Posts

ஆரஞ்சு முட்டாய் | இரா.முருகவேள்

Image
                   கார்த்திக் புகழேந்தியின் சிறுகதைத் தொகுப்பான "ஆரஞ்சு மிட்டாய்" -ன் முதல் கதை வெட்டும்பெருமாள். சென்ற நூற்றாண்டின் உக்கிரம் மிகுந்த கிராமப்புற வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது. தோலுரிக்கப் பட்ட மாடுகள் . . . பசி தூக்கமின்றி காட்டில் அலைந்து இந்தப் பாவத்தைச் செய்தவனை வேட்டையாடி கிராம தெய்வமாக உயரும் அநாதைச் சிறுவன் . . .           நான் ஒருவிநாடி அதிர்ந்து போனதென்னவோ உண்மைதான். கேலியும் கிண்டலுமான கார்த்திக் புகழேந்தியின் முகநூல் பதிவுகளைப் பார்த்து, அந்த மாதிரி கதைகளை எதிர்பார்த்திருந்தேன்.           அடுத்தடுத்த கதைகளில் ஒரே கலாட்டா. காதல், வெற்றி தோல்வி, கேலி கிண்டல் என்று ரகளையாக இருக்கின்றன கதைகள். பெரும்பாலான கதைகள் காதலைப் பேசுகின்றன. பெரும்பாலும் தோல்விதான். ஆனால் மனிதர் தோல்வியைக் கொண்டாடும் விதமிருக்கிறதே அங்கே நிற்கிறார் கார்த்திக்.      ...

அண்ணாச்சி | ஃப்ளாஷ்பேக்

Image
            ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் இந்தப்பக்கமாக அண்ணாசாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலையில் இருக்கிறது எங்கள் அண்ணாச்சி டீக்கடை. கோவில்பட்டி பக்கமுள்ள ஊர்க்காரர். நரை விட்ட திருகு மீசையில் ஆஜானுபாகுவாய் இருப்பார். நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் தினமலரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த டீக்கடையில் தான் நானும் கவிமணியும் கதையடித்துக் கொண்டிருப்போம்.       டிசம்பர் மழைக்காலத்தில் நண்பர்கள் இரவில் ஒன்றுகூடுகிற இடமும், அடுத்தநாள் நிவாரண உதவிகளை எந்தப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லலாம் என்று முடிவெடுக்கிற இடமுமாக அண்ணாச்சிக் கடையே இருந்ததால் அவரும் தன்பங்குக்கு எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துகொண்டிருந்தார்.         ஆரஞ்சுமுட்டாய் புத்தக வெளியீடு பற்றிய பேச்சு எழுந்தபோது, வெளியீட்டுவிழாவில் ஊர்ப்பக்கமுள்ள தின்பண்டங்களையும் முட்டாய்களையும் திரட்டிக்கொண்டிருந்தோம். அப்போது, என்னுடைய கருப்பட்டிகாபி ஆசையை அவரிடம் பேச்சுவாக்கில் சொல்லி இருந்தேன். நம்ம ஊர் ருசியில இங்க காபி எங்க...

பரிசல் புத்தக நிலையம் தொடக்க விழா

Image
    எ ல்டாம்ஸ் சாலையில் அரசுப்பள்ளிக்கு எதிர்புறம் இருந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்திற்கு அக்கம்பக்கத்தில் கொஞ்சம் விசாரித்து மாலை ஒரு ஆறுமணிக்கு மேலே போயிருந்தேன். அதற்கும் முன்னே நீதியரசர் சந்துரு மற்றும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருக்கிற வர்களெல்லாம் இணைந்து தொடக்க விழா நிறைவு பெற்றிருந்தது. புறப்படுகிற தருவாயில் இருந்த நண்பர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு உள்ளே நுழைந்து இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கிக் கொண்டேன்.             பல தடைகளுக்குப் பிறகு தன் கையை உயர்த்தி இருக்கிறார் ‘பரிசல்’ செந்தில்நாதன் அண்ணன். சென்னைக்கு வந்தபிறகு நிறைய ஓடியாடி சாடியிருக்கிறேன். அதில் முக்கியமான ஒன்று சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கினது. கோவையில் என்னோடு ஒண்ணுமண்ணாய்ப் புளங்கின தம்பிகளைக் கூடே வைத்துத் தான் அந்தக் கடையை ஆரம்பித்தது. இராப்பகல் உழைப்பிருந்ததாலும், முன்னேறடவேணும் என்ற துடிப்பிருந்ததாலும் ஒன்று இரண்டு என இன்றைக்கு மூன்று கடைகளைத் திறந்து தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.    பரிசல் அண்ணனைச் சந்திக்கிறபோதெல்லாம்...

அகம் புறம் மரம் | குகை.மா.புகழேந்தி

Image
            குகை.மா.புகழேந்தியின் “அகம் புறம் மரம்” கவிதைத் தொகுப்பை அலுவலக நண்பரின் மேசையிலிருந்து எதேச்சையாக எடுத்து வாசிக்கத் துவங்கினேன். கட்டிடங்களுக்குள் உட்கார்ந்து ஒரு காட்டை வாசிக்கிற அனுபவத்தை தந்துபோனது அந்தக் கவிதைகள்.             புதுவீடு கட்டுவதென்று முடிவானபிறகு, புறவாச இரண்டு தென்னம்பிள்ளைகளை நடுவதென்று முடிவானது. பருத்த கன்னுக்கு அண்ணன் பேரும், இளசுக்கு என் பேரும் வைத்து வளர்த்தோம். அத்திவாரம் கல்நிரப்பி, கட்டிடம் எழுந்தபோது அரை ஆள் உயரத்துக்கு மரங்கள் ரெண்டும் கீற்றுவிட்டிருந்தது.  கட்டிட வேலைக்காக கட்டின தொட்டியை அப்படியே பரமாரிக்க ஆரம்பித்ததால் புழங்குகிற தண்ணீரெல்லாம் மடைவழியாக தென்னம்பிள்ளையின் பாத்திக்குப் போய்விடும்.             இந்தப்பக்கம் ரெண்டு மூணு வாழைகள், ஒரு மாங்கன்னு, கீரைச்செடி, பூசணி, முருங்கை என்று வீட்டுக்குத் தேவைப்படும் அத்தனைக் காயும் தோட்டத்திலே விளையத் தொடங்கி...

கண்ணாத்தி

Image
அ ன்னைக்கு கருக்கலில் சொன்ன வார்த்தையில இன்னவரைக்கும் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்ல பார்த்துக்க... பழுது கிழுதுன்னு எதுவும் இல்லாத உங்கன்னத்துக்கு மேல ரெண்டு கண்ணு இருக்குதுபார் அதத்தான் சொல்லுறேன். என்ன கண்ணுட்டீ அது. கூழாங்கல்ல முழுங்கிட்டு,  தொண்டைக்குள்ள தண்ணீய புடிச்சு வச்சுக்கிட்டமாதிரி ஈர கண்ணு. கன்னுக்குட்டிக்கு இருக்கும் பாத்தியா அப்புடி. ஓம் பார்வையில விழாதவரைக்கும் நா பத்திரமாத்தான்டீ இருந்தேன். எப்ப முள்ளுக்காட்டுல சுள்ளி பெறக்க நின்னவள்ட்ட, கொதவள வறண்டுபோச்சி, ஏ புள்ள கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிண்ணி கெடைக்குமான்னு கேட்டனோ அப்ப இருந்து மழ பொத்துக்கிட்டு ஊத்துன கததாம்போ... அடைமழ அன்னைக்கி சாயம் மக்கிப்போன சன்னல் கம்பில வரிசைகட்டி நிக்கும் பாத்தியா நீர்க்குண்டு. அந்தமாதிரி ஒரு பார்வை பார்த்தியே. செத்தேம்....போ ஒரு நெத்திய ஏத்தி, இந்தக் கன்னத்த எக்கி வக்கனமா நீ வீசிவிட்டுப் போற கொளுக்கட்ட பார்வைய ஏஞ்சேக்காளிக்குப் புரிய வைக்கணும்ன்னா ஊருக்கு நடுவாப்புல இருக்கும்  வட்டக்குளத்தில போட்டு வெளாண்ட பரூம் சீனிக் கல்லைத்தான் நான் முங்கித் தேட...

ரோலக்ஸ் வாட்ச் | சரவணன் சந்திரன் | 2ன்ட் இன்னிங்ஸ்

Image
            ச மீபத்தில் ஒரு இரண்டரை அடி உயரக் குதிரைக்குட்டியோடு சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருக்கிற காணொளியினைப் பார்த்தேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக அவர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சந்தோஷித்துக் கொள்கிற காணொளி அது. அதே மாதிரியான உணர்வை ஒரு புத்தகம் வாசிக்கும்போதுகூடப் பெறமுடியும் என்பதை கடைசியாக நேற்றைக்கு மாலையில் வாசித்த “ரோலக்ஸ் வாட்ச்” நாவலின் மூலம் நான் உணர்ந்துகொண்டேன்.              “வெள்ளி முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது”  போஸ்டர் ஒட்டின திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக ப்ரிவ்யூ தியேட்டரில் அமர்ந்து ஒரு ரசிகனாக கைத்தட்டி, விசிலடித்து, ரசித்துப் பார்ப்பதுபோல ஒவ்வொரு படிநிலையாக இந்நாவலை இதுவரைக்கும் இரண்டு முறைப் படித்திருக்கிறேன். “ஐந்து முதலைகளின் கதை” நாவல் வழியாக ரொம்ப சாதாரணமான வாசிக அறிமுகம்தான் சரவணன் சந்திரன் அண்ணனுடன். அவரது முதல் நாவலின் தாக்கத்தில் நண்பர்களிடமெல்லாம் ஐ.மு.கதையினை வாசித்துப் பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்தேன். இந்த இரண்டா...

விருது வாங்கிய பொழுது...

            கடந்த ஞாயிற்றுக்கிழமை நேமத்திற்குச் சென்றிருந்ததாக எழுதி இருந்தேனில்லையா. விசயம் வேறொன்றுமில்லை. வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நிறைய தரப்புகளில் இருந்து உதவிகள் பெற்றுக் கொண்டிருந்தோம். அப்படியாக லதா அருணாச்சலம் அக்கா கைகாட்டியதின் பேரில் அவரது தோழியார் ஒருவரது வீட்டில் போர்வைகளும் கொஞ்சம் துணிமணிகளும் வாங்க நானும் கவிமணியும் நேரில் சென்றிருந்தோம்.             கூடவே, சாப்பாடு பொட்டலம் வாங்க அவகாசமில்லை யாருக்காவது சமைத்துக் கொடுக்க முடியுமென்றால் உதவட்டும் என்று பக்கத்து மளிகையில் ஒரு மூட்டை அரிசியும் வாங்கிக் கொடுத்தார். அவை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அறிமுகமான நண்பர் மனோகர் என்பவரது உதவியுடன் 250பேருக்கு மதிய உணவாகச் சமைத்து வழங்கப்பட்டது. இதெல்லாம் பழங்கதைதான்.             அன்றைக்கு அரிசி உள்பட உதவிகளை வழங்கினவரின் சிநேகிதர் நேமத்தில் மெம்பராக இயங்குபவர் போல. கல்கி மாணவ சேவா சமிதி...