செய்யாத குற்றங்கள்...

அய்யைய்யோ...கணக்கு....


பள்ளிக்கூட காலத்திலும் சரி... பணிபுரியும் காலத்திலும் சரி  இலக்கியத்தில் ஆர்வமுள்ள பெரும்பாலானோரைப் போல எனக்கும் கணிதம் என்றால் ஆகவே ஆகாது. ஆனால் இன்னைக்கு கணக்கு பதிவேடுகளுக்கு மத்தியில் தான் ஜீவனம் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது வேறு கதை.

பள்ளிப்பருவத்தில் மற்ற பாடங்களை சுமாராகவும் தமிழ்ப்பாடத்தை விருப்பத்துடனும் படித்து விடும் எனக்கு  கணிதத்துடன் எப்போதும் ஜல்லிக்கட்டுதான்.

அது ஒன்பதாவது வகுப்பு .... லாஸ்டுக்கும் முன்னாடிக்கும் இடைப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு... கணிதப்பாட வேளையில்  பூவாத்தலையா விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் ஷேக் தாவூதும்...

அப்போது நங்...என்று குறி தவறாது டஸ்டர் கட்டை ஷேக்கின் மண்டையை பதம் பார்த்தது... எங்க வாத்தியை எல்லாம் ஒலிம்பிக்ஸ்க்கு அனுப்பி இருக்கலாம்! ககன் நரங்கை எல்லாம் தூக்கி சாப்பிட்ருவார். 

 'கணிதத்தில் மட்டும்தான் உங்கள் ஜீரோ மதிப்பெண் வாங்க முடியாது வாழ்க்கையே கணக்குத்தான் என்றார்.. ஆனால் அதை ஒரு சாதனையாக செய்து அடிக்கடி அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் அவரது முதல் தர சிஷ்யப்பிள்ளையான என்னை அவர்... இவனை அடிச்சும் பார்த்தாச்சு... அழவைச்சும் பார்த்தாச்சு... உன்னையெல்லாம் என்னதாண்டாசெய்ய என்பார்,

 நீங்க நினைக்குறதெல்லாம் நடக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ் ,,,,

. ஜீரோவைக்கண்டு பிடித்தது இந்தியர் என்று வரலாற்றுப்பாடவேளையில் சொல்லிக்கொடுக்கும் போது  ஏனோ எனக்கு சந்தோஷமாக இல்லை...

மனித உடல்  பின்புறம் சதைப்பற்றுடன் படைக்கப்பட்டதே கணக்கு வாத்தியாரின் பிரம்பு விளையாட வேண்டும் என்பதாலோ என எண்ணிக்கொள்ளும் அளவுக்கு  தேவராஜ் வாத்தியாரின் பிரம்பு  என் மேல் விளையாண்டிருக்கிறது.

 கணிதமே உனக்கு என் மேல் வை திஸ் கொலவெறி.!


படிப்படியாக ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கணிதத்தில் என்னவோ ஏதோ மார்க் வாங்கும் மார்க் ஜூக்கர் பெர்க் ஆகிய நான் அதற்கு முன் கணிதம் மட்டுமல்லாது எல்லாப்பாடத்திலும் கில்லி.

இந்த வருஷத்தோட இந்த ஆளுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடனும் மச்சான் இல்ல... நமக்கு சங்கு ஊதாம விடமாட்டான் என உள்ளுக்குள் பொறுமிக்கொண்ட ர.ர, க்கள் கூட இருந்தார்கள்.

அதான் ரத்தத்தின் ரத்தங்கள்!

விடுவாரா...  தேவராஜும் அவர் பங்குக்கு எனக்காக தன் எனர்ஜிகளைச் செலவிட்டு என்னை வீங்க வைத்துப்பார்த்தார்.

ஆனால் ரிசல்ட் என்னவோ வழக்கம் போலத்தான்!  வராத படிப்பை வா வான்னா எப்படி வரும்.  இனி இவரோடு குடும்பம் நடத்த முடியாது என்று அழுது புரண்டு ஒன்பதாம் வகுப்பு பாஸாகியாச்சு...

பத்தாம் வகுப்பில் புது வாத்தியார்... ஜெய் ஹோ....ன்னு ஆடாத குறைதான்,.... பாடம் நல்லாப்படிச்சு கிழிக்கப்போறதில்லை ஆனா ஃப்ரெஷ்ஷா இன்னோரு ஆள்கிட்டதான் வாங்கி கட்டிக்கப்போறோம் என்கின்ற நப்பாஸை....

ஆனால் நாளே நாளில் நிலைமை தலைகீழ். மீண்டும் தேவராஜ்... ஆனால் இந்த முறை கணிதம் அல்ல ஆங்கிலம்! எடுக்க... வாட்-என்ன, வென் – எப்போது நேர்- எங்கே திஸ்- இது இப்படி   “கனவுப்பிரியன்” போல நானும் இருபது வார்த்தைகளை தெரிந்து வைத்து புரிந்து ஆங்கிலேயரை 40 மார்க்குக்குள் வெள்ளையனே ஒழிந்து போ! என விரட்டி விடுவேன்! அதனால் தப்பிப்பிழைத்தேனடா தர்மேந்திரா... என அகமகிழ்ந்தேன்.,.

கணக்கில் காலாண்டுத்தேர்வில்  17 மார்க்கு  நூற்றுக்கு.. தமிழில் 96.  ஆங்கிலம் இரண்டாம் தாள் அடிவாங்காத அளவில் சுதந்திர காற்றை சுவாசித்தாயிற்று. அடுத்து என்ன... லீவ் தான்!

ஆனால் லீவ் முடிந்து வரும் போது ஒரு மாபெரும் “ஏஸ்ஸே”-வை மனனம் செய்துட்டு வரச்சொல்லி இருந்தார். தேவ்ராஜ்

நல்லகாலத்திலே எக்ஸாமுக்கு ஏழு நிமிஷம் முன்னாடிதான்  “என்னாது இன்னைக்கு இங்லீஷ் செகண்ட் பேப்பரா?” என அப்பாவியாய் கேட்ககும் நாம் லீவில் படிச்சு அப்படியே பில்கேட்ஸ் கம்பேனிக்கு வேலைக்கு அப்ளிகேஷன் பில்லப் பண்ணிடப்போறோம்!
    

குதூகலம் ஒன்றாய் இருக்க குடுமி வைத்த மாடிவீட்டு மாமா எனக்கு எதிராய் செய்த சதி வேறாய் இருந்தது...

“லீவில் பசங்களுக்கெல்லாம் மாமி ட்யூஷன் எடுக்குறா! நம்ம கார்த்திக்கும் வேணும்ன்னா சேர்த்து எடுத்துண்டு போட்டுமே..ஃபீஸெல்லாம் வேணாம். என்று அம்மாவிடம் ஆப்படித்தார்.

நாராயணா கலி முத்திடுச்சுடா! என்று கலங்கிக்கொண்டே கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்காமல் கீழ்வீட்டுக்கும் மேல்வீட்டுக்கும் ஏறி ஏறி நடந்து ட்யூஷன் போனேன்,,, அவ்வப்போது மளிகைக்கடைக்கும்...

ஃபீஸ் வேணாம் என்று சொன்னதன் அர்த்தம் புரிகிறது.

படம் முடிந்தும் டிரைலர் முடியாத கதையாக... லீவ் விட்டும் இங்க்லீஷும் கணக்கும் என்னை துவைத்து காயப்போட்டு உஜாலாவில் முக்கியது...

நீண்ண்ண்ண்ண்ட..... எஸ்ஸே-வை படித்தே ஆகவேண்டிய கட்டாயம்... ”இந்தியன் அகாடமி இஸ் அவர் அகாடமி” எல்லாம் அங்கே வேலை செய்யவில்லை ... மாமிக்கு பாம்பு காது.

அப்போதெல்லாம் கூட நினைப்பது உண்டு தேவராஜ் தான் காசு கொடுத்து மாமியிடம் கோர்த்துவிட்டு நம்மை பலி வாங்குகிறாரோ என்று...

அசப்பில் அவர் அரவிந்தசாமி போல இருந்தாலும் என் மனசு அவரை மன்சூரலிகானாகத்தான் பார்த்தது என்பதை வைத்து புரிந்துகொள்ளவும்., என் வெறுப்பை

பள்ளிக்கூடம் திறந்து மீண்டும் யூனிஃபார்மில் ரிவைவ் கஞ்சிபவுடர் விரைப்புடன் இருந்தது,,, மீண்டும் தேவராஜ்..

மற்ற பீரியடெல்லாம் வக்கனையாக கடந்து போக அவருக்கு செலக்டீவ் அம்னீசியா வியாதி வர என எல்லாரும் ”வைணவகிறிஸ்துநபியை” வேண்டிக்கொண்டிருந்தார்கள் வகுப்பறையில்....   

ஈஸ்வர அல்லா தேரே நாம்...ன்னு ரேடியோல வாசிச்சது யார்ன்னு இப்போ நினைவில்லை.,..

முதல் வார்த்தையாக “என்ன எல்லாரும் எஸ்ஸே படிச்சுட்டு வந்தாச்சா... பேப்பர் பேனா எடுத்து பெஞ்சுக்கு 3 பேரா உக்காருங்க பார்ப்போம்” –என்று தான் ஒலித்தது,,,

மாமி தயவால் நான் கட கட என எழுதி முடிக்கப்போகும் தருணம்... க்ளாஸே மயான அமைதி எல்லோரும் பேனாவை பேப்பரில் தொட்டுப்பார்ப்பது தீண்டாமை என நினைத்துக்கொண்டு விழிக்கின்றார்கள்... ஒரு சில படிப்ஸ்களைத் தவிர  அவங்களை பத்தி நமக்கென்ன பேச்சு,...


நான்  கிடுகிடுவென்று எழுதி விட்டு கெத்தாக நிமி்ர்ந்தேன். அரையும குறையுமாக எழுதப்பட்டிருந்த ஒவ்வொருவரின் நோட்டுப் புத்தகமாக பார்த்துக் கொண்டு திட்டிக் கொண்டு வந்தவர்,  என் நோட்டைப் பார்த்து விட்டு.

பிள்ளையார் பால் குடிச்சார்ன்றதைக்கூட நம்புவேன்,...நீ இதை எழுதுனியான்னு வெறிச்சுப்பார்ந்த்துட்டு... பொளேர்ன்னு ஒன்னு விட்டார்..

புக்கைப்பார்த்து காப்பி அடிக்கிறியாடா மாடு,,,...ன்னு சொல்லி இருப்பார் போல எனக்கு புக்கை என்று சொன்னதற்கு மேல் எதுவும் கேட்காமல் ஆல் இந்திய ரேடியோவின் ஒயிங்ங்ங்ங்ங்ங்ங்ங்.................சத்தம் மட்டும் தான் கேட்டது...

இல்லசார்ன்னு சொல்ல வாய் திறக்கும் முன் வகுப்பறையே என்னை பார்த்த பார்வை இருக்கே! தத்தா தாச்சா சா இல்ல சார்... படிச்ச்... என்று முழுங்கி துப்ப!

என் கடந்தகால கணித வரலாறை ஒரு வினாடி கண்முன் கொண்டு வந்திருந்தேன்... என்ன சொன்னாலும் நம்பபோவதில்லை... ! மனசுக்குள் மாடிவீட்டு மாமாவை தூக்கிப்போட்டு மிதிக்கனும் என்று தோன்றியது..!

போய் அப்படியே போர்டுல எழுது அப்டியே...! என்று என்னை அவமானப்படுத்தும் எண்ணத்தை பகிரங்கமாக வெளியிட்டார்...!

பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு போர்டு அருகே சென்றேன். ”நாற்று நட்டாயா, களை பறித்தாயா, எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா மாமனா மச்சானா மானங்கெட்டவனே” என சிவாஜிகணேஷன் பேசும் வீராவேசத்தோடு மொத்த பேராக்களையும் எழுதித்தள்ளினேன்,
நல்லவேலை அப்போது “காதல் கொண்டேன்” படம் வந்திருக்கவில்லை.,

விளையாடக்கூப்பிட்டப்போ வரமாட்டேன் வரமாட்டேன்னு சொன்னதெல்லாம் இதுக்குத்தானாடா துரோகி என வடக்குத்தெரு  நடேசன் முறைக்கும் பாவனையில் பார்த்தான்.

அன்றைக்கு தேவராஜ் என்ற கணக்கு, ஆங்கில வாத்தி முன்னால் என் பிம்பம் முறிந்து விழுந்தது,,,அதற்கு பின் அவர் என்னை அடித்ததே இல்லை.  ஆனால் காதுக்குள் இன்னும் ஆல் இந்திய ரேடியோ உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......

செய்யாத தப்பிற்கு தண்டனை பெற்ற நான்.... அவரை ஏகத்திமிரோடு பார்க்கலாம்தான் ஆன நாளைக்கு இன்னும் ரெண்டு எஸ்ஸே-வை தலையில் கட்டிட்டாருன்னா என்ற பயத்தினூடே கீழே குனிந்து நின்றேன்... பெல் அடித்தது...

ஒன்பதாம் வகுப்பில் க்ளாஸ் லீடர் என்ற ஒரே காரணத்தால் அக்னிநட்சத்திரம் ரேஞ்சுக்கு ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்ட பிரபு வந்து தோளில் கை போட்டு
[பெயர் பொருத்தம் கார்த்திக் & பிரபு அக்னி நட்சத்திரம் ]

விடு மச்சி... ஆமா எப்டிடா இவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டும் உன்னை தேவராஜ் பொளக்காம விட்டுட்டு போய்ட்டாருன்னு கேட்ட பின் தான் சிரிக்க முடிந்தது,...


- வகுப்பறையிலிருந்து
   புகழேந்தி...

Comments

  1. சிரிக்காம இருக்க முடியல, அதே நேரம் பின்னோரம் பயணிக்காமலும் இருக்க முடியல,
    //நீங்க நினைக்குறதெல்லாம் நடக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ் ,,,, // அப்படி என்ன நினச்சுட்டோமாம்?
    /விடுவாரா... தேவராஜும் அவர் பங்குக்கு எனக்காக தன் எனர்ஜிகளைச் செலவிட்டு என்னை வீங்க வைத்துப்பார்த்தார். // ஹஹா நச்சு
    //இங்க்லீஷும் கணக்கும் என்னை துவைத்து காயப்போட்டு உஜாலாவில் முக்கியது... // ஏன் வெள்ளாவி பானை என்னாச்சு?
    //போய் அப்படியே போர்டுல எழுது அப்டியே...! என்று என்னை அவமானப்படுத்தும் எண்ணத்தை பகிரங்கமாக வெளியிட்டார்...!
    // ஒரு சோக கீதம் ப்ளீஸ் .......... தென்பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலே, மான் போல வந்தவனே, யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ............
    //நாளைக்கு இன்னும் ரெண்டு எஸ்ஸே-வை தலையில் கட்டிட்டாருன்னா என்ற பயத்தினூடே கீழே குனிந்து நின்றேன்// ஹஹா
    ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹா

    ReplyDelete
    Replies
    1. நல்லா ரசிச்சு படிச்சிருக்கீங்க அம்மணி நன்றி! ஒரு பதிவுலக பிரபலம் இந்த வலைக்கு வந்தமைக்கு நன்றி

      Delete
  2. என் பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வந்தது! 9ஆம் வகுப்பில் ஓர் கணித ஆசிரியர் இப்படித்தான் சொல்லிக்கொடுப்பது ஒன்றும் புரியாது. ஆனால் பாவம் அடிக்க மாட்டார். அந்தவருடம் நான் அவுட்! அடுத்த வருடம் அவரில்லை வெறொருவர் வந்தார். பாண்டியன் என்று பெயர் பல் எடுப்பாய் இருப்பதால் பல் பாண்டி என்று பட்டப்பெயரெல்லாம் உண்டு. அவரிடம் வாங்கிய அடி மறக்க முடியாது. ஆனால் கணக்கில் என்னைத் தேற்றிவிட்டார். அதனால்தான் என்னால் கணக்கில் நான் மார்க் எடுக்காவிட்டாலும் நூற்றுக்கு நூறு எடுக்கும் சில மாணவர்களை உருவாக்க முடிந்தது. மிக சுவாரஸ்யமான எழுத்து நடை! ரசித்து படித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா என்று கேட்டு ஒரு பதிவு எழுதி இருந்தேன் செய்யாதகுற்றங்கள் என்னும் தலைப்பு இங்கு இழுத்து வந்தது பள்ளிக்கூட நினைவுகள் சுகமானவையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil