Coffee To Copy
கோவை மண்டலம் முழுக்க கவனித்ததில் அங்காங்கு ஆவின் சார்பில் நேரடி தேனீர் விடுதிகள் எழுப்பி இருக்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு டீ, ஐந்து ரூபாய்க்கு வடை வகைகள், பஜ்ஜி மாதிரியான மேற்படி ‘கடிகளுக்கு’ ஏழு ரூபாய் என சிக்கன விலை. கூட்டம் பரபரவென்று நிற்கிறது. நிறைய பழம்பெரும் பாய்லர் டீக்கடைக்காரர்களுக்கு அடிபிடித்திருக்கும் வியாபாரத்தில்.
கண்ணாடிக்கூண்டுக்குள் பலகாரங்கள், கைகழுவ வாஸ் பேஷின், முழுக்க கேமிரா கண்காணிப்பு. இளவயது பையன்கள் கல்லா நிர்வாகம் என்று தூள்கிளப்புகிறது ஆவின் தேனீர்விடுதி. இந்த விடுதியில் என்போன்ற காபி விரும்பிகளுக்கும் சிக்கன விலையில் சிக்கிரி காபி கிடைக்கச் செய்தால் புண்ணியமாகப் போகும்.
காபி என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த அரசு தேனீர் விடுதிபோல அல்லது மதுமானக்கடைகள் போலாவது (!) வீதிக்கு ஒரு குறைச்சலான விலையில் நகலகம் (XEROX) தொடங்குங்களேன்.
[ டி.என்.பி.எல் காப்பியர் பேப்பர்களுக்கான வர்த்தக கமிசனை வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் பெரும் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளலாம்]
காப்பிக்கடைக்காரர்களான நகலகர்கள் அடிக்கும் கொள்ளையை மேலோட்டமாகப் பார்த்தாலே அத்தனை எரிச்சல் வரும். விபரமும் தெரிந்திருந்தால் கொலைவெறியே மிஞ்சும்.
ஒரு பக்கம் நகல் எடுக்க ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை அதிகபட்சமாக (மின்சாரம் இல்லாத நேரத்தில் 3ரூபாய் வரைக்கும் கூட ) தற்போது வாங்குகிறார்கள். பேப்பர் விலை அதிகம் என்று காரணம் சொல்கிறவர்கள் இரண்டு பக்கத்துமாக நகல் எடுத்தால் அதே இரண்டு நகலுக்கான தொகை கேட்பது நகைமுரணான வேடிக்கை. இவர்களில் பக்கத்துக்கு ஒரு ரூபாய் வாங்குகிறவர்கள் ஓரளவு மனசாட்சி உள்ள வாழும் தெய்வங்கள்.
ப்ரிண்ட் அவுட் என்று நீங்கள் போய் நின்றால் சிக்கினான் சேகர் கதைதான். ஒரு பிரதிக்கு ஐந்து ரூபாய் கூட கேட்கும் நல்லுள்ளங்கள் நாட்டில் உண்டு. எனக்கு ஒன்று புரியவில்லை. ஒரு நகல் எடுக்க மனித உழைப்பும் இயந்திரத் தேய்மானமும் (Scan) நிச்சயம் தேவைப்படும்.
ப்ரிண்ட் அவுட்கள் எடுக்க அதிகபட்சமாக ஜெராக்ஸ் மெஷின்களே பயன்படுத்தப்படுகின்றன. லேசர்ஜெட் ப்ரிண்டர் பயன்படுத்துபவர்கள் நூற்றுக்கு பத்துபேர் கணக்கில் தான். தற்போது கேனான் உள்ளிட்ட
அனைத்து பழைய இத்துப்போன ஜெராக்ஸ் மெஷின்களில் கூட எக்ஸ்டர்னல் போர்டு வைத்துக்கொள்ள முடியும்.
புதிய மெஷின்களில் இன்பில்டாகவே கணினியுடன் இணைக்கப்பட்டு நேரடியாக ப்ரிண்ட் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் இந்த அறியாமையினை பயன்படுத்தி ஜெராக்ஸுக்கு ஒரு விலை. ப்ரிண்ட் அவுட்டுக்கு ஒரு விலை...
ஸ்கேன் செய்து நூறு நகல் எடுப்பதற்கும், ஒரு க்ளிக்கில் நூறு ப்ரிண்டுகளைச் சொடுக்குவதற்கும் இடையே மனித உழைப்பும், மெஷின் தேய்மானமும், மின்சார செலவும் கூட குறைகிறது. அப்படி இருக்க நகலுக்கு ரெண்டு ரூபாயும், ப்ரிண்ட் அவுட்டுக்கு மூன்று அல்லது அதற்கும் மேல் வசூலிப்பது என்னமாதிரியான ஃப்ராடுத்தனம்.
இந்த விஷயத்தில் ஒவ்வொருத்தருமே சின்னச்சின்ன அளவில் ஏமாற்றப்பட்டாலும் அது ஒரு பெருந்தொகை இல்லை என்பதால் விட்டுவிடுகிறோம். அஞ்சுபைசா ஏமாத்தினா தப்பா... தப்பில்லீங்க.. அஞ்சு பேர்கிட்ட அஞ்சு அஞ்சு பைசா ஏமாத்தினா? தப்பு மாதிரிதாங்க தெரியுது.....
-கார்த்திக் புகழேந்தி
17-09-2015.
கண்ணாடிக்கூண்டுக்குள் பலகாரங்கள், கைகழுவ வாஸ் பேஷின், முழுக்க கேமிரா கண்காணிப்பு. இளவயது பையன்கள் கல்லா நிர்வாகம் என்று தூள்கிளப்புகிறது ஆவின் தேனீர்விடுதி. இந்த விடுதியில் என்போன்ற காபி விரும்பிகளுக்கும் சிக்கன விலையில் சிக்கிரி காபி கிடைக்கச் செய்தால் புண்ணியமாகப் போகும்.
காபி என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த அரசு தேனீர் விடுதிபோல அல்லது மதுமானக்கடைகள் போலாவது (!) வீதிக்கு ஒரு குறைச்சலான விலையில் நகலகம் (XEROX) தொடங்குங்களேன்.
[ டி.என்.பி.எல் காப்பியர் பேப்பர்களுக்கான வர்த்தக கமிசனை வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் பெரும் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளலாம்]
காப்பிக்கடைக்காரர்களான நகலகர்கள் அடிக்கும் கொள்ளையை மேலோட்டமாகப் பார்த்தாலே அத்தனை எரிச்சல் வரும். விபரமும் தெரிந்திருந்தால் கொலைவெறியே மிஞ்சும்.
ஒரு பக்கம் நகல் எடுக்க ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை அதிகபட்சமாக (மின்சாரம் இல்லாத நேரத்தில் 3ரூபாய் வரைக்கும் கூட ) தற்போது வாங்குகிறார்கள். பேப்பர் விலை அதிகம் என்று காரணம் சொல்கிறவர்கள் இரண்டு பக்கத்துமாக நகல் எடுத்தால் அதே இரண்டு நகலுக்கான தொகை கேட்பது நகைமுரணான வேடிக்கை. இவர்களில் பக்கத்துக்கு ஒரு ரூபாய் வாங்குகிறவர்கள் ஓரளவு மனசாட்சி உள்ள வாழும் தெய்வங்கள்.
ப்ரிண்ட் அவுட் என்று நீங்கள் போய் நின்றால் சிக்கினான் சேகர் கதைதான். ஒரு பிரதிக்கு ஐந்து ரூபாய் கூட கேட்கும் நல்லுள்ளங்கள் நாட்டில் உண்டு. எனக்கு ஒன்று புரியவில்லை. ஒரு நகல் எடுக்க மனித உழைப்பும் இயந்திரத் தேய்மானமும் (Scan) நிச்சயம் தேவைப்படும்.
ப்ரிண்ட் அவுட்கள் எடுக்க அதிகபட்சமாக ஜெராக்ஸ் மெஷின்களே பயன்படுத்தப்படுகின்றன. லேசர்ஜெட் ப்ரிண்டர் பயன்படுத்துபவர்கள் நூற்றுக்கு பத்துபேர் கணக்கில் தான். தற்போது கேனான் உள்ளிட்ட
அனைத்து பழைய இத்துப்போன ஜெராக்ஸ் மெஷின்களில் கூட எக்ஸ்டர்னல் போர்டு வைத்துக்கொள்ள முடியும்.
புதிய மெஷின்களில் இன்பில்டாகவே கணினியுடன் இணைக்கப்பட்டு நேரடியாக ப்ரிண்ட் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் இந்த அறியாமையினை பயன்படுத்தி ஜெராக்ஸுக்கு ஒரு விலை. ப்ரிண்ட் அவுட்டுக்கு ஒரு விலை...
ஸ்கேன் செய்து நூறு நகல் எடுப்பதற்கும், ஒரு க்ளிக்கில் நூறு ப்ரிண்டுகளைச் சொடுக்குவதற்கும் இடையே மனித உழைப்பும், மெஷின் தேய்மானமும், மின்சார செலவும் கூட குறைகிறது. அப்படி இருக்க நகலுக்கு ரெண்டு ரூபாயும், ப்ரிண்ட் அவுட்டுக்கு மூன்று அல்லது அதற்கும் மேல் வசூலிப்பது என்னமாதிரியான ஃப்ராடுத்தனம்.
இந்த விஷயத்தில் ஒவ்வொருத்தருமே சின்னச்சின்ன அளவில் ஏமாற்றப்பட்டாலும் அது ஒரு பெருந்தொகை இல்லை என்பதால் விட்டுவிடுகிறோம். அஞ்சுபைசா ஏமாத்தினா தப்பா... தப்பில்லீங்க.. அஞ்சு பேர்கிட்ட அஞ்சு அஞ்சு பைசா ஏமாத்தினா? தப்பு மாதிரிதாங்க தெரியுது.....
-கார்த்திக் புகழேந்தி
17-09-2015.
சில இடங்களில் ஒரு பக்கம் ப்ரிண்ட் அவுட் எடுக்க 10 ரூபாய் கூட கேட்கிறார்கள்.....
ReplyDeleteபுகழ் 3 ரூபா ப்ரின்ட் அவுட் பரவால்ல சில இடங்கள்ல 10 ரூபா கேக்கறாங்கப்பா.....அந்நியன் கணக்கு பேட்டா கணக்குனு வைச்சுக்கலாமா...
ReplyDelete
ReplyDeleteநல்ல வழிகாட்டல்
http://www.ypvnpubs.com/