மொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி
மக்கள் தொலைக்காட்சி மொழிவது அறம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். அடுக்குமாடிக் குடியிறுப்புகள் பற்றினத் தலைப்பு. இந்த கேட்டட் கம்யூனிட்டி மீதுள்ள வெறுப்பை எல்லாம் கொட்டித்தீர்த்துவிடலாம் தான். ஆனால் உண்மைக்கு மிக நெருக்கமாய் நிறைய சங்கதிகள் அலசப்பட்டது.
சமத்துவம் இருக்கிறது, வாழும் காலத்திலே சொந்தவீடு கனவு நிஜமாகி இருக்கிறது என்ற பாசிட்டிவ் பக்கங்களுக்குப் பின்னே இங்கே சுதந்திரமில்லை என்று மூன்றுவித கருத்துகளில் எனக்கு மனித உணர்வு மாற்றத்தைப் பிரதிபலிக்கு வண்ணமமைந்த ”அடுக்குமாடிக் குடியிருப்புகள் மனிதர்களைத் தீவுகளாக்கி விடுகின்றன" என்ற தலைப்பு பொறுத்தமாக அமைந்தது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பிரச்சனைகளை எடுத்து அடுக்கி வைப்பதென்பது அடுத்தநாளே அத்தனையும் இடித்துத் தள்ளிவிட்டு தனிவீடுகள் கட்டிக்கொள்ளுங்கள் என்று முட்டாள்தனமாகப் பேசுவதல்ல. தவிர, நகரம் கிராமங்களைப் பிரதிபலிக்கவேண்டும் என்று வலிக்கட்டாயமாகத் திணிப்பதுமல்ல.
நாம் மனிதர்கள், நமக்கு வீடு என்பது வெறும் உய்விடம் அல்ல அது உணர்வுகளைக் கற்றுத்தரும் கூடம். தலைமுறைதலைமுறையாக வளர்த்தெடுத்த நம் மரபும், பண்பாடும் வடிவங்கள் மாறிப்போயிருக்கலாம். ஆனால் அதன் அடிப்படை வேர்களைத் தகர்க்கும் பிரச்சனைகளை புரிதல்கொண்ட மட்டும் பேசியிருப்பதாக நினைக்கிறேன்.
அதையெல்லாம்விட என்ன இன்னும் சொந்த வீடு வாங்கலையா என்று குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி தன் வியாபாரத்தை வளர்த்தெடுக்கும் கொள்ளையர்களைப் பற்றியும், அடுக்குமாடிக்குடியிருப்புகளின் கட்டுமான ஆபத்துகளையும் இன்னும் தீவிரமாகப் பேசியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன் காணொளியைப் பாத்து முடித்ததும்.
நிகழ்ச்சியை பதிவுசெய்துகொடுத்த பேராசிரியர். டாக்டர். உஷா ஈஸ்வர் அவர்களுக்கு நன்றி.
Part 1" on YouTube - https://youtu.be/xMr57kZzkaw
Part 3" on YouTube - https://youtu.be/tzEzi4ljAzQ
Part 4" on YouTube - https://youtu.be/i5tIzI7Vrdw
Part 5" on YouTube - https://youtu.be/e1tEmaVw-ks
+91 9994220250
25-09-2015.
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது