தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது





கவிஞர் விக்ரமாதித்யன் நம்பிராஜனை, அவரது கவிதைகளை,நவீன கவிதைகள் குறித்தான அவர் பார்வையை இன்றைக்குக் கிறுக்குபவர்கள் நிச்சயம் வாசிக்கணும்.

மு.சுயம்புலிங்கம், அஷ்டவக்கிரன்,எம்.யுவன், குவளைக்கண்ணன், பிரான்சிஸ் கிருபா, ஆசை,சி.மோகன், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, சமயவேல், யூமாவாசுகி, யவனிகா ஸ்ரீராம், ஸ்ரீநேசன், என்.டி.ராஜ்குமார், ஷங்கர் சுப்பிரமணியன், ஆர்.மகாதேவன், ராணிதிலக், கண்டராதித்தன்,பழநிவேள், கோகுலக்கண்ணன், அகச்சேரன், முக்கியமாய் கைலாஷ் சிவன் கவிதைகளைப் பற்றி விக்கிரமாதித்யன் வார்த்தைகளில் படிக்கவேணும்.

நறுக்குத் தெறித்தாற் போல எழுதுவார். இன்னின்னது இன்னின்ன மாதிரியானதென்பார். பிழைவிட்டால் போய் அ.கி.பரந்தாமனாரின், "நல்லதமிழில் எழுதுவது எப்படி" படிக்கச் சொல்வார்.

விக்கிரமாதித்யன் போல் நவீன கவிதைகளைக் கொண்டாடுகிறவரும், வாசிக்கிறவரும் இல்லை. எழுதுகிறவர்கள்தான் தண்ணிபட்டபாடு. நக்கீரன் பதிப்பில் வந்த "தீயின் விளைவாகச் சொல்பிறக்கிறது" வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

கார்த்திக் புகழேந்தி
15-10-2015

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil