புக் டைம் | ஆரஞ்சு முட்டாய் கதைகள் | கார்த்திக் புகழேந்தி

இந்தப் புத்தகத்தின் வாழ்த்துரையில் ஜோ டி குரூஸ் “எளிமையான கதைகள், அதுமட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது” என்று சொல்லியிருப்பார். புத்தகத்தைப் படித்து முடித்ததும் மிகச் சரியாக என் மனசிலும் அதே தான் தோன்றியது.

Image may contain: 1 person, standingதிருநெல்வேலி மண் வாசம் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கிறது.நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், நாம் சந்தித்த மனிதர்கள், நம் பால்யங்கள், எல்லாம் புத்தகம் முழுவதிலும் உலவியபடி இருக்கின்றன. சிந்துபூந்துறை, அம்பா சமுத்திரம் போன்ற கதைகள் , துவக்கத்தில் நம் உதட்டில் அரும்பும் புன்னகையைக் கதை முடியும் வரை தக்க வைக்கின்றன.

நான் ஏற்கனவே பல இடங்களில் இதே விஷயத்தைப் பேத்தியிருக்கிறேன் என்றாலும் இங்கேயும் அதையே பேத்துகிறேன். கதை என்பது ஒரு அனுபவம், அதில் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லியோ ஏதேனும் ஒரு திருகலுடனோ தான் முடிக்க வேண்டும் என்றில்லை.

இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளும் அப்படியே தான். இயல்பாய் எளிமையாய் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன படிக்கும் போது, பிரச்னை என்னவெனில் அதே மிகை இயல்புத் தன்மையுடன் நம்மைக் கடந்தும் விடுகின்றன. இயல்பும் எளிமையும் வாய்க்கப் பெற்ற அளவு அழுத்தம் வாய்க்கப் பெறவில்லை என்பது இத்தொகுப்பின் ஒரு பலவீனம்.

முதல் பத்தியில் சொன்னதைப் போல் வாழ்த்துரையில் சொல்லியிருக்கும் ஜோ டி குரூஸ் இன்னொரு விஷயமும் சொல்லியிருப்பார். ஒவ்வொரு படைப்பும் முதல் புத்தகத்திற்கானது போல் அமைய வேண்டும் என நினைக்கிறேன்” என்று. இவரது முதல் புத்தகமான வற்றாநதியை இன்னும் வாசிக்கவில்லை. அது இதைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமென்று எண்ணுகிறேன். பார்ப்போம்.

-Harish Ganapathi
June 18, 2016 · 

Image may contain: 1 person, eating, sitting and food
#recommended
தலைப்பு - ஆரஞ்சு முட்டாய் கதைகள்
வகை - சிறுகதைகள்
எழுத்தாளர் - கார்த்திக் புகழேந்தி
வெளியீடு - ஜீவா படைப்பகம்
விலை - ரூ.150


Comments

  1. சிறியதாக இருந்தாலும் சிறப்பான விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil