கெளதம புத்தனும் அன்னப்பறவை லெக்பீசும்..

இந்த உலகம் எப்போதுமே முந்திக்கொண்டு புலம்புபவனுக்காக பால்பேதமில்லாமல் படைப்புகளையும், தத்துவங்களையும்,
போட்டோஷாப் இமேஜ் கொயட்களையும்  தந்துவிட்டிருக்கின்றது.

நேரே போய் நறுக்கென்று ஏண்டா எருமை ஒழுங்கா பேசமாட்றேன்னு நண்பனிடம் கேட்டு சண்டை பிடிக்கும் திராணி நமக்கிருந்தாலும், அப்படியெல்லாம் இல்லையே மச்சி வா ரெண்டு டீ சொல்லு என்று பாக்கெட்டிலிருக்கும் பதினாறு ரூபாய்க்கு உலைவைத்துவிடுவானோ என்ற ஒரே காரணத்துக்காக நாம் அடக்கி வாசித்திருப்போம்.

ஆனால் அந்த தேவதத்தனோ அன்னப்பறவையின் லெக்பீஸை மென்று சுமைத்துவிட்டு அடுத்த நாள் புத்தனாகி பேஸ்புக்கில் நல்ல நல்ல பஞ்ச் வசனங்களை எழுதுவான். நமக்கு ஒரு எளவும் புரியாதென்றாலும்... என்னவோ சொல்லவாரேனே இந்த யுக கேந்திர பதாதைகளுக்கென்று நெருங்கிப் பார்த்தால் கழிசடை நம்மைத்தான் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கும்.

அடேய் உன்னைய என் சொந்த சித்தப்புவ விட மரியாதையா நடத்திட்டு இருந்தேனடா நீயா என்னைத் திட்டுற. சரி இவ்வளவு நாள் என்கூட பழகி இருக்கியே எனக்கு இங்லீஷ் தெரியாதுன்னு கூடவா உனக்குத் தெரியாது என்று கேட்கத் தோன்று. சபை நாகரீகம் என்னும் சப்பைக்கட்டுக் கட்டி நாம் அமைதியாவோம்.

இரண்டாம் நாள் அவன் கர்ணனாகவும், கலிங்கத்தில் காலை பேக்வேர்ட் எடுத்துவைத்த அசோகனாகவும் புதுப்புது பதிவுகளாக ஷேர் செய்வான் எங்கிருந்து  இதெல்லாம் கிடைக்கிறது என்று பார்த்தால் எருமை தான் நேரடியாக எழுதினால் கட்டென்ரைட்டாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தனக்கு நெருங்கிய டோழி அல்லது டோழனைவிட்டு போஸ்ட் செய்யவைத்து அதை ஷேர் செய்து அருணாச்சலம் படத்தில் தலைவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் காலடியில் தங்கக்காப்பை கழட்டிவைத்த தோரணையில் சீன் போடு..  எலேய் நீ போட்ருக்க சட்ட என்னுதுலேய்..

அப்படியே அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு இரண்டாம் நாள் சாமம் முடிந்ததும் இடி இடியென முதுகில் குத்திவிட்டான், மூக்குமேலே மொத்திவிட்டான் என்றும் நான் அவனை உதறிவிட்டேன் இனிப் போறபாதை சிங்கப்பாதை என்று காயினைச் சுண்டிக்கொண்டிருப்பான். காயினுக்குச் சொந்தக்காரன் தான் அந்த போஸ்டுக்கு லைக் போட்ட ஒரே அப்பாவி.

கடைசியில் எலி மலையைக் குடைந்து மசால்வடைக்கு அலைந்த கதை விசாரித்தால் மூதேவி நாம் சொன்ன ஒரு உப்புச்சப்பில்லாத மேட்டரை ஊதிப் பெரிதாக்கி யாருக்குச் சொல்லக்கூடாதோ அவனிடமே போய் வாங்கு ஊதி இரண்டுபக்கமும் தவிலடி வாங்கி இருக்கும் குட்டு வெளிப்படும்.

ஆனா ஒன்னு மச்சான் நீ கௌதம புத்தன் போலவும், கவரிமான் வம்சம் போலவும் போட சீனைக் கூட தாங்கிக்குவேண்டா.. அத்த இங்க்லீஷ்ல ஸ்டேட்டஸ் போட்டதை மட்டும் தாங்கிக்கவே மாட்டேண்டா...!



Comments

  1. இதெல்லாம் பேஸ்புக் (மட்டுமே) போராளி வகையறா. என்ன செய்ய, சில நேரம் இந்த உறவுகள நாமளே தலைல தூக்கி வச்சு கொண்டாடுறதும் உண்டு.... அட, விடு மக்கா, இன்னொரு தோள் கிடைக்காமலா போகும்னு போய்ட்டே இருக்க வேண்டியது தான்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்