Posts

Showing posts from April, 2015

வெயிலில் நனையாத கிராமங்கள்

Image
சின்னவயசுல அக்காவுக்கு ஏகப்பட்ட தோழிகள். அந்த வாயாடிக் கூட்டத்துக்கு கேங்க் லீடர்ல ஒருத்தியா அக்கா இருந்திருக்கனும். வீடும் வைக்கோல் போர் எழும்பி நிற்கும்பின்கட்டும், தொழுவமும்   எப்பவும் ஜே ஜேன்னு நிரம்பி வழியும், பத்தாததுக்கு தொன்னூறு வயசுக் கிளவியா ஆச்சியும் வீட்டில் இருக்க, ஊரில் உள்ள கிழங்கட்டைகள் எல்லாம் அந்த முள்ளு மரத்து நிழல்ல கூடி உட்கார்ந்து  கதைகதையா பேசுவாங்க. அந்தப் பிள்ளைகளுக்கு வால் ஒன்னுதான் குறை.. பூசணிப்பூ பறிக்க , குன்னிமுத்து பிறக்கி எடுக்க, புளியம்பழம் உலுக்க, நெல்லிக்கா, கொடுக்காபுளி, மாங்கா, நவ்வாப்பழம், கோவப்பழம், எளந்தைப்பழம், மருதாணிச்செடி, காக்கா முள்ளு, கள்ளிப்பூவு,  எருக்கம்பூவு, வாகைப் பூவு, அரச இலைன்னு ஒன்னு விடாம, ஊருல முளைக்குற எல்லாப் எல்லாமே அவங்களுக்கு தேவையான பொருள்தான். எல்லாத்தையும் பறிச்சுக்கொடுக்கவும், காவல் இருக்கும் தோட்டத்தில் களவாடவும் அவங்களுக்கு   ஒரு சம்பளமில்லாத அடிமையா நானும் ஒருகாலத்தில் இருந்தேன். எங்க போனாலும் பட்டத்து இளவரசிங்களுக்கு காவல் நாமதான். அதுவும் சோனிப்பையல்வளுக்கு அக்காவா சுகந்தி மாதிரி பிள்ளைங்க இருந்தா, தன்னோ

காலத்தை கடத்தும் கதை சொல்லி கி.ராவுடன்

Image
இந்த இரண்டு நாள் பற்றி நிறைய சொல்லவேண்டி இருக்கிறது.. முக்கியமாக அந்த இரண்டரை மணிநேரங்களை, கூடவே 450கிலோமீட்டர் பயணங்களை... __________________________________________ கி.ராஜநாராயணன் அவர்களின் “கதைசொல்லி” கத்தாய இதழ்  சிலவருடங்கள் முன்னே நின்று போனதும், பின்னே மீண்டும் வெளிவரும் பணிகளை மேற்கொண்டு வருவதையும் நாம் பக்கம் பக்கமாகப் பேசிவிட்டோம். ஆனால் கதை சொல்லியின் ஆதிஅந்தத்தைப் பற்றிச் சொல்லவேண்டி இருக்கின்றது. கோபல்ல கிராமம், கோபல்ல கிராம மக்கள் , கரிசல்காட்டுக் கடிதாசி, அந்தமான் நாயக்கர் நாவல்களையும், கிடை, பிஞ்சுகள் குறுநாவல்களையும் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் கி.ரா என்ற  கரிசல் இலக்கியக் கர்த்தாவினை அறிந்திருப்பீர்கள். அவருடைய சிற்றிதழ் தான் “கதைசொல்லி” இன்றளவில் கதைசொல்லியின் வயது 18. கதைசொல்லி - எண்வழி இதழாக வெளிவந்த போது அதற்கு கத்தாய இதழ் என்று பெயரிட்டு அழைத்தார்கள். கரிசல் மண்ணில் ”கத்தாயப் பயிர்செய்தல்” என்பது நான்குமாதங்களுக்கு ஒருமுறை செய்யப்படும் வேளாண்மை. கி.ரா  ஆசிரியராகவும், கழனியூரன் பொறுப்பாசிரியராகவும் சிரமமேற்று வெளியிட்டு வந்த பொழுதில், எட்டு ஆண்டுகள் ம