இன்றைய செய்திகள் ... அனைத்தும் நிஜம் தானா?


இன்றைய நவீன உலகின் மிகப்பெரிய அபாயம். செய்திச் சானல்கள் என்றால் நிச்சயமான உண்மையும் அதுவே!
24 மணி நேரமும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் மிகுந்த தீனி இவர்களுக்கு தேவை. 


நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டு செய்தித் தொலைக்காட்சிகளை விட தினசரிச் செய்திகள் பெரும்பாலும் குறைவானைவையாய இருக்கும் என்றே!
பழைய நகைச்சுவை ஒன்று உண்டு. செய்தியே இல்லாமல் போனால் செய்தித்தாள்களில் என்ன செய்தி வரும்?


அதற்கென்ன பேஷா போச்சு.. இன்று திருநெல்வேலியில் எந்த செய்தியுமே இல்லை! கடந்த நூற்றாண்டுகளில் இதுபோல நிகழ்வுகள் ஏதும் நடந்ததே இல்லை. அதேபோல திருநள்ளாறிலும் செய்திகளே இல்லை.....ன்னு அதையே செய்தி ஆக்கி விடுவார்கள்! என்பதாக அந்த நகைச்சுவையின் அர்த்தம் இருக்கும்.


யதார்த்தத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்படியான சுவாரஸ்யங்கள் நிகழ்வதில்லை. ஆகவே இந்த செய்திச்சானல்கள் தங்களுடைய மாஸ்டர் மூளையைப் பயன்படுத்தி ஒரு செயற்கையான பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.


அது, மத்திய பிரதேசத்தின் சிறு கிராமத்தில் ஒரு சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்துவிட்ட செய்தியாக இருக்கும்.  கிணற்றை சுற்றி பதினைந்து லைவ் வாகனங்கள் நின்றுகொண்டு, ஒவ்வொரு டி.வி. ஸ்டுடியோவிலும் இரண்டிரண்டு பேர் அமர்ந்துகொண்டு… 


தங்கள் முகங்களை மிகுந்த பதற்றத்துடன் மெயின்டெய்ன் செய்து… புலியை காப்பாற்றவில்லை என்றால் நாளை அமேரிக்கா நம் மீது அணுகுண்டு வீசினாலும் வீசலாம்!? என்பதுபோல அவர்களது பரபரப்பு நடிகர் திலகங்களையே தூக்கிச்சாப்பிட்டு விடும்.
ஒரு சராசரி மனிதனை ஒரு தனியறைக்குள் பூட்டி, தொடர்ந்து ஒரு வாரத்துக்கு குறிப்பிட்ட சில செய்தி தொலைகாட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் அவர் நாடே கடும் பதற்றத்தில் பற்றி எரிவதாகவும் மக்கள் எல்லோரும் தீவிரவாதிகள் ஆகிவிட்டதைப்போலும் தான் நினைத்துக் கொள்வார்.


அந்த அளவுக்கு இந்த செய்தி தொலைகாட்சிகள், ஒட்டுமொத்த தேசமும் பதற்ற நிலையில் இருப்பதை போல செயற்கையான தோற்றத்தை உண்டு பண்ணுகின்றன.


டைம்ஸ் நவ்வில் அருணாகோஸ்சுவாமியும், சி.என்.என்.ஐ.பி.என்’னில் ராஜ்தீப் சர்தேசாயும் கொடுக்கும் சவுண்டுக்கு இந்நேரம் புரட்சிப்படைகளால் தேசம் துண்டாடப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால் இவர்கள் மக்களின் நலனில் இருந்து அல்லாமல் ஒரு சண்டை படத்தின் விறுவிறுப்புடன் மட்டுமே செய்திகளை வழங்குகின்றனர்.

ஆகவே இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு அது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது.

அதனால்தான் கூடங்குளம் லைவ் காட்சிகளின் விளம்பர இடைவேளையில் “உலகத்தரம் மிக்க டி.எம்.டி கம்பிகள் அக்னி ஸ்டீல் முறுக்கு கம்பிகள் என முறுக்கிக்கொள்ள முடிகிறது. 


இவர்களின்  மேன்மை குறித்து முரண்படாமல் சுவாரஸ்ய மனப்பான்மையை வலுக்கட்டாயமாக நாமும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாகி விடுகிறது.

ஊடகங்கள் எல்லாம் முதலாளித்துவங்களின் கைக்கோல்களாகிப்போன காலமிது! சகோதரா! வினவு செய்!


-புகழேந்தி.ஐ

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil