கெட்டிமேளம் கெட்டி மேளம்

இதுவரைக்கும் ஒரு போட்டோவையும் பார்க்காமலே புடிக்கலைன்னு சொல்லிகிட்டு இருந்தவன் இன்னைக்கு சரின்னு ஒத்துகிட்டான்னா பாரேன்.

இதோட பத்துவாட்டி கேட்டுட்டாங்க பொண்ணுகிட்ட கேட்டுட்டியாம்மா! புடிச்சிருக்குன்னு அதுவே சொன்னிச்சான்னு ஆமாடா ஆமாடான்னு சொல்லி எனக்கு வாய்தான் வலிக்கலை.. சீக்கிரம் அந்த பொண்ணுவீட்டுக்காரங்கட்ட பேசுங்களேன்.. நல்ல நாள் பார்த்து போய் பூ வைச்சுட்டு வந்துடலாம்
***
என்ன மச்சான் இந்நேரத்தில் போன் .

என்னடா பண்ணிட்டு இருக்கே.. உனக்கு ஒரு மெஸேஜ் வந்திருக்கும் பாரு
எதுல ! இரு பார்க்கிறேன் “பூவே பூச்சூடவா “ என்னடா அது பூவே பூச்சூடவா! 

நீயே கண்டுபிடி டொக்.

இவன் யார்ர்ரா இவன் இன்னேரத்தில் தூங்கிட்டு இருக்குறவனை எழுப்பி மெஸேஜ் பார்க்கச் சொல்லிட்டு போனை வைச்சுட்டான். ட்விஸ்ட்  வைக்குறான்.
***
சரவணா !
ஜகதீஷ் எதோ மெஸேஜ் அனுப்பி இருக்காண்டா.,.. என்னவாம் கேட்டா சொல்ல மாட்றான்.

எனக்கும் வந்திருக்கு மாமா! “பூவே பூச்சூடவா தானே”

உனக்குமா! என்னவோ மேட்டர் போல

இரு புடிப்போம் சங்கதியை
***
சரவணா ஜகதீஷ் அண்ணா எதோ மெஸேஜ் பண்ணி இருக்காரு

உனக்குமா!

ஐ திங் அவருக்கு பொண்ணுபார்த்துட்டாங்கன்னு நினைக்குறேன்

அட ஆமா! பேச்சுவார்த்தை போய்ட்டு இருந்தது! ஓ…அதான் ஊருக்குப் போறேன்னு சொன்னானா! பாவி இதை ஸ்ட்ரெய்ட்டா சொல்லமாட்டாராமா இரு அவன….

***
ஜகதீசுக்கு பொண்ணு பார்த்துட்டாங்கைய்யா மாம்ஸ்.

நினைச்சேன்.. அதான் பயபுள்ள முறுக்குசுத்துதா விசயத்தைக் கேட்டா

ம்ம்ம் ..இப்போதான் பேசினேன். குனியுறான் நிமுறுறான்.. குத்தவைக்குறான் ஒரு பொஷிசன்லயே இல்ல.. பையன் செம லவ் மூட்ல இருக்கான்.. கான்ஃப்ரன்ஸ் போட்டு கலாய்ப்போமா

டேய் பாவம்டா… அவனாச்சும் சந்தோசமா டூயட் பாடட்டும்..

எங்க....இப்போதைக்கு சோலோ சாங் மட்டும் தான்
***
ட்ரெய்ன் டிக்கெட்லாம் போட்டாச்சு ! நீங்க கிளம்பி வாங்க முதல்ல வீட்டுக்கு வாங்க…அண்ணி! எல்லாரும் எக்மோர்ல இருந்தது போய்டலாம்

சரிங்க தம்பி!  இந்தாங்க உங்க அண்ணன் கிட்ட குடுக்குறேன்,

யாரு..

உங்க தம்பிதான். 
ஞாயிற்றுக்கிழமை பொண்ணுபார்க்க திருநெல்வேலி போகனும்ல அதான் சனிக்கிழமை டிக்கெட் போட்டாராம். வீட்டுக்கு வந்திட்டா எல்லாரும் ஒன்னா போய்டலாம்ன்னு சொல்றாரு.. 

போனைக்குடு

இந்தாங்க 
***
என்னடா! உனக்கு பிடிச்சுருக்கா?.

அதான் போறோம்ல போய் பார்ப்போம்.

சரி மத்தவங்க என்ன சொன்னாலும் கண்டுக்காத உன் மனசு சரின்னு சொன்னா உன் வழில போ!

ஹே! என்னப்பா அட்வைஸெல்லாம் பலமா இருக்கு!

அண்ணன்னா அப்படித்தான் இருக்கனும்., கூட ஃப்ரெண்ட்ஸ் யாரும் வராங்களா!

தெரிலயே! வந்தா ஓவரா கலாய்ப்பானுங்க! நல்லாதான் இருக்கும் கேட்டுப் பார்க்குறேன்.

***
எந்த ஸ்டேஷன் இது! திருநெல்வேலி இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்.

விருது நகர். எட்டேமுக்கால் ஷார்ப்பா.. திருநெல்வேலி போய்டும்

எங்க பங்குனி உத்திரத்துக்கு போய்ட்டு இருக்கீங்களா!

என் ரெண்டாவது பையனுக்கு பொண்ணு பார்க்கப் போய்ட்டு இருக்கோம்
அப்படியா ! நல்லது நல்லது.. நல்லபடியா அமையட்டும். பொண்ணு எந்த ஊரு ?
சேரன்மாதேவி பக்கம்ங்க!
நமக்கு பத்தமடைதான் ஊரு.. 
அங்கிருந்து பக்கம் தானே பொண்ணு ஊரு.. 

***
நீ தூங்கலையா…

நீங்க தூங்குங்க..தலைவரே! எங்களுக்குத் தெரியும்.

என்னம்மோ சரியில்லடா! ரெண்டுநாளா ஒரு மப்பாதான் திரியுற..

 ஹே போப்பா! போன் பேசிட்டு இருக்கோமுல்ல.. 

ஆடாதீங்கடா.. நாங்களும் இந்த ஆட்டம்லாம் போட்டவங்கதான். 

உம்பையன் அழுறான் பாரு! ஓவரா ஓட்டக்கூடாது

***
(”ஒத்த பார்வை பார்த்தா மனசுல சக்தி ஏறுதாத்தா”…காலர் ட்யூன்.)

என்ன மச்சான் மிட்நைட் ரெண்டு மணிக்கு பர்ஸ்ட் ரிங்லயே அட்டண்ட் பண்ற…

தூங்கிட்டு இருந்தேன். போனடிச்சதும் எடுத்தேன்.

குரலைக்கேட்டா அப்படி தெரியலையே… சரி ஊருக்கு போறேன்னியே.. கிளம்பிட்டியே..

ம்ம்ம் ..இந்தா போய்ட்டு இருக்கேன்.

சரி மச்சான் ..அதான் கேட்க தான் போன் பண்ணேன்.

ம்ம் வேறென்ன…

பார்யா! போன் எடுக்கமாட்டேன்னு நினைச்சா எடுத்ததும் இல்லாம வேறென்னன்ன்றான் என்ன மச்சான்… ரொமாண்டிக் மூடா..

நீ போனை வைச்சுட்றா சாமி..

ஹஹ சரி சரி கலாய்க்கலை.. எல்லாம் நல்லபடியா அமையும்டா ! சந்தோசமா இரு.. உன் லைஃப்ல நீ இனி எடுக்கப்போற எல்லா டெஷிசனும் வெற்றிதான் பாறேன்,

என்னம்மோ சொல்ற.. என்ன சொல்றன்னுதான் புரியல ஹஹ..

ஹஹ...அதுசரி புது மாப்பிள்ளை ஆகிட்ட! இனி உனக்கு எங்க பேச்செல்லாம் புரியவாப்போகுது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போ மச்சான், உன் நல்ல மனசுக்கு எல்லாமே ஜெயம் தான். முதல் பால்லயே சிக்ஸர் தான் பாரேன். 
***
(அறை எண் 111*)
***
என்னப்பா கிளம்பலையா யாரும்.

காலையில் ஆறுமணில இருந்தது இவன் இம்சைத் தாங்கல..டேய் மணி எட்டுதாண்டா ஆகுது… பதினோரு மணிக்குமேலதான் பொண்ணுபார்க்க வரோம்ன்னு சொல்லிருக்கோம்.

கொழுந்தனாரே ரொம்ப அவசரமோ..பொண்ணை யாரும் தூக்கிட்டுப் போகமாட்டாங்க கொஞ்சம் பொறுங்க.

யே! அதுக்கு சொல்லலப்பா.. பங்குனி உத்திரம் அவசரத்துக்கு வண்டி கிடைக்காது

அதெல்லாம் காலையிலே உங்கண்ணன் போய் வண்டி புக் பண்ணிட்டு வந்துட்டாண்டா.. நீ போய் குளிச்சு ரெடியாகு..

அத்த இத்தோட நாலாவது தடவை குளிச்சுட்டாரு உங்க சின்ன மகன்.

ஆளாளுக்கு என் தம்பியை கிண்டல் பண்ணாதீங்கப்பா… அதான் நான் இருக்கேன்ல

போங்கைய்யா
***
ஜெகதீசு..
என்னப்பா!
இங்க வாய்யா…
சொல்லுப்பா..
இந்தா பேராச்சிசெல்வியம்மன் கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன் . விபூதி எடுத்துக்க..
பூசிவிடுங்க..

அப்பாமேல கோவமாடா..

அதெல்லாம் இல்லையே யார் சொன்னா.,,

எங்கப்போனாலும் சின்னவனுக்கு எப்போ கல்யாணம்ன்னு கேட்குறவங்ககிட்ட பதில் சொல்லி முடியலடா…அதான் தீவிரமா பொண்ணுபார்க்க ஆரம்பிச்சுட்டேன். உன் பேச்சையும் மீறி…

இப்போ எதுக்கு இதெல்லாம் பேசிகிட்டு,,

ஆனா! உன் மனசுக்கு விரும்பாத எதையும் அப்பா செய்யமாட்டேன்னு நீ நம்பனும். நம்ம வீட்டில் ஒரு நல்லகாரியத்தை நடத்தி எல்லார் முகத்திலும் சந்தோஷத்தை நீதான் மீட்டுக் கொண்டுவரப்போற! அம்மா சொன்னா… பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டே இருந்தேன்னு.. அவங்க வீட்டில் எல்லோருக்கும் பரிபூரண சம்மதம். பொண்ணுக்கும் தான். பொண்ணு நல்ல குணம். பெரிய குடும்பம். உனக்கு ஒன்னுன்னா சொந்த பந்தங்க சூழ்ந்து வந்து நிப்பாங்க. அப்பா நல்லதுதான் செய்வேன் என் புள்ளைக்கு..

சரி வாங்க வண்டி வந்துட்டு கிளம்புங்க மணி ஆகிடுச்சு.
***
அப்பாவும் புள்ளையும் கொஞ்சிகிறாங்க டோய்!

ஏங்க சும்மா இருங்க… என் கொழுந்தனார் வாய் மலர்ந்து பேசுறதே எப்பவாச்சும் தான் .

உன் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் சொன்னியாடா.. ஒருத்தரையும் கூட்டி வரலையா கூட.. பொண்ணுக்கு காலேஜ் ப்ரெண்ட்ஸ்லாம் இருக்காங்கன்னு சொல்லி இருக்க மாட்ட அதான் வரலை போல.. ஹஹ

ஏப்பா! சாமி கிளம்பி நேரமாச்சு.. மணி பத்தரை ஆகுது.

எனக்கு பொண்ணு பார்க்கும் போது கூட இவன் இவ்ளோ பஞ்சுவாலிட்டியா இல்லையே!

உனக்கு பொண்ணு பார்க்கும் போது நீ எப்படி குதிச்சேன்னு எங்களுக்குத் தானே தெரியும் பெருமாளு... 

ஏங்க... ஏன்,,ஏன்,..தேவையா இதெல்லாம் உங்களுக்கு..

சரி சரி நான் கீழ நிக்கேன். எல்லாரும் தட்டுமுட்டுசாமானோட வண்டிக்கு வாங்க,.,, மாப்ளே! போலாமா! ;)
***
நம்ம நேரத்துக்குத்தான் இந்த ட்ரெய்னும் வரணுமாப்பா! என்ன வண்டிண்ணே இது.. 

டவேரா செவர்லட்... 

அட எங்க போற ட்ரெய்ன்னு கேட்டேன். 

அதுவா அது திருச்சந்தூர்போற ட்ரெய்னா இருக்கும் தம்பி.

எப்பத்தான் திறப்பாங்க கேட்ட?!ஹ்ம்ம் 

ரெண்டு நிமிஷம் பொறுக்க மாட்றானே என் தம்பியா இது! இவ்ளோ நாள் கேட்டதுக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிக்கிட்டுருந்த அப்பாவியா இது!

எப்பா சாமி! ஆளைவிடு
***
இந்த வண்டி ஹைவேலயும் இதே ஸ்பீட்ல தான் போகுமா..

சேரன்மாதேவிக்கு ஏன் சார் ஹைவேல போனும்..நாம மேலப்பாளையம் வழியா போய்டலாம்.

ம்க்கும்… சரி கொஞ்சம் சீக்கிரம் போங்க

அவரை ஏண்டா தொணத் தொணன்னுகிட்டு நீங்க பார்த்து ஓட்டுங்க ட்ரைவரண்ணே.. வழில கோவில் இருந்தா நிப்பாட்டுங்க தேங்காபழம் உடைச்சுட்டு போலாம்.
***
இங்க இருந்தது பொண்ணுவீட்டுக்கு எப்படிபோனும்

போனடிச்சு கேக்குறியா வேணும்ன்னா பொண்ணுகிட்டே..

எப்பா சாமி இனி எதாச்சும் பேசினா என்னை என்னான்னு கேளு

ரெண்டுபேரும் சும்மா இருங்க முதல்ல… “ஹலோ..
”ஆங்க் நாங்க பஸ் ஸ்டாண்ட் கிட்ட வந்துட்டோம்”
“ஆமா லெப்ட்ல ஒரு ரோடு போகுது”
“சரி சரி அங்கிருந்து”
“ஓ… மூணாவது கட்டா …சரி..சரிங்க வந்துட்றோம்…நல்லது நல்லது”
அந்த ஆலமரத்துக்கு பக்கத்துல லெப்ட்ல போங்க தம்பி
***
வாங்க ..வாங்க

நான் இல்லீங்க இவர்தான் மாப்பிள்ளை..

கேட்டாங்களா அவங்க.. (கிசுகிசுகுரலில்…. )

எங்களுக்குத் தெரியும் நாங்கதான் போட்டோல பார்த்துட்டோம்ல..
ஆரத்தில காசு போடனும்.. மோதிரம் …செயினுல்லாம் கூட போடலாம்..
ஆஹா..வந்ததுமே வசூல் பண்றீங்களே..
***
நல்ல காரியமெல்லாம் பேசி முடிச்சாச்சு பொண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் பூ வைக்கச் சொல்லிடலாம்.

இப்படி பூஜை ரூம் பார்த்து உட்காருங்க. நீ
யும் இப்படி உட்காரம்மா..

சாமியை நல்லா கும்டிச்சுக்கோங்க .. 
மாப்பிள்ளைக்கு தங்கச்சி இங்க வாம்மா.. பொண்ணுக்கு இந்த மாலையை போட்டு சந்தனம் வைச்சு விடும்மா.. நீ
ங்க அண்ணன் வீட்டம்மாவா வாங்க நீங்களும் பூவைங்க..

பொண்ணோட தம்பி மாப்பிள்ளைக்கு இந்த மாலையைப் போடுங்க.எங்க ரெண்டுபேரும். அப்படியே பெரியவங்க எல்லாம் வந்து திருநீர் வைச்சு வாழ்த்துங்க.

மாப்பிள்ளைக்கு தங்கச்சி பொண்ணு கழுத்தில் இந்த மாலையைப் போட்டு ஜெகதீசு பொண்டாட்டி..ஜெகதீசு பொண்டாட்டின்னு மூனுதரம் சொல்லும்மா,,, 

ஜெகதீசு பொண்டாட்டி..ஜெகதீசு பொண்டாட்டி..ஜெகதீசு பொண்டாட்டி..
***
காபி எடுத்துக்கங்க..
இவங்கதான் பொண்ணா!
ஏன் போட்டோல பார்க்கலையா
கொஞ்சம் மங்கலா தான் இருந்தது… போட்டோ நேர்ல அழகா இருக்காங்க..

மாப்பிள்ளை ஏன் பேசவே மாட்றார்..
கூச்ச சுபாவம் என்னை மாதிரியே இல்லடா!

நீ வீட்டுக்கு வாய்யா! அதெல்லாம் இல்லைங்க பொண்ணுகூடதான் பேசமாட்றாங்க நான் ஏதும் சொன்னனா!

எங்கக்கா! இன்னைக்கு மௌன விரதம் யார்கிட்டேயும் பேசமாட்டாங்க

 “ஹாஹாஹா”

***
என்ன தம்பி தனியா பொண்ணுகூடல்லாம் பேசலையா! இந்த அண்ணனை மாதிரி அவசரப்பட்றாதடா
இருய்யா! போட்டுகுடுக்குறேன்.
அடப்பாவி!  உனக்குப்போய் நல்லது பண்ணனும்ன்னு நினைச்சேன் பாரு என்ன சொல்லனும்., சரி போ போய் பேசிட்டு வா! நான் வேணும்ன்னா சத்தமா எல்லார்க்கும் கேட்குறமாதிரி சொல்லிடவா!

ஏன்யா இப்படி! உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன். வேணும்ன்னா யாருக்கும் கேட்காத மாதிரி சொல்லு..

பார்ரா! (சத்தமாக..) ங்க இந்த பொண்ணு மாப்பிள்ளைலாம் தனியா பேச எப்போ விடுவீங்க.. :p
***
போட்டோ பார்த்ததும் புடிச்சிருந்ததா?
ம்ம்
அதெப்படி பார்த்ததும் புடிச்சுட்டா
ம்ம்
ம்ம்..லாம் சொல்லாதீங்க.. வாயைத்திறந்து சொல்லுங்க?

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு.
***
ஹாஹா! உங்க கையலே செஞ்ச சிப்ஸாமே.. அது நல்லா இருந்தது.
தேங்ஸ்.
அதென்ன தீக்குச்சியிலே வீடு... நீங்க செஞ்சதா! 
ம்ம்
நல்லா இருக்கு
தேங்க்ஸ்
மணிரத்னம் படம் ரொம்ப புடிக்குமோ
புரியல.. 
இல்ல ஒவ்வொரு வார்த்தையா பேசுறீங்களேன்னு கேட்டேன்.

சிரிச்சுட்டேன்,

ஹஹா..சரி சரி நிறைய பேசினா.. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் கதையா எழுதி கொன்னுடுவான்.. நாம அப்புறம் போன்ல பேசிக்கலாம். :உங்ககிட்ட போன்  இருக்கா.. 

***
மாம்ஸ் இன்னைக்கு ஜகதீஷ் பொண்ணு பார்க்கப் போயிருக்கான் போனைப் போட்டு கலாய்ப்போமா..

அவன் போனை அட்டண்ட் பண்ணிட்டான்னா நான் மொட்டை அடிச்சுக்குறேன்டா! 

ஏன் வெயில் ஜாஸ்தியா! அட அவன் எடுக்க மாட்டான்னு தெரியும். அதுக்காகல்லாம் அப்படியே விடமுடியாது எல்லா திசையிலிருந்தும் அட்டாக் பண்ணுவோம். 

அவன் யார்ரா நம்ம பைய்யன் .. 

போனா போட்டு பிசியா இருக்கும் தொழிலதிபர்ன்னு இந்த உலகத்துக்கு காட்டுவோம்.
அப்போ எல்லாருக்கும் மெஸேஜ் தட்டிவிடு.. 

Guys...keep calling..to Jagath Phone Number.
He is in a very Important Meeting. LolZ

***
என்னடா இது ரிங் ஆகும் முன்னே கட் பண்றான்.

நம்ம அட்டாக் அப்படி ஹஹ.. 

பொண்ணு பார்த்த அன்னைக்கே போனைப் பார்க்காமல் நண்பனோட கால் கட் பண்ணும் ஃப்ரெண்டு ஒருத்தன் நமக்கு இருக்கான்னு
வரலாறு சொல்லும் ...  ஃப்ரீயாவிடு மாம்ஸ்

சென்னை பக்கம் வரட்டும் பேசிக்குவோம்.,.
***
ஜெகதீஸ் சென்னை வந்துட்டானாம்டா!
அப்படியா அப்போ இரு கான்ஃப்ரன்ஸ் போடுறேன்..
ஹே அட்டன் பண்ணிட்டான்.. கேர்புல்.. 

“ஹலோ”

புது மாப்பிள்ளைக்கு...
ரப்பப்பரே.. 
நல்ல யோகமடா
ரிப்பப்பரி
நல்ல மணமகள் தான் வந்த நேரமடா..

ஆரம்பிச்சுட்டீங்களாய்யா... 

“வாங்க புதுமாப்பிள்ளை.. எப்படி இருக்கீங்க! பொண்ணு என்னா சொல்லுது”

“யோவ்! வந்ததுமே ஓட்டாதீங்கைய்யா! யார்லாம் இருக்கா லைன்ல..”

சரத், தேவி, சரவணா, தரன் நாலு பேரும் லைன்ல இருக்காங்க நீ முதல்ல மேட்டர் சொல்லுடி,..

ஆஹா… ஒன்னு கூடிட்டீங்களாய்யா?!?!?
இனி கல்யாணம் ஆகுறவரைக்கும் உன்னை விட்டு வைப்போம்னா நினைச்சே…
***
கெட்டிமேளம் கெட்டிமேளம் 

-   
- - கார்த்திக், புகழேந்தி.




Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil