Posts

வேட்டையன்கள்

Image
      சிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன். சமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம். ஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட...

‘கதா மாலிகா’

Image
              ந ரசய்யா குறித்து நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம் விசாகப்பட்டினத்தில் கப்பல் துறையில் வேலையிலிருக்கும் நண்பனோடு. அவரது புத்தகங்கள் மீது தீராத மோகம் இருந்தது எனக்குள்ளாக. அதேப்போல இன்னும் சில பழைய புத்தகங்களையும் ஏற்கனவே    வாசிக்கத் திரட்டிக் கொண்டிருந்தேன். ரா.பி சேதுபிள்ளை எழுதிய தமிழகம்; ஊரும் பேரும், தமிழர் வீரம், கி.வா.ஜ தொகுத்த 25ஆயிரம் சொலவடைகள்,   கே.கே பிள்ளையின் தென் இந்திய வரலாறு, பேராசிரியர் ராம வேலாயுதம் எழுதிய தென் கிழக்கு ஆசியா,    முனைவர் ந.க. மங்கள முருகேசன் எழுதிய முகலாயர் வரலாறு இப்படியாக சிலவை. நேற்றைக்கு எழும்பூர் தமிழ்ச்சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்குப் போயிருந்தோம். ‘கல்வெட்டு’ காலாண்டிதழின் நூறாவது சிறப்புப் பிரதியை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் பணியாற்றும் நண்பர் அன்பளித்தார். கூடவே, சென்னை, நெல்லை, குமரி, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் குறித்த கல்வெட்டு பதிப்பு நூல்களையும் வாங்க உதவி செய்தார். வந்ததும் முதல்வேலையாக சென்னைக் கல...

வாசிக்கும் பிம்பங்கள்

Image
         ஏழை எளியோர் வாழ்வைச் சித்தரிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டு கி.ரா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் நாவலின் ஒவ்வொரு நிலைக்களன்களையும் குறிப்பிட்டு, குறுங்கதை ஒன்று சொல்லி காலக்கட்டத்தை அறிமுகப்படுத்தி அதுபற்றி எழுதினவர்களையும் அந்தந்த நூல்களையும் மேற்கோள் காட்டியிருந்தார். அப்படி கி.ரா குறிப்பிட்ட வரிசையில் தேயிலைத் தோட்டங்களின் வாழ்வைச் சொல்லும் செல்வராஜ் எழுதிய ‘தேனீர்’, கோகிலம் சுப்பையா எழுதின ‘தூரத்துப் பச்சை’, கொங்கு நாட்டு கிராமங்களை நிலைக்களமாகக் கொண்டு ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய ‘அறுவடை’, ‘பூவும் பிஞ்சும்’ மற்றும் ‘மாயத்தாகம்’ கைத்தறி நெசவாளர்களின் வாழ்வைச் சித்தரிக்கும்     எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘வேள்வித் தீ’, தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’ தென்மாவட்டங்களில் பனைத் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையச் சரடாகக் கொண்டு ஹெப்ஸிபா ஜேசுதாசன் எழுதிய ‘புத்தம் வீடு’, ஆற்றுமணலை அள்ளிக்குவித்து வயிறுவளர்த்த கொள்ளையர்களைப் பற்றி ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’, வெற்றிலைக் கொடிக்கால் வாழ்வை எழுதின ஆ. பழநியப்பனுடைய ‘கா...

மரக்கா - முத்துராசா குமார்

Image
கொஞ்ச மாதங்களுக்கு முன்பாக தமிழ் மொழிக்கூடம் Srinivas Parthasarathy அவர்கள், சென்னை ரோஜா முத்தையா நூலகத்திற்கு மேற்காக களிகுன்றம் பகுதியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு வளாகத்திலே  அமைந்திருந்த தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகத்தையும் ஒருபார்வை பார்க்கலாமென்று உள்ளே நுழைந்திருந்தேன். அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒரு நல்ல தமிழ் காரியம் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டே உள்நுழைந்தாலும், அருங்காட்சியகத்தின் உள்ளே ரம்பர் மரங்களைக் கடைந்து, மெஷின் கட்டிங்கில் செய்த சிலைகளையும், மெழுகுக் களிமண் பொம்மைகளையும், கேரள பாணியிலான வடிவச் சிற்பங்களையும் காட்டி தமிழர் பண்பாட்டுக் கலைப் பொருட்கள் என்று ஏமாற்றியிருந்தார்கள். சரி போகிறது என்று சுற்றிவந்ததில், ஓர் அறையில் நான்கு பழைய மொடாக்கள், காவி பூசின நெற்குதிர்கள், கொஞ்சம் கல் உரல், உலக்கை, பழைய நெல் அளவை மரக்கால்கள், சொளவு என்று கொஞ்சம் தமிழ் நிலத்துக்குத் தொடர்புள்ள பொருட்களும் இருந்தன. கட்டடத்திற்குள்ளே ஒரு குறும் திரையரங்கம் அமைத்து தமிழர் மரு...

ஆன்மாவை விலைபேசாத எழுத்தாளன் -தொ.மு.சி ரகுநாதன்

Image
          த மிழ் சிறுகதை இலக்கியத்தில் மாபெரும் எதார்த்தவாதியான புதுமைப்பித்தனால், அற்புதமான சிறுகதையாளரெனக் கொண்டாடப் பட்டவர் தொ.மு.சி ரகுநாதன். திக்கெல்லாம் தமிழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து, ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர் தொ.மு.சி., படித்த, பண்பட்ட, கவித்துவம் நிறைந்த ஓரளவு வசதியான குடும்பம் அவருடையது.  இன்னும் சொல்லப் போனால் மூன்று தலைமுறைகளாக இலக்கியப் பரிச்சயம் கொண்ட குடும்பம் தொ.மு.சியுடையது. தாத்தா சிதம்பரத் தொண்டைமான் புகழ் பெற்ற அறிஞர். அவர் பாடிய நெல்லைப்பள்ளு, ஸ்ரீரங்க நாதர் அம்மானை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர். ‘குமிழ்த்த முலையைக் காட்டி நின்று குறௌப் பொழுதையும் போக்குகிறீர் குரவை ஒலித்து முடியை அவிழ்த்துக் குனிந்து நடுங்கள் பள்ளியரே’                                        ...

காற்றில் வரும் ஒரு சிறு இசை

Image
“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்று மூதுரையில் அவ்வை அவள் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். திடீரென்று நண்பன் கேட்டான் அதெப்படி சங்கு சுட்டாலும் வெள்ளையாக இருக்கும் என்று. கொஞ்சம் புரிகிறமாதிரி பேசித்தீர்த்துக்கொண்டோம் என்று வையுங்களேன். சங்கு சுடுகிற அனுபவம் ஒன்று எனக்கு இருந்தது அதைத்தான் இங்கே எழுதுகிறேன். நல்ல பளபளாவென்று வெள்ளையாக இருக்கும் சங்கை ஏறக்குறைய நம்மில் நிறையபேருக்குத் தெரிந்திருக்கும். அதில்லாமல் முக்குவர்கள் ஆழியில் குளித்தெடுத்த சங்கின் பூர்வாங்க நிலை எப்படி இருக்கும் என்பதை நிறையபேர் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. நல்ல பாசிபிடித்து அழுகி இறுகிப்போன பெரிய தேங்காய் கனத்தில் ஒரு பருங்கல்லை தூக்கிக்கொண்டுவந்து, இதுதான் சங்கு என்றான் செந்திலதிபன் என்கிற என் பள்ளிக்கூடக் கூட்டுக்காரன். எனக்கு நம்பிக்கையே இல்லை. சங்கின் வடிவம் கொஞ்சம்கூட அந்தக் கல்லுக்குப் பொருந்தவில்லை. “இதுக்குள்ள தாம்ல சங்கு இருக்கும்” என்று அடித்துச் சொன்னான். பாசி வாடையில் சொரசொரவென்று பார்க்கவே அருவெறுப்பாக இருந்ததைக் கையில் வாங்கிப் பா...

வெள்ளிக்கிழமை - கோடம்பாக்கம் | பாம்புச்சட்டை

Image
“ கோ டம்பாக்கத்துக் காரனுக்குத் தான் தம்பி தெரியும் வெள்ளிக்கிழமையின் வேல்யூ” என்பார் கணேசன் அண்ணன். அக்மார்க் ராஜபாளையத்துக்காரர். 2014ல் வற்றாநதியில் எழுதின ‘லைட்ஸ் ஆஃப்’ கதையைப் படித்துவிட்டு, “என் வாழ்க்கைடா தம்பி இது. உனக்கு என்னம்மோ செய்யணும்ன்னு தோணுது” என்று ஐநூறு ரூபாய் தாளை என் சட்டைப் பையில் திணித்துவிட்டுப் போனவர். கணேசன் அண்ணனுக்கு சினிமாதான் வாழ்க்கை. அதில் பெரிதாகச் சம்பாதித்துக் கொண்டதில்லை. ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு வீடுகிடைத்த சாலிகிராமத்தில் 90களின் இறுதியில் வந்து செட்டில் ஆகி, முந்நூற்றுச் சொச்சம் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். ஏழோ எட்டிலோ டைட்டில்கார்டில் பேர் வந்திருக்கலாம். கனவுத் தொழிற்சாலையின் வாசலை ஏக இறைவனாக நினைத்துக்கொண்டு, சாஸ்ட்ராங்கமாக நான் விழ நினைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சினிமா எனும் கரையற்ற வெள்ளத்துக்குள் விழுந்துவிடாமல், என் சட்டையைப் பிடித்து இழுத்து வேறு கிளைக்குள் திருப்பி விட்ட வகைக்கு கணேசன் அண்ணன் என் வாழ்க்கைத் தடத்தில் முக்கியமான மனிதர். அவருக்கு கணேசன் என்கிற பெயரே ஒரு அடையாளச் சொல் அவ்வளவுதான். “சொல்லு...