சென்னை 375*

1.       தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டது கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாள். அதாவது இன்றுடன் 375-வது வயதினை சென்னை நகரம் அடைந்திருக்கின்றது. அதனைக் கொண்டாடும் வகையில் சென்னை தினம் 375 கொண்டாடப்படுகின்றது.

2.       பத்திரிகையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து 2004 உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

3.       முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

4.       சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

5.    வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

6.   இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் என்னும் அந்தஸ்து சென்னை நகரத்திற்கு உள்ளது.அதுமட்டுமல்லாது லகின் 35 பெரிய மாநகரங்களுள் சென்னையும் ஒன்று.

7.    இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

   சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை.முதலாவது இடம் பிடித்த கடற்கரை தென் அமேரிக்காவிலுள்ள மியாமி கடற்கரை.

9.      *1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். 

10. *இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் அதிக அளவிளான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 

11.   சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25% மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

12.   சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ. சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன.

13.    *சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி மார்வாரி, வங்காளி, பஞ்சாபி , ஆகியவை பயனில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேச படுகிறது.

14.  *இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இந்த மொழி  சிலரால் கொச்சை மொழியாக கருதப்படுகிறது.

15.   சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.

16.    *ஆற்காடு நவாபு குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த கோடா பாக்  என அழைக்கப்பட்டது கோடா என்பது குதிரைகோடா பாக் இன்றைய  கோடம்பாக்கம்  ஆகிவிட்டது.

17.   சின்ன தறிப் பேட்டை :  சிறிய அளவிலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

18.   பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

19.   பல்லவபுரம். பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம். இதுவே இன்னாளில் பல்லாவரம்.

20.   பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். இன்றைய பூவிருந்தமல்லி. மேலும் மல்லிகாடுகள் அடர்ந்த இடம் என்பதால் பூவிருந்தமல்லி எனவழங்கப்படுகின்றது.


21.   முருகப்பெருமான் போரின் முடிவில் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர். போரூரில் அமைந்த பெரிய ஏரி புகழ்பெற்றிருந்தது அக்காலத்தில் 

22.   வள்ளி சேர் பாக்கம்:  முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள்.

23.   ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஈக்காட்டுத்தங்கல் ஆகிவிட்டது.

24.   சையதுகான் பேட்டை இன்றைக்கு சைதாப்பேட்டை

25.   கோயம்பேடு : கோ + அயம் + பேடு : அரசனின் குதிரை கட்டப்பட்ட இடம். இராமனின் அசுவ மேதா யாகம் முடிந்த உடன் இராமனின் குதிரை சுற்றி வர அனுப்பப்பட்டது. அதனை லவன் குசன் கட்டிய இடமே கோயம்பேடு.

26.   இராயபுரம் = இராயப்பர் தேவாலயம் அமைந்த இடம் ஆதலால் இராயபுரம். இராயப்பர்புரம். இவர் இயேசுவின் சீடர்களில் ஒருவர். ஆங்கிலத்தில் (PETER)

27.   ஒடிசாவில் உள்ள சில்கா உப்பங்கழிக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாக விளங்குவது பழவேற்காடு ஏரி, தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலுமாக விரிந்து கடலோரத்தை ஒட்டியே உள்ள இந்த பிரமாண்ட நீர்ப் பரப்புக்காகவும்,  பழவேற்காடு ஏரி ஒரு காலத்தில் துறைமுகமாகவே இருந்திருக்கிறது.

28.   AVADI :  Armoured Vehicles and Ammunition Depot of India  என்பதன் சுருக்கமே ஆவடி என அழைக்கப்படுகின்றது.

29.   1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.  1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.  1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது

30.   1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.  அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.

31.   1871 -முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.அப்போதைய மக்கள் தொகை 3,97,552. இன்றைய மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன்

32.   1892 - உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலங்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.

33.   1920 -முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது  முதல் அமைச்சர் சி.சுப்பராயலு.சு தந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி.

34.   1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.

35.   யானைமேல் துஞ்சிய ராஜாதித்தத்தேவன் போருக்குச் செல்லும் காலத்தில் தன்படைகளோடு முகாமிட்டிருந்தபொழுது அந்த இடத்தில் தன்படைகளுக்கு ஒரு ஏரியை வெட்டச் சொல்லி ஆணையிடுகின்றான். அந்த ஏரிக்கு தன் தந்தையின் வீரநாராயணன்  என்னும் பெயரைக்கொண்டு  “வீரநாராயணன் ஏரிஎனப் விட்டு போருக்குச் சென்ற இளவரசன் ஏரியைப்பார்க்க திரும்ப வரவே இல்லை.போரிலே வீரமரணம் அடைகின்றான். இன்றைக்கு சென்னையின் தாகத்தை தீர்க்கும் அந்த ஏரி வீராணம் ஏரி என அழைக்கப்படுகின்றது. ஏரியை வெட்டின அந்த படை சோழர்களுடையது.

36.   கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 

37.   கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

38.   சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்று. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது.


39.   இங்கிலாந்திலிருந்து ஒரு கப்பலில் மெட்ராஸுக்கு டிக்கெட் வாங்க காசில்லாமல் வந்தவர் பெயர் ..ஜே. ஹிக்கின்பாதம்ஸ். இன்றைக்கு சென்னையில் இயங்கும் இந்தியாவின் மிகப்பழமையான புத்தக்க் கடையான ஹிக்கின்பாதம்ஸை தோற்றுவித்தவர் இவரே!

40.   மதராஸில் இயங்கிய வெஸ்லியன் என்ற புத்தக்க்கடையில் நூலகராக பணியாற்றிய ஹிக்கின் பாதம்ஸ். கடுமையான நஷ்டம் காரணமாக அந்த கடை இழுத்துமூடப்பட்ட்தும் மிக்க்குறைந்த விலைக்கு அந்த கடையினை வாங்கி 1844ம் ஆண்டில் இன்றைய ஹிக்கின்பாதம்ஸ் புத்தக்க் கடையை தோற்றுவித்திருக்கிறார். இன்றைக்கு சென்னையின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று இந்த புத்தகாலயம்.


புகைப்படங்கள் : http://wiki.pkp.in/old-madras-chennai-photos

Chennai%20Ambulances-1940.jpg
Chennai Ambulances-1940
Bank%20Of%20Madras-1935.gif
Bank Of Madras-1935

Chennai%20Car%20Show%20Room-1913.gif
Chennai Car Show Room-1913



Chennai%20Central%20Railway%20Station-1920.jpg
Chennai Central Railway Station-1920
Chennai%20Central%20Railway%20Station-1925.jpg
Chennai Central Railway Station-1925
Chennai%20Central%20Train%20Station.jpg
Chennai Central Train Station
Chennai%20CENTRAL-RAILWAY%20Station.jpg
Chennai CENTRAL-RAILWAY Statio
Chennai%20Chepauk%20Cricket-1891.jpg
Chennai Chepauk Cricket-1891
Chennai%20City%20Map-1909.jpg
Chennai City Map-1909
Chennai%20Egmore%20Railway%20Station.jpg
Chennai Egmore Railway Station
Chennai%20Egmore%20Station-1920.jpg
Chennai Egmore Station-1920
Chennai%20Egmore%20Waiting%20room-1920.jpg
Chennai Egmore Waiting room-1920
Chennai%20Esplanade-1920.jpg
Chennai Esplanade-1920
Chennai%20ESPLANADE.jpg
Chennai ESPLANADE
Chennai%20First%20Line%20Beach-1915.jpg
Chennai First Line Beach-1915
Chennai%20Ford%20Show%20Room-1917.gif
Chennai Ford Show Room-1917
Chennai%20Fort%20ST%20George%201700s.jpg
Chennai Fort ST George 1700s
Chennai%20HARBOUR-1891.jpg
Chennai HARBOUR-1891
Chennai%20Library-1913.gif
Chennai Library-1913
Chennai%20Marina%20beach%20.jpg
Chennai Marina beach
Chennai%20Marina%20beach-1890.jpg
Chennai Marina beach-1890
Chennai%20Market%20(Kothaval%20Chawadi)-%201939.jpg
Chennai Market (Kothaval Chawadi)- 1939
Chennai%20Moubray%20Road-1885.jpg
Chennai Moubray Road-1885
Chennai%20MUNROE%20STATUE.jpg
Chennai MUNROE STATUE
Chennai%20Mylapore-1906.jpg
Chennai Mylapore-1906
Chennai%20Mylapore-1939.jpg
Chennai Mylapore-1939
Chennai%20Napier%20Bridge-1895.jpg
Chennai Napier Bridge-1895
Chennai%20Old%20Esplanade.jpg
Chennai Old Esplanade
Chennai%20Old%20High%20Court.jpg
Chennai Old High Court
Chennai%20Old%20Mosque.jpg
Chennai Old Mosque
Chennai%20Old%20Mount%20Road%20Anna%20salai-1905.jpg
Chennai Old Mount Road Anna salai-1905
Chennai%20Old%20Mount%20Road%20Anna%20salai.jpg
Chennai Old Mount Road Anna salai
Chennai%20PARADE-GROUND.jpg
Chennai PARADE-GROUND
Chennai%20Parrys%20Corner-1890.jpg
Chennai Parrys Corner-1890
Chennai%20PRESIDENCY-COLLEGE.jpg
Chennai PRESIDENCY-COLLEGE
Chennai%20Pycrofts%20Road-1890.jpg
Chennai Pycrofts Road-1890
Chennai%20RIPPON-BUILDING.jpg
Chennai RIPPON-BUILDING
Chennai%20SPENCERS.jpg
Chennai SPENCERS
FIRST%20EVER%20CHENNAI%20MASTER%20PLAN.jpg
FIRST EVER CHENNAI MASTER PLAN
Madras%20high%20courts_1895.png
Madras high courts_1895
Madras%20view%20from%20the%20harbor%201895.png
Madras view from the harbor 1895
Old%20Chennai%20SENATE-HOUSE.jpg
Old Chennai SENATE-HOUSE
Situationsplan_von_Madras_1888.jpg
Situationsplan_von_Madras_1888
SR%20Headquarters-1922.jpg
SR Headquarters-1922
St.%20Mary's%20Church%2c%20Madras%20.jpg


தகவல்கள்:  (இணையத் திரட்டு - பட்டறிவு ) 

நன்றி 

-கார்த்திக். புகழேந்தி. 


Comments

  1. Well Compiled. Many Thanks for Sharing.

    Sivakumar Arumugam (FB)

    ReplyDelete
  2. சூப்பர் info... அட்டகாசமான தொகுப்பு... சென்னையை பற்றிய வழி வழி கதைகள், அதுவும் அந்த அப்பாட்டாக்கர்ங்குற வார்த்தை எங்க இருந்து வந்துச்சுன்னும் கொஞ்சம் சொல்லுங்க... தெரிஞ்சிக்குறேன்

    ReplyDelete
    Replies
    1. சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.

      Delete
  3. vazthukkal anna.
    netrutaan intha puthiya blog paarthen.

    thodarnthu ini ningal eluthangal
    thodarkiren
    nandri.




    ReplyDelete
  4. அருமையான கட்டுரை - சென்னை நகரத்தின் சிறப்புகளை அனைவரும் அறிய செய்தீர்கள்- வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil