Posts

Showing posts from June, 2015

உப்பு புளி மொளகா....

Image
தோ ழமை ஒருவரோடு வாட்சப்பில் பேசிக்கொண்டிருந்தேன். நகரத்து உணவு விடுதிகளில் பதார்த்தங்களை,“ ஸ்டார்ட்டரில் தொடங்கி டெசர்ட் வரைக்கும்” விதவிதமாக விரும்பிச் சாப்பிடும் அனுபவத்தைச் சிலாகித்துக் கொண்டிருந்தார். விதவிதமாகச் சமைக்க ‘மட்டுமே’ தெரிந்து வைத்திருந்த தலைமுறைப் பெண்கள் தனக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்து விரும்பிச் சாப்பிடுவதைப் பற்றி பெருமையாக சொல்லும் போது கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. காலம் எவ்வளவு மாறிவிட்டது என்றேன். ஆமாம், சமைக்க மட்டுமே தெரிந்தவர்கள் சாப்பிட மட்டுமே தெரிந்தவர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறோம் என்று புன்னகைக்க வைத்தார். ஏதோ வென்னீரில் கொதிக்கவிட்டு இந்த மேகி மட்டுமாவது கைகொடுத்து வந்தது அதுவும் போச்சு என்ற ஆதங்கமும் வெளிப்பட்டது. நிஜம் தான். வருங்காலங்களில் அம்மாவின் சமையலை சிலாகிக்கும் குழந்தைகள் அரிதாகிவிடுவார்களோ என்னவோ. ஒரு ஹைக்கூ படித்தேன். “விமானங்களை அனாயசமாகவும் பட்டாம்பூச்சிகளை ஆச்சர்யமாகவும் கடக்கும் நகரத்துக் குழந்தைகள்” என்று. புதிதாய் திருமணமான அத்தனை மாப்பிள்ளைகளையும் நமட்டுச் சிரிப்போடு வீட்டில் சமையல் எல்லாம் எப்படி என்ற கேள்வி உதிர்

கடாரம் கொண்டான் : கடாரமும் தமிழகமும் - டத்தோ .வீ. நடராஜன்.

Image
ஒருவாரம் முன் டத்தோ.வீ.நடராஜன் அவர்களை ஹோட்டல் அபி பேலசில் சந்தித்த பதிவோடு அவரோடு ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடி செய்யட்டுமா நண்பர்களே என்று பதிந்த வேகத்தில் நேற்றைக்கு, (08-06-2015) சமூக ஆய்வு வட்டம் சார்பில் ஏழாவது நிகழ்வாக பனுவலில்,   “கடாரத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு” என்ற தலைப்பில் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துவிட்டுத்தான் ஓய்ந்தார் பேராசிரியர். ஆ.பத்மாவதி அவர்கள்.  நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்னே வீட்டுக்கு அழைத்திருக்க,  தெற்குச் சீமையின் ருசியோடு புளிப்பும் உரைப்புமாக உருண்டைக்குழம்பும் சோறும் தின்று,  திரு. நடராஜன் அவர்களது புத்தகம் பற்றியும், வேளாண்துறை இயக்குனர் திரு. இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றியும் நிறைய தகவல்களைச் சொன்னார்.  வீட்டுக்கு வந்ததும் கடாரம் பற்றி கொஞ்சம் தேடிப் படித்ததில் பட்டினப்பாலையின் “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் பாடலில் வந்த காழகத்து ஆக்கமும் என்ற வரி கடாரத்தைக் குறிக்கிறது என்பது போலான தகவல்களை கொஞ்சம் அறிந்து,  இராஜேந்திர சோழனையும், கடாரத்தையும் இணைக்கும் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதின் பேரார்வத்தில் இருந்தேன். 

ஆலயம் செல்வது சாலவும் நன்று

Image
கடந்த (29-05-2015) வெள்ளிக்கிழமையன்று மதியம் கல்வெட்டாய்வாளர் திருமதி. பத்மாவதி ஆனையப்பன் அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு. திருப்போரூர் முருகன் கோயிலில் அமைந்துள்ள நவ வீரர்கள் சிலைகளைக் காணப் போகிறோம். பிற்பகல் மூன்று மணிக்கு நீங்களும் வந்துடுங்க கார்த்திக் என்று... அவசரவேலை என்று எதுவும் இல்லை என்பதாலும், கூகுளில் சென்னைக்கும் திருப்போரூருக்கும் 28சுமார் கிலோமீட்டர்களே காண்பித்ததால்  எப்படியும் மாலையில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையாலும் நானும் ஐக்கியமாகிக் கொண்டேன். வழியில் நண்பர் திரு.பன்னீர் சிப்காட் அருகில் இணைந்துகொள்ள திட்டப்படி திருப்போரூர் கோயிலை மாலை நான்கு மணிக்கு அடைந்தோம். கோவில் நுழைவாயிலில் இருந்து நேரே பிரகாரத்தின் பின்புறம் சென்று, கற்பலகையில்  செதுக்கப்பட்டிருந்த  நவவீரர்கள் என்றழைக்கப்படும் வாளும் கேடயமும் ஏந்தி அணிவகுத்து நின்ற வீரர்களின் சிலைகளைக் காண்பித்தார் பன்னீர்.  அதேவரிசையில் விநாயகர் சிலைக்கு அருகில் அமைந்திருந்த (சீனர்கள் சாயலில் மீசை வைத்திருந்த)   முனிவரை கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டார் பேராசிரியர். கோவிலின் தன்மையையும் தூண்களின் வடிவமைப்