Posts

Showing posts with the label பாரதி

சுப்பிரமணிய பாரதி - நினைவலைகள்

பாரதி கொஞ்சம் நினைவுகள். *** *** *** வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி... மேற்கண்ட புனைப்பெயர்களுக்குச் சொந்தக்காரன். *** "யாருங்கானம் இந்த பொடியன். பதினோரு வயசு விரல் எழுதினதா இது. சரஸ்வதி தாண்டவம். பாரும் இவன் எங்கேயோ போகப்போறான்." "இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இம்மாணவன் சுப்பிரமணியனுக்கு சரஸ்வதியின் பெயரால் *பாரதி*என பட்டம் சூட்டுகிறேன்." *** "செல்லம்மா என் பிச்சுவாவை எங்கே! பொட்டையும் காணோம்." "இதோ இருக்கிறதே." "கண்ணன் படத்துக்கு கீழிறிந்து ஏன் மாற்றி வைக்கிறாய். காலையில் வணங்கத் தேடுவேன் தெரியாதா. சரி வருகிறேன் தாமதமாகிக் கொண்டிருக்கிறது." "கிழிந்திருக்கிறதே கோட்டு நெஞ்சுப்பக்கம்" "நூல் கொண்டா. தைத்துக்கொள்ள" "வெள்ளைதான் இருக்கிறது" "தைத்துவிட்டு வண்டிமையினைத் தேய்த்துவிட்டால் ஆகிறது" *** "செல்லம்மா வா கடலலைகள் கவிழ்ந்துவிழும் அழகு ர...

என் கவிஞனுக்கு மரணமில்லை - பாரதி நினைவலைகள்.

Image
         அன்னாரை யானை முட்டியது ஜூன் மாதத்தில்.  பிறகு மூன்று மாதம் கழித்தே அவர் மரணம் சம்பவித்தது. இடையே சுதேச மித்ரனில் வேலைக்கும், வெளியூர் பயணங்களுக்கும் சென்று வந்தபடி தான் இருந்தார்.    யானை தாக்கிய பிறகு, புதுச்சேரியிலிருந்த பாரதிதாசனுக்கு அனுப்பிய கடிதத்தில், " தான் உடல் நலம் தேறிவிட்டதாக " பாரதி எழுதவும், "நான் நம்ப மாட்டேன் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்" என்று பாரதிதாசன் பதில் எழுதியிருக்கிறார். அதற்காக, சென்னை பிராட்வே ரத்னா கம்பெனி ஸ்டூடியோவில் 1921ஜூலையில் எடுத்தபடம் தான் முண்டாசு பாரதி.    அதைத்தான் பாரதி தாசனுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்தார்.     1921 செப்டம்பரில் வ.வே.சு ஐயர் ஒரு கட்டுரை எழுதியது தொடர்பாக போலிசாரால் கைது செய்யப்பட, பாரதி உடல்நலமில்லாமல் இருந்த தகவல் அவருக்குக் கிடைத்தது. காவலர்கள் சூழ பாரதி வீட்டுக்கே வந்து  உடல் குணமடைய மருந்து எடுத்துக்கொள்ள அறிவுருத்திச் சென்றார் வ.வே.சு.    அவர் வந்துபோன அதே தினத்தில் கவிஞன் உயிர் நீர்த்துப் போனது.   ...