Posts

அங்காடித் தெரு

Image
அங்காடித் தெரு ************************ SKDS திருநெல்வேலியிலிருந்து, திசையன்விளையிலிருந்து, சாத்தான்குளத்திலிருந்து மஞ்சள் பைகளோடு மற்ற மாவட்டங்களில் வியாபார நிறுவனங்களைத் தொடங்குகிற அண்ணாச்சிகள் நிறைந்த ரங்கநாதன் தெருபோல கோவைக்கும் நிறைய பெரிய வணிகச் சாலைகள் உண்டு. அதில் முக்கியமானது காந்திபுரம்  கிராஸ்கட் சாலை. மேற்கு மாவட்டங்கள் முழுக்க கிளைவிரித்து கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான கிளைகளை விஸ்தரித்திருக்கும் அந்நிறுவனத்தின் கணபதி கிளையில் நான் கணக்காளராக இருந்தேன். அநேகமாக கொங்குக்காரர்கள் யூகித்திருக்கலாம் நான் எந்த நிறுவனத்தைச் சொல்கிறேன் என்று.. இந்த கணக்காளர் வேலை என்பது கணக்கு வழக்குகள் பார்ப்பது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிளையின் நிர்வாக முடிவுகளை எடுக்கக் கூடிய அளவுக்கு கொஞ்சம் பலமான பதவி. 2007-09களின் இறுதிவரைக்கும் இந்த “டான்” பொறுப்பில் நடமாடிக் கொண்டிருந்தேன். விற்பனை, கொள்முதல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டாலும் மற்ற கணக்குவழக்குகளை கையால் எழுதியே சாகடிக்கிற நிறுவனத்தில் மற்றெல்லா கிளைகளுக்கும் ’மின்னணு தரவு செயலாக்கப் பொறுப்பாளர்’ என்று ...

10 புத்தகங்கள்

Image
01, கோபல்ல கிராமம் (1976) கி. ராஜநாராயணன். காலச்சுவடு பதிப்பகம்.   02, கடைத்தெரு கதைகள் ஆ.மாதவன். நற்றிணை பதிப்பகம். 03, வெண்ணிலை (2006) சு.வேணுகோபால் . தமிழினி   பதிப்பகம். 04,கொற்கை(2013) ஜோ டி குருஸ் காலச்சுவடு பதிப்பகம். 05,கூளமாதாரி (2000) பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம். 06, கோவேறு கழுதைகள் (1994) இமையம். க்ரியா பதிப்பகம். 07, சிறகுகள் முறியும் அம்பை. காலச்சுவடு பதிப்பகம். 08, அஞ்சலை கண்மணி குணசேகரன் தமிழினி பதிப்பகம். 09, உப்புவேலி – ராய் மாக்ஸம்.(2015) தமிழில் : சிறில் அலெக்ஸ்  “எழுத்து” 10, மௌனத்தின் சாட்சியங்கள் (2015) சம்சுதீன் ஹீரா பொன்னுலகம் பதிப்பகம்.

ராம் முத்துராம் சினிமாஸ் | Ram Muthuram Cinemas | Tvl

Image
ந ண்பர் வே.ராமசாமி முகநூல் பக்கத்தில் திருநெல்வேலி ராம் தியேட்டர் பத்தின பேட்டியைப் பகிர்ந்திருக்கிறார். அதைப் பார்த்ததுமே ஒருமாதிரி பரவசம். நெ ல்லை சந்திப்பிலிருந்து தச்சநல்லூருக்குப் போகும் பாதையில் உடையார்பட்டி குளத்தாங்கரை முக்கில் நிற்கிறது ராம் முத்துராம் தியேட்டர்ஸ்.ஊருக்குச் செல்கிறபோது பைபாஸ் ரயில்வே பாலத்தில் பேருந்து ஏறுகிறபோதே ராம் தியேட்டரின் கூரையைப் பார்த்துவிட்டால் ஒரு திருப்தி.  “இம்ம்...” இன்னும் கொஞ்ச தூரம்தான் வண்ணாரப்பேட்டைக்கு என்று முதுகில் பையை எடுத்து மாட்டிக்கொள்ளலாம். சிறுசில் ஒரு பத்து இருபது சேக்காளிகளாக படத்துக்குப் போகவேண்டுமென்று முடிவெடுத்ததும் ஒவ்வொருத்தன் சைக்கிள்களாகத் திரட்டுவோம். சைக்கிள் இல்லாதவன் டபிள்ஸ் அடிக்கத் திராணி உள்ளவனோடு கூட்டு சேர்ந்துகொள்வது. முன்னாள் ஒருத்தன் பின்னால் ஒருத்தனாக மூன்று பேர், நான்கு பேராகவெல்லாம் வெக்கு வெக்கு என்று பாளையங்கோட்டையிலிருந்து படம்பார்க்கப் போவோம். டிக்கெட்டுக்கு காசு பார்க்கவே கடுகு டப்பாக்களைக் கலவரப்படுத்த வேண்டிய சூழல் எப்போதாவது ஏற்படும். இல்லை என்றால் படம் பார்க்கவும், பரோட்டாவுக்க...

உப்புவேலி | ராய் மாக்ஸம்

Image
      பா ற்கடலைக் கடைந்தபோது நஞ்சு தோன்றியதாகவும், அந்த ஆலகால விஷத்தை பரமசிவன் விழுங்கியதும் பார்வதி அவர் கழுத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள, பரமனுக்கு நீலகண்டன் என்று பேர் வந்து தாண்டவம் ஆடியதும்  புராணத்தில்   கதையாகச் சொல்வதுண்டு, இதற்கு இன்னொரு மாற்று விளக்கம் ஒன்று வாசித்தேன். பாற்கடலைக் கடைந்தபோது, வெளிப்பட்டது விஷம் அல்ல அது உப்பு என்று. கையிலாயத்தில் கிடைக்காத பொருளும் அதுதானே? பொதுவாகவே மலைப்பாங்கான இடங்களில் உப்பிற்கான ஆதாரங்கள் குறைவு. அங்குள்ள மக்களுக்கும் சரி, விலங்குகளுக்கும் சரி  உப்பு கிடைப்பதில் பெரிய இடர்பாடுகள் உண்டு. கடல்சாரா நிலங்களில் வசிக்கும் காட்டுவிலங்குகளில் யானைகள் தான் உப்புருசி எங்கே கிடைக்கும் என்றுத் தேடியலைந்து உப்புச்சுவையுள்ள மண்ணைக் கண்டுபிடிக்கும். மற்ற விலங்குகள் யானையைப் பின் தொடரும்.   கயிலாய மலையில் வசித்த சிவனுக்கு உப்புச்சத்து குறைவாகவே கிடைத்திருக்கிறது. அதனாலே பாற்கடலைக் கடைந்தெடுத்த  உப்பை அவர் விழுங்க, தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிக்கு உப்பின் சத்துகள் கிடைக்கும் வண்ணமாக பார்வதி ...

அன்னதோர் சொல் : அஸ்தினாபுரம் | ஜோ டி குருஸ்

Image
                வாழ்க்கை அவரவரது போராட்டங்களால் ஆனது. நிரைந்து ததும்புகிற மனத்தோடு வாழ்க்கைப்பாடுகளின் பின்னோக்கிப் பார்க்கிறபோது அத்தனையும் ஊழ் என்று வலியுறுத்துகிறது இந்தப் போர்க்களம். எத்தனையோ இடர்களை சிலுவைகள் போல் சுமந்துகொண்டே வாள்களைச் சுழற்றி முன்னேறுகிறோம். யுத்தத்தின் பெருங்குரல்  உள்ளே கிடந்து அரற்றிக்கொண்டே இருக்கிறதை மறைத்தபடி... அஸ்தினாபுரம் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் நேரடியாக எந்தக் களத்தொடர்பும் இல்லை. ஆனாலும் முழுமொத்தப் பக்கங்களில் உருளும் பகடைகளைக் காண்கிறபோது அஸ்தினாபுரம் என்ற தலைப்பு நிகரற்றதாய் பிணைந்து கொள்கிறது.  கொற்கை நிலத்தில் ஆமந்துறையில் பிறந்து, முதல் மனைவியின் கடூரத்தினால் வாழ்க்கைப் பாதையில் புரட்டியெடுக்கப்பட்ட அமுதனுக்கு, தொண்டை மண்டலத்தில் செம்மாங்குப்பத்தில் வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் இளையவளாகப் பிறந்து, ‘வழக்கு முடியும் வரை நீ யாரென்று யாரும் கேட்டால் வேலைக்காரி என்றுவிடுகிறேன்’ எனச் சொல்லி மாலை மாற்றிக்கொள்ளும் புதுமனைவி ஆனந்தியின் அறிமுகத்தோடு தொடங்குகிறது அத்தினாபுரத்...

ஆரஞ்சுமுட்டாய் நூல் அறிமுகக்கூட்டம் | பொள்ளாச்சி இலக்கியவட்டம்

Image
பொ ள்ளாச்சி வந்திறங்கியபோது மணி ஏழு சுமார் இருந்தது. பூபாலன் ஏற்கனவே அறைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பழைய சுண்ணக் காரை கட்டிடத்தை தெளிவாக சீர்திருத்தி விடுதியாக்கி வைத்திருந்தார்கள். அறையின் குளிர்ச்சியில் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் குளித்து புறப்பட்டு பக்காவாக ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குப் போகிற தொனியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். இந்தமுறை நகரத்தார் சங்கத் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 35வது நிகழ்ச்சி இது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் ஒவ்வொரு மாதமும் சலிக்காமல் மூன்றாண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கீதாபிரகாஷ் என்கிற நடன ஆசிரியை கவிஞராகப் பரிணமிக்கிற நிகழ்வோடு சேர்த்து என்னுடைய புத்தகத்திற்குமான அறிமுகக்கூட்டம் இது. நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போதே பூபாலனிடமும் பிறகு அம்சபிரியா அவர்களிடமும் அட்டண்டன்ஸைப் போட்டுவிட்டு வாகாகக் கிடைத்த சேரில்ப்போய் உட்கார்ந்துகொண்டேன். கவிஞர் ஆன்மன் பக்கத்தில் இருந்தார். கடங்கநேரியானின் சொக்கப்பனை கூட்டத்தில் அவருக்கு என்னைத்...