. "I am Not There" படத்தைப் பார்த்ததிலிருந்து. க்ரானிகல்ஸ் வால்யூம் ஒன் பற்றித் தெரிந்துகொண்டதிலிருந்து, எல்லாவற்றுக்கும் மேலாக டிலனின் பாடல்களின் மொழிப்பெயர்ப்பை வாசித்ததிலிருந்து, நான் டிலனின் பாடல்களைக் கேட்கிறேன். அவை பற்றிய மேலதிக விசயங்களைத் தெரிந்துகொள்கிறேன். அமெரிக்க நாட்டுப்புற செவ்வியல் இசையைத் தன் பாடல்களுக்குப் பயன்படுத்துகிறார் பாப் என

ஐஸ் ஹவுஸ் - சென்னை

Image
2014 இறுதியில் திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் அறையெடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது போக்கு வரத்துக்கெல்லாம் பேருந்து பயணங்களைத் தான் நம்பியிருந்தேன். ஒவ்வொரு தடத்துக்கும் ஒவ்வொரு எண் கொண்ட பேருந்துகளை அடையாளம் கண்டுபிடிக்க நண்பனின் உதவியை நாட வேண்டிவரும். அறைக்குத் திரும்பும்போது மட்டும் சரியாக ஐஸ் ஹவுஸ் வழித்தடத்தில் செல்லும் பேருந்தைப் பிடித்து, பார்த்த சாரதி கோயில் ஆர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வேன். அப்போதுதான் இந்த ‘ஐஸ் ஹவுஸ்’ என்று ஏன் பேருக்கான காரணம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினேன். என் துருப்புச் சீட்டுகள் சிலர் வழியாகக் கேட்டறிந்தபோது, காயிதே மில்லத் சாலை முனையில் உள்ள பள்ளிவாசலைக் கைகாட்டி இதுதான் ஐஸ் ஹவுஸ் என்றார்கள். நானும்கூடக் கொஞ்ச காலத்துக்கு அதையே நம்பிக் கொண்டு திரிந்தேன். ‘கலோனல் லவ்’ என்பவர் எழுதிய ‘வெஸ்டிஜெஸ் ஆஃப் மெட்ராஸ்’ புத்தகத்தில் ஐஸ் ஹவுஸ் பற்றி எழுதிய ஒரு குறிப்பு ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அப்போது தான் உண்மையான ஐஸ் ஹவுஸ் பற்றியும், அதன் பேருக்கான வரலாறும், சாமுவேல் ஆஸ்டின் பற்றியும், ஃப்ரெட்ரிக் தாதர் பற்றியும் தெரியவந்தது. இன்றைக

அஜ்வா - ஏழு பேரீச்சம் பழங்கள்

Image
ஒரு குரல் நாவல் முழுக்கக் கதை சொல்கிறது. ஒரு ராட்சதக் கை அந்தக்குரலை கண்காணித்துக் கொண்டே பின்தொடர்கிறது. அந்தக் கை ஒருசமயம் வானம் அளவுக்கு விரிந்து வரவேற்கிறது. அந்தக் கை பாவங்களை மன்னிக்கிறது, அந்தக் கை வழிநடத்துகிறது. அந்தக் கை தைரியத்தைக் கொடுக்கிறது. அந்தக் கை ஏழு பேரிச்சம் பழங்களை வழங்குகிறது. இறுதியில் ஒரு குடையாக மாறி கதைசொல்லும் குரலுக்குச் சொந்தக் காரனைத் தாங்குகிறது. அஜ்வா. போதை உலகத்தில் தன்னைத் தொலைத்துவிட்ட ஒருவனது மீட்சியின் கதைதான் அஜ்வா.   மீட்சியென்தோடு மட்டும் அல்லாமல் தான் வாழ்ந்த உலகத்தின் சந்துபொந்துகளுக்கெல்லாம் நம்மை அழைத்துச் சென்று அதன் கட்டமைப்புகளையும், கசடுகளையும் அவ்வுலகிலிருந்து மீண்டவர்களையும், மாண்டவர்களையும் பற்றிய கதைகளை முன்பின்னென்று எந்த ஒழுங்கமைவுகளும் எதுவுமில்லாமல் ஒரு மிதபோதைக் காரனின் மனநிலையிலேயே சொல்லிச் செல்கிறார் சரவணன் சந்திரன். மூன்றாவது நாவலைப் புரட்டும்போதும் அதே வேகம். இடையில் கீழே வைத்துவிட முடியாத விறுவிறுப்பு. செய்தித் தாள்களின் ஆறாம்பக்கத்து பத்திகளின் தலைப்பில் புதைந்துகிடக்கும் ஆதாரச் சம்பவங்களின் மையப்புள்ளிக்

இட்டிலி

Image
உடம்பு சரியில்லாத அப்போதுதான் மனசு இட்டிலியை ஏற்றுக்கொள்ளத் துணிகிறது. அதென்னவோ இட்டிலி, தோசை என்றால் நம் வீட்டில் சுட்டது மட்டும்தான் மனசுக்குப் பிடித்து சாப்பிடத் தோணும். சில நேரம் தோசை விதிவிலக்கு.  ஊர்ப்பக்கங்களிலெல்லாம் ரொம்பச் சின்ன வயசில் பண்டிகைக்கு மட்டும்தான் இந்த மாவுப் பதார்த்தம் கிடைக்கும். பெரியம்மையின் மூத்த மகளைப் பெண் பார்க்க வரும்போது, நான் கையில் நிற்காத பிள்ளையாக திரிந்துகொண்டிருந்தேன். விடிந்தால் சொந்தமெல்லாம் வந்துவிடுமென்று வட்டம் போட்டு ஆட்டுரலில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்கள் அத்தை சித்தி அம்மைகள். கைவலி எடுத்தால் சித்தியிடமிருந்து பெரியம்மை, அவளிடமிருந்து சின்ன அத்தை என்று நான்கு ஐந்து ஆள் மாறும் அரவை. அவ்வளவு பெரிய ஆட்டுரல் அது. எட்டு பத்து கிலோ குழவியைத் தூக்கி கல்லைக் கழுவும் வலு கொண்ட பெண்கள் இருந்த வீடு அது.  உப்பு, சோடாப்பு கூட குறைய அல்லது மாவு பதத்தில் ஏதும் குறை இருக்கா இல்லையா என்பதற்கு ஒரு சொலவடை உண்டு. "ஆறு கைபோட்டு அரைச்ச மாவுல கூறு கொறை சொல்ல முடியாது கேட்டியளா" என்று. இதற்கு நான் ரெண்டு அர்த்தம் பண்ணிக்கொண்டேன். ஆறு பெ

திருவலங்காட்டு செப்பேடும் திரு ஊறல் மீன் சின்னமும்...

Image
சிலமாதங்கள் முன்பு வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழுக்க சுகவாசத்தை அனுபவித்துவிட்டு வந்து, அதனைத் திங்கள்கிழமை அலுவலகத்தில் உட்கார்ந்து சிலாகிக்கும் வேலையை கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தேன். உங்களில் யாரோ வைத்த கண்ணால் அது கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வாரங்களாக நிகழாமல்ப்போய், ‘கிட வீட்டிலே’ என்று அடைத்து வைத்து வேலை வாங்கிவிட்டது. பனுவலில் ஆறாவது தொல்லியல் சுற்றுலா அறிவித்தபோதே, இந்த தடவை விடக்கூடாது என்று எல்லா நடவடிக்கைகளையும் கச்சிதமாகச் செய்துவைத்துவிட்டு முதல் நாள் இரவில் உறங்கப் போனேன். ஒவ்வொரு முறையும் நண்பர் கேசவராஜ் இந்தப் பயணங்களில் உடன் இருப்பார். இந்த தடவை மனிதர் பிராஜக்ட் ரிவ்யூ என்று பின்வாங்கிக்கொள்ள துணைக்கு மற்ற நண்பர்களைஅழைத்தேன்.    ஆகா ஏழு பேர் என்று நெஞ்சு நிமிர்த்தும் முன்னே மூன்று பேர் லீவ் லெட்டரை நீட்டிவிட்டார்கள். நான்குபேராகக் கிளம்புகையில் அகரமுதல்வனையும் ‘வாருங்கோ’ என்றழைத்தேன். மனிதர் ஐந்தரை மணிக்கே பனுவலில் நின்றுகொண்டு போனடித்தார். சாவகாசமாகக் கிளம்பி, அங்குராசுவோடு இணைந்து பனுவலுக்குப் போய் காத்திருந்து, ‘படிவிருதாளர்’ மணிவண்ணன் அவரின் புகைப்பட

ஹாக்கி மட்டைகளும், தன்ராஜ் பிள்ளையும், தலைமுடியும்...

Image
நேசமணி வாத்தியார் ஒத்தைக் காதைப் புடிச்சு திருக்கினார்னா அரைமணி நேரம் கழிச்சு அதுமட்டும் செவந்து ஒரு தினுசா வீங்கி இருக்கும். காதை வச்சே ‘என்னடா போன பீரியர்டு சைன்ஸா’ என்று பக்கத்துக் க்ளாஸ் பசங்களே கேப்பானுங்க... அவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே செக்‌ஷன் மாறின பயல்களே உண்டு. ஆனா நான் இன்னுமொரு படி மேலே போய் ஸ்கூலே மாற முடிவெடுத்தேன். எட்டாவது வரைக்கும் கதீட்ரல்ல படிச்சவன் ஒன்பதாவது படிக்க வேற பள்ளிக்கூடம் பாருங்கன்னு அடம்புடிக்க, ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா அங்கேயே கிடந்து நல்லா படிப்பான். சேட்டையும் குறையும். ஸ்காலர்ஷிப் அது இதுன்னு எதும் கிடைக்கும் மேல்படிப்புக்கு ஆகும்ன்னு பாணாங்குளத்துக்குப் பக்கம் ஒரு சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்தில கொண்டு போய் சேர்த்துட்டாங்க. முதல் நாள் சாயங்காலம் ‘எல்லா பசங்களும் ஹாஸ்டலுக்குப் பின்னாடி இருக்கும் கிரவுண்டுக்கு புல் பிடிங்கப் போங்க’ன்னு வேலை சொன்னாங்க. நல்ல பொழப்புதான் போன்னு நானும் போயிருந்தேன். இப்படி ஏழெட்டு நாள் வேலைக்கப்புறம் ரோடு ரோலர்லாம் வந்து மண்ணைச் சமன் படுத்திட்டு இருந்தது. அப்போதான் தெரியும் பள்ளிக்